search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணுரிமை காக்கும் திராவிட மாடல் ஆட்சி- திண்டுக்கல் லியோனி புகழாரம்
    X

    தி.மு.க. பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேசிய போது எடுத்த படம்.

    'பெண்ணுரிமை காக்கும் திராவிட மாடல் ஆட்சி'- திண்டுக்கல் லியோனி புகழாரம்

    • தமிழகத்தில் 11 மாநகராட்சியில் பெண்கள் மேயர்களாக உள்ளனர்.
    • ராதாபுரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் வகுப்பறை, வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை என பல்லாயிரம் கோடிக்கான திட்டங்களை 20 மாதங்களில் வழங்கியுள்ளார்.

    வள்ளியூர்:

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை கிழக்கு மாவட்டம் ராதாபுரம் மேற்கு ஒன்றியம் ராதாபுரத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நெல்லை மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட அவைத் தலைவர் ம.கிரகாம்பெல், பேரூர் செயலாளர்கள் ஜான்கென்னடி, சேதுராம லிங்கம், தமிழ் வாணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜாண்ரூபா கிங்ஸ்டன், ராதாபுரம் ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்புத் தலைவர் அனிதாபிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப்பெல்சி வரவேற்று பேசினார். தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாட நூல் கழகதலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்புரையாற்றி 1500 பேருக்கு நலத்திட்ட உதவி களை வழங்கினார்.

    அவர் பேசியதாவது:- பெண்ணுரிமை காக்கின்ற முதல்- அமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திகழ்கிறார். பெண்ணுரிமை காக்கும் திராவிட மாடல் ஆட்சியை முதல்-அமைச்சர் நடத்து கிறார்.

    பெண்களுக்கு உள்ளாட்சியில் 50 சதவிகிதம் வழங்கி உள்ளார். இதனால் தமிழகத்தில் இன்று 11 மாநகராட்சியில் மேயர்களாக பெண்கள் உள்ளனர்.

    மேலும் நமது முதல்- அமைச்சர் ராதாபுரம் தொகுதியில் சர்வதேச தரத்தில் ஒரு விளையாட்ட ரங்கம், ரூ.3 கோடியில் ராதா புரத்தில் மினி ஸ்டேடியம், ரூ.605 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம், ராதா புரத்தில் அனைத்து பள்ளி களுக்கும் ஸ்மார்ட் வகுப்பறை, வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை என பல்லாயிரம் கோடிக்கான திட்டங்களை 20 மாதங்களில் வழங்கியுள்ளார்.

    இவற்றை எல்லாம் ராதா புரம் சட்டப் பேரவை உறுப்பி னரும், சபாநாய கருமான மு.அப்பாவு தனது முயற்சி யால் பெற்றுத் தந்து கொண்டி ருக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ். தங்க பாண்டியன், போர்வெல்கணேசன், ஆரோக்கிய எட்வின், பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவ அய்யப்பன், கனகராஜ், எட்வின் வளனரசு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பாஸ்கர், சாந்திசுயம்புராஜ், சாலமோன் டேவிட், இளைஞரணி ஜாண் ரபீந்தர், திசையன்விளை பேரூராட்சி உறுப்பினர்கள் கண்ணன், நடேஷ் அரவிந்த், ஒன்றியகுழு உறுப்பினர்கள் பரிமளம், நடராஜன், மெர்லின், இசக்கிபாபு, அனிதா ஸ்டெல்லா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், அந்தோணி அருள், முருகேசன், கந்தசாமி, மணி கண்டன், வைகுண்டம் பொன் இசக்கி, கு.முருகன், சாகய பெபின்ராஜ், பஞ்சவர்ணம் ஜெயக்குமார், ஆ.முருகன், வி.எஸ்.முருகன், சூசைரத்தினம், சாந்தா மகேஷ்வரன், ஜேய்கர், ராதிகா சரவணகுமார் மற்றும் கிளை செயலாளர்கள், ஒன்றிய பிரதிநிதி கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கான ஏற்பாடு களை ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி செய்திருத்தார்.

    அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிப்பு

    பணகுடியில் தி.மு.க. சார்பில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் கிரகாம்பெல் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அலங்கரிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    விழாவை முன்னிட்டு பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பணகுடி அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் பணகுடி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, துணைத்தலைவர் சகாய புஷ்பராஜ், வள்ளியூர் ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் எஸ்.ஏ.வி பள்ளி தாளாளர் திவாகரன், மணி, அலீம், ஆனந்தி, ஆசா, ஹரிதாஸ், முத்துராமன், வெள்ளைச்சாமி, மாணிக்கம், அசோக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பங்கு பெற்ற வர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×