என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லூரியில் வளாக நேர்முகத் தேர்வு
ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரியில் வளாக நேர்முகத் தேர்வு நாளை நடக்கிறது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, அமராவதிபுதூர் ஸ்ரீராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் நாளை (15-ந் தேதி) மற்றும் 16-ந் தேதி ஆகிய 2 நாட்கள் இறுதியாண்டு மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூ நேர்முகத்தேர்வு நடைபெற இருக்கிறது.
இதில் சென்னையில் இருந்து முன்னனி நிறவனங்கள் பல கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் ரூ. 35000 சம்பளத்தில் பணி நியமனம் செய்ய இருக்கிறார்கள். மேலும் தற்போது இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையும் சிறப்பாக நடைபெறுகிறது.
இதைப்போன்று வளாகத்தேர்வில் கல்லூரியில் பயின்ற பல மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Next Story






