search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்ட தீயணைப்பு துறை சார்பில்  தீ தொண்டு நாள் அனுசரிப்பு
    X

    பாளை ஆயுதப்படை சாலையில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்தில் உயிர் நீத்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்ட காட்சி.

    நெல்லை மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு

    • எஸ்.எஸ். 4 கப்பலில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறி 66 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர்.
    • பாளை தீயணைப்பு நிலைய வளாகத்தில் இன்று தீயணைப்பு வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து துக்கத்தை வெளிப்படுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் மாவட்ட அலுவலக வளாகத்தில் தீ தொண்டு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. மும்பை துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எஸ்.எஸ். 4 கப்பலில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டதில் மும்பை தீயணைப்பு துறையை சேர்ந்த 66 தீயணைப்பு வீரர்கள் அதில் பலியாகினர். இவர்கள் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி உயிர்நீத்த வீரர்களை நினைவு கூறும் வகையில், நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தீ தொண்டு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    பாளை தீயணைப்பு நிலைய வளாகத்தில் இன்று தீயணைப்பு வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து துக்கத்தை வெளிப்படுத்தினர். இதையொட்டி, மும்பையில் பலியான 66 தீயணைப்பு வீரர்களின் நினைவாக நினைவு ஸ்தூபி அமை க்கப்பட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில் தமிழக வீரர்கள் 33 போ் உட்பட வீரர்களின் நினைவு தூணில் மலர்வளையம் வைத்து, வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் அனைத்து தீயணைப்பு வீரர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன்பிறகு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் உதவி மாவட்ட அலுவலர் வெட்டும்பெருமாள், நிலைய அலுவலர் ராஜா உட்பட தீயணைப்பு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×