search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரியில் செம்மண் கடத்திய லாரி டிரைவர் கைது
    X

    நாங்குநேரியில் செம்மண் கடத்திய லாரி டிரைவர் கைது

    • நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே வருவாய்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • சோதனையில் அனுமதி இல்லாமல் செம்மண்ணை கடத்தி வந்தது தெரியவந்தது.

    களக்காடு:

    நாங்குநேரி தெற்கு கிராம நிர்வாக அதிகாரி ஜெபஸ்டியன் மற்றும் வருவாய்துறையினர் சம்பவத்தன்று நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அனுமதி இல்லாமல், சட்டவிரோதமாக செம்மண்ணை கடத்தி வந்தது தெரியவந்தது. அப்போது லாரியை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    இதுபற்றி கிராம நிர்வாக அதிகாரி ஜெபஸ்டின், நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் செம்மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தப்பி ஓடிய டிரைவர் பானாங்குளத்தை சேர்ந்த முருகேசன் (வயது 54) என்பது தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    Next Story
    ×