search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Campus Interview"

    • நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான வளாக நேர்காணல் நடைபெற்றது.
    • நேர்காணலில் தேர்ச்சி பெற்ற 44 மாணவிகளுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான வளாக நேர்காணலை ஆரோ லேப் பயிற்சி மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு பிரிவு ஏற்பாடு செய்தது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக மதுரை ஆரோ லேப் பிரிவு மேற்பார்வையாளர் தேவி மற்றும் லைன் இன்சார்ஜ் வனஜா ஆகியோர் அறிமுக உரையாற்றினர்.

    பின்னர் ஆரோ லேப் அனைத்து இறுதி ஆண்டு இளங்கலை மாணவிகளுக்கும் எழுத்து தேர்வை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக விருப்பமுள்ள மாணவிகள் தனிப்பட்ட நேர்காணலில் பங்கேற்றனர். நேர்காணலில் தேர்ச்சி பெற்ற 44 மாணவிகளுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    பயிற்சி, மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு டீன் ரேவதி நன்றி கூறினார். வேலைவாய்ப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மிருணா தேவி, பொருளாதார துறை உதவி பேராசிரியை மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சுடர்வேணி என்ற சுபா, எஸ்.அனு நித்யா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

    • புதுவை ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரியின் இந்த ஆண்டிற்கான மாணவர்களுக்கு வளாக நேர்காணல் புதுவை செண்பகா ஓட்டலில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரியின் இந்த ஆண்டிற்கான மாணவர்களுக்கு வளாக நேர்காணல் புதுவை செண்பகா ஓட்டலில் நடைபெற்றது.

    இதில், கோவை லீ ராயல் மெரிடியன் 5 நட்சத்திர ஒட்டலின் சார்பில் மனிதவள மேலாளர் சுகந்தி கவுதம் மற்றும் உணவு தயாரிப்பு உபசரிப்பு துறை மேலாளர் ரிஷப் சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்தனர்.

    நிகழ்ச்சிக்கு ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர் பூங்குழலி ஸ்ரீதர் மேற்பார்வையில் ஆசிரியர்களும் மாணவர்களும் செய்தி–ருந்தனர்.

    • புதுவை அரியாங்குப்பத்தில் ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது.
    • புதுவை அரியாங்குப்பத்தில் ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தில் ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்தக் கல்லூரியில் இந்த ஆண்டிற்கான மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி வளாக நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுவை அரியாங்குப்பத்தில் ஆதித்யாஸ் ஹோட்டல் மேலாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது.சிறப்பு விருந்தினராக சென்னை தாஜ் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் மனிதவள மேம்பாட்டு துறை மேலாளர் ஜீனு, கே .ஜான் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கான கல்லூரி வளாக நேர்காணலை நடத்தினார். இந்த நேர்காணலில் கலந்து கொண்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பணி ஆணையை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் ஜார்ஜ் தலைமையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர் . முடிவில் பூங்குழலி ஸ்ரீதர் நன்றி கூறினார்.

    ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரியில் வளாக நேர்முகத் தேர்வு நாளை நடக்கிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, அமராவதிபுதூர் ஸ்ரீராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் நாளை (15-ந் தேதி) மற்றும் 16-ந் தேதி ஆகிய 2 நாட்கள் இறுதியாண்டு மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூ நேர்முகத்தேர்வு நடைபெற இருக்கிறது.

    இதில் சென்னையில் இருந்து முன்னனி நிறவனங்கள் பல கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் ரூ. 35000 சம்பளத்தில் பணி நியமனம் செய்ய இருக்கிறார்கள். மேலும் தற்போது இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையும் சிறப்பாக நடைபெறுகிறது.

    இதைப்போன்று வளாகத்தேர்வில் கல்லூரியில் பயின்ற பல மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×