என் மலர்
திருநெல்வேலி
- நெல்லை மாநகராட்சி கூட்டம் கடந்த மாதம் நடை பெறவில்லை.
- ரகுமத் நகர் பகுதியில் தண்ணீர் திறக்க ஆளின்றி குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர் கே.ஆர். ராஜூ கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மனு
55-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாநகராட்சி கூட்டம் கடந்த மாதம் நடை பெறவில்லை. இந்த மாதமும் இதுவரை நடைபெற வில்லை. இதனால் மக்கள் குறைகளை மன்ற கூட்டங்களில் பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாத காரணத்தால் ஏராளமான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அடிப்படை தேவையான குடிநீர் சரிவர கிடைக்காததற்கு காரணம் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றாததே காரணம். எனவே உடனடியாக மாநகராட்சி கூட்டத்தை நடத்தி, பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திராவிடர் தமிழர் கட்சி
திராவிடர் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திருகுமரன் கொடுத்த மனுவில், நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விநாயகர் சிலைகளை கரைக்கும் பணியில் தச்சை மண்டலம் வண்ணார்பேட்டை பகுதியில் தூய்மை பணியில் வடிவேல் முருகன் என்பவரை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி உள்ளனர்.
இதனால் அவர் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவரை கட்டாயப்படுத்திய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
சீரான குடிநீர்
5-வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் கொடுத்த மனுவில், எங்கள் வார்டு பகுதியில் சீரான குடிநீர் வழங்கி 1 மாதத்திற்கும் மேலாகிறது. ரகுமத் நகர் பகுதியில் தண்ணீர் திறப்பாளராக பணியாற்றியவர் மாற்றப்பட்டு வேறொருவர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரும் தற்போது மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். இதனால் தண்ணீர் திறக்க ஆளின்றி குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னையில் இருந்து பயணிகளுடன் இயக்கப்பட்ட ரெயில் இரவு 10.40 மணிக்கு நெல்லை வந்து சேர்ந்தது.
- நெல்லை சந்திப்பில் காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது.
நெல்லை:
நெல்லை-சென்னை இடையே 'வந்தே பாரத்' ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
நாளை முதல் இருமார்க்கத்திலும் இயங்கும்
தொடக்க விழாவை யொட்டி சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டது. நேற்று மதியம் சென்னையில் இருந்து நெல்லைக்கு பயணி களுடன் இயக்கப்பட்ட இந்த ரெயில் இரவு 10.40 மணிக்கு நெல்லை வந்து சேர்ந்தது.
செவ்வாய்க்கிழமைகளில் வந்தே பாரத் ரெயில் ஓடாது. அதன்படி இன்று இந்த ரெயில் இயக்கப்பட வில்லை. நாளை (புதன் கிழமை) முதல் இருமார்க் கத்திலும் இந்த ரெயில் சரியான கால அட்ட வணைப்படி இயங்குகிறது.
தீபாவளி முன்பதிவு
அதன்படி நெல்லை சந்திப்பில் இருந்து (வண்டி எண்- 20666) காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து (வண்டி எண்-20665) பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லையை இரவு 10.40 மணிக்கு வந்தடைகிறது.
இந்த ரெயிலுக்கான முன்பதிவு வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை முடிந்து விட்டது. பலர் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இது தவிர தீபாவளி, பொங்கல் பண்டிகை காலத்தில் சென்னையில் இருந்து நெல்லைக்கு வருவதற்கு இப்போதே முன்பதிவு செய்து விட்டதால், இருக்கை கள் நிரம்பி விட்டன. இதன்படி பொங்கலுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 12 மற்றும் 13-ந்தேதிகளில் இருக்கை கள் அனைத்தும் நிரம்பி விட்டது.
அதேபோல் தீபாவளி, பொங்கல் விடுமுறை முடிந்து மறுநாள் நெல்லை யில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான டிக்கெட்டு களும் விற்று தீர்ந்தன.
இந்த ரெயில் இன்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய பிட்லைனில் நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
புதிய நுழைவுவாயில்
நாளை முதல் இரு மார்க்கங்களிலும் இயக்கப் படும் நிலையில், காலை 6 மணிக்குள் வந்தே பாரத் எக்ஸ்பிரசில் ஏற வரும் போது புதிய நுழைவு வாயில் கட்டிடம் அருகே வருமாறு ரெயில்வே அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
புதிய நுழைவு வாயில் பகுதியில் வந்தே பாரத் எக்ஸ்பிரசின் கடைசி பெட்டி நிற்கும் என்பதால், கடைசி நேரத்தில் வரு வோரும், கடைசி பெட்டியில் ஏற வாய்ப்புள்ளது. எனவே பயணிகள் புதிய கட்டிட நுழைவு வாயில் பகுதிக்கு வந்து ஏறிச் செல்ல ரெயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
நாளை, முதல் நாள் பயணம் என்பதால் ரெயில்வே போலீசார் அங்கு கூடுதலாக நிறுத்தப் பட்டு பயணிகளுக்கான சந்தேகங்களை தீர்க்கவும், அவர்களை பாதுகாப்பாக ஏற்றி அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
- வண்ணார்பேட்டையில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.
- ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ படி ரூ.300 வழங்க வேண்டும்.
நெல்லை:
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஓய்வு பெற்றோர் நல சங்கம் நெல்லை கிளை சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள தாமிரபரணி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.
போராட்டத்திற்கு மண்டல தலைவர் தாணு மூர்த்தி தலைமை தாங்கி னார். நிர்வாகிகள் ராமையா பாண்டியன், செல்வராஜ், ராஜன், கிருபாகரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
ஓய்வு பெற்றோர் ஒருங் கிணைப்பு குழுவின் நெல்லை மாவட்ட தலைவர் கோமதிநாயகம் தொடக்க உரையாற்றினார். முத்து கிருஷ்ணன், வெங்கடாசலம், பழனி ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். காமராஜ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ படி ரூ.300 வழங்க வேண்டும், வாரிசு பணி யிடங்களை நிரப்ப வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து ஓய்வு பெற்ற தொழிலா ளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதி யர்கள் 90 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு பஞ்சப்படி உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
- வேலம்மாள் நேற்று மாலை அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.
- மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வேலம்மாள் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
பாளை வி.எம்.சத்திரம் பகுதியில் வசித்து வந்தவர் வேலம்மாள் (வயது63). இவரது கணவர் சண்முகம் நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதையடுத்து அவர் பணியின் போது இறந்ததால் வேலம்மாளுக்கு அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் வேலை கிடைத்தது. அதில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற வேலம்மாள் நேற்று மாலை அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது திருச்செந்தூர் மெயின் ரோட்டை கடக்க முயன்ற அவர் மீது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வேலம்மாள் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் வேலம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பா.ஜனதா கட்சியுடனான அ.தி.மு.க. கூட்டணி நேற்று முறிந்தது.
- தச்சநல்லூரில் பால்கண்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நெல்லை:
பா.ஜனதா கட்சியுடனான அ.தி.மு.க. கூட்டணி நேற்று முறிந்தது. இதனையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா அறிவுறுத்தலின்பேரில் தச்சநல்லூரில் முன்னாள் நெல்லை தொகுதி செயலாளரும், டவுன் கூட்டுறவு நகர வங்கி தலைவருமான பால்கண்ணன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பகுதி செயலாளர் சக்திகுமார், பகுதி துணைச்செயலாளர் பழனி சுப்பையா, சத்ய முருகன், பால்ராஜ், கேபிள் சுப்பையா, கோல்டு கண்ணன், போர்வெல் மணி, வெள்ளரி அய்யப்பன், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் வண்ணார்பேட்டையில் அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை தலைவர் கார்த்திக் தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.
- பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
- ஒரு கல்லூரியில் இருந்து 2 மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் நெல்லை மாவட்ட அளவில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை யொட்டி வருகிற 6-ந்தேதி யும், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி வருகிற 11-ந்தேதியும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள், நெல்லை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
அதன்படி அண்ணா பிறந்த நாள் போட்டிகளாக பள்ளி மாணவர்களுக்கு காஞ்சி தலைவன், அண்ணா வும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாள ராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா என்ற தலைப் பிலும், கல்லூரி மாணவர்க ளுக்கு அண்ணாவும் மேடை பேச்சும், கடமை கண்ணியம், கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டிகள் நடை பெறுகிறது.
இதே போல் பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற்காசியாவின் சாக்கரடீஸ், தன்மான பேரொளி, தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி கள் நடைபெறுகிறது.
மாவட்ட அளவில் நடைபெறும் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றி தழ்கள் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் வழங்க வேண்டும்.
ஒரு கல்லூரியில் இருந்து 2 மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவில் நடை பெறும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கிடை யேயான போட்டியில் வெற்றி பெறுப வர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும் போட்டியில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும்.போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரி யரிடம் பரிந்துரை கடிதம் பெற்று வரவேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு மாணவர் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாக (0462-2502521) தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி அருள் பொது சேவையில் மாணவர்கள் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி முகமது இபாம் 2022-23 -ம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி அருள் கலந்து கொண்டு பொது சேவையில் மாணவர்கள் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழாவை கல்லூரியின் தலைவர் டி.டி.என். லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவர்களுக்கு தூய்மையான உலகை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கினார். கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி முகமது இபாம் 2022-23 -ம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். 2-ம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர் தருண் ஆண்டனி வரவேற்று பேசினார். முதலாம் ஆண்டு மாணவர் குணசீலன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட அதிகாரி செய்திருந்தார்.
- ஏ.டி.எம். எந்திரங்களின் முகப்பு திரைகள் அப்பளம் போல் நொறுங்கின.
- மதுபோதையில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
நெல்லை:
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மற்றும் வி.எம்.சத்திரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் போதை ஆசாமி ஒருவர் கே.டி.சி நகர் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அங்குள்ள ஏ.டி.எம். அறைக்குள் புகுந்த அவர் எந்திரத்தின் முகப்பு ஸ்கிரீனை கல்லால் தாக்கி உடைத்துள்ளார்.
பின்னர் அவர் வி.எம்.சத்திரம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த 2 ஏ.டி.எம். அறைகளிலும் புகுந்து கம்பு மற்றும் கல்லால் தாக்கி சேதப்படுத்தி உள்ளார். இதில் ஏ.டி.எம். எந்திரங்களின் முகப்பு திரைகள் அப்பளம் போல் நொறுங்கின.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் ரோந்து போலீசார் மற்றும் பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அந்த நபர் தன்னிலை மறந்த அளவில் மது குடித்துவிட்டு தள்ளாடியபடி நின்றுள்ளார்.அவரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர்.
அப்போது, அவர் நெல்லையை அடுத்த தாழையூத்து செல்வி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த முத்து(வயது 50) என்பதும், ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்தால் பணத்தை எடுத்து கொள்ளலாம் என்று மதுபோதையில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
- நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டத்தில் நூற்றுக்கு 75 சதவீதம் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
- தமிழகத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் பணிகள் சரியாக நடைபெறவில்லை என்று கூறுவது தவறு.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் தொடர்பான ஆலோசனை கூட்டம் அதிகாரிகளுடன் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் கே.என். நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இன்று நெல்லை மாவட்டத்திற்கு வந்துள்ளேன். தென் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? எந்தெந்த இடங்களில், எந்தெந்த பணிகளை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டத்தில் நூற்றுக்கு 75 சதவீதம் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர கடந்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் பழுதடைந்துள்ளன. அவை புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இது தவிர புதிய மின் மோட்டார்களும் பொருத்தப்பட்டு வருகிறது.
மழை பொய்த்த காலத்தில் குடிதண்ணீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வர ஆலோசனையில் உள்ளது.
காவிரி ஆற்றின் மூலம் ரூ.4,800 கோடி மதிப்பில் திண்டுக்கல், ராமநாதபுரம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
இது தவிர கடலோர மாவட்டங்கள் வழியாக குழாய் பதித்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் பணிகள் சரியாக நடைபெறவில்லை என்று கூறுவது தவறு. மத்திய அரசே இந்த திட்டத்தை தமிழகத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக எனக்கு விருது வழங்கியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி பகுதியான ராதாபுரம் தொகுதியில் ரூ.65 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடங்கி 3 மாதங்கள் முடிவடைந்து விட்டன. இன்னும் 15 மாதங்களில் அந்த பணிகள் முடிவடையும். அதற்கு முன்பாகவே ஒரு மாதத்தில் தற்காலிகமாக வேறு ஒரு திட்டத்தில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த திட்டம் நிறைவேறிய பின்னர் இடையன்குடி, விஜயாபதி, கூடங்குளம் உள்ளிட்ட 11 கிராமங்கள் குடிநீர் வசதி பெறும்.
நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திறப்பு விழா காணப்பட்ட பாளை பல்நோக்கு அரங்கம், பேட்டை சரக்கு முனையம் உள்ளிட்டவை விரைவில் செயல்பட தேவையான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- களக்காடு பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகளை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இருந்து நெல்லை வந்தார்.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்து வரும் உள்ளாட்சித்துறை பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அமைச்சர் கே.என்.நேரு
கூட்டத்தில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கீதாஜீவன் ஆகி யோர் தலைமை தாங்கி பேசினர்.
கூட்டத்தில் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு, குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, இணை மேலாண்மை இயக்குனர் சரவணன், பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண், தனுஷ் குமார் எம்.பி., கலெக்டர்கள் கார்த்திகேயன், செந்தில்ராஜ், துரை ரவிச்சந்திரன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ராஜா, மார்க்கண்டேயன், பழனி நாடார், சண்முகையா, சதன் திருமலை குமார்,
மேயர்கள் சரவணன், ஜெகன் பெரியசாமி, மகேஷ், மாநகராட்சி கமிஷனர்கள் சிவ கிருஷ்ணமூர்த்தி, தினேஷ் குமார், ஆனந்த் மோகன், நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வளர்ச்சி திட்டப்பணிகள்
இதில் நெல்லை, தூத்துக் குடி மாநகராட்சிகள், 3 மாவட்டங்களின் நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகளை அமைச்சர் நேரு, அதிகாரிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி களின் உதவி இயக்குனர், மாநகராட்சிகளின் மண்டல சேர்மன்கள், கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், பேரூ ராட்சி தலைவர்கள், செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இருந்து காரில் இன்று அதிகாலை புறப்பட்டு நெல்லை வந்தார். வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு இன்று காலை வந்த அவருக்கு தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் மாலைராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், விவசாய தொழி லாளர் அணி கணேஷ்குமார் ஆதித்தன், ஒன்றிய செயலாளர் அருள்மணி, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பா ளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, வீரபாண்டியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் நவநீதன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+2
- ஆசிரியர்கள் அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் மதிப்பெண்கள் போட மாட்டோம் என்று மிரட்டி வருகின்றனர்.
- கீழதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் வேலை சரியாக வழங்கப்பட வில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தச்சநல்லூர் கரையிருப்பு அய்யாசாமி பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மாணவன் மீது தாக்குதல்
எனது குழந்தைகள் தச்சநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். எனது மகன் 8-ம் வகுப்பு படிக்கிறான். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அந்த பள்ளியில் படிக்கும் குழந்தை களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும், மன உளைச்சலை ஏற்படுத்தியும், தேர்வில் மதிப்பெண்கள் போட மாட்டோம் என்று மிரட்டியும் வருகின்றனர்.
கடந்த 8-ந்தேதி எனது மகனை அந்த பள்ளி ஆசிரியர் புத்தகத்தை கொண்டு தாக்கியதில் அவனது காதில் வலி ஏற்பட்டு காயம் இருந்து வருகிறது. இது தொடர்பாக எனது மகன் எங்களிடம் வந்து தெரிவித்த போது நாங்கள் தட்டி கேட்கின்றோம் என்றோம்.
அப்போது அவன், தட்டிக் கேட்டால் ஆசிரியர்கள் பெயில் ஆக்கி விடுவார்கள் என்று மிரட்டியதாக தெரிவித்தான். விசாரித்து பார்த்ததில் அந்த பள்ளியில் ஏராள மான மாணவர்களை ஆசிரியர்கள் இதுபோன்று நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. எனவே அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறி இருந்தனர்.
மணல் திருட்டு
களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் முத்துவளவன் தலைமையில் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
களக்காடு பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற ங்களுக்கு உட்பட்ட கிராம ங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கீழதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் வேலை சரியாக வழங்கப்பட வில்லை. இந்த பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
ஆனால் இங்கு சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த பகுதியில் குடிநீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. இங்குள்ள பச்சையாற்றின் படுகையில் மணல் திருட்டு தாராளமாக நடைபெறுகிறது. மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடி க்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
- தொழிற்பேட்டையில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
- பீக் ஹவர்ஸ் நேரங்களில் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது
நெல்லை:
தமிழகம் முழுவதும் நிலை மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி சிறு,குறு தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம்
நெல்லை மாவட்டத்தில் பேட்டை தொழிற்பேட்டை யில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் 200 சிறு,குறு தொழிற்சாலைகள் இயங்க வில்லை. இதனால் சுமார் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட சிறு,குறு தொழிற்சங்க துணைத் தலைவர் சுந்தரேசன் கூறும்போது, கடந்த ஆண்டை விட தற்போது நிலை கட்டணம் 410 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் ' பீக் ஹவர்ஸ்' நேரங்களில் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் எங்களது வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
திரும்ப பெற வேண்டும்
நிலை கட்டணத்தை திருப்பபெறகோரி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 3 லட்சம் தொழிளார்கள் பாதிக்கப்பட்டுள்னர் என்றார்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் 500 சிறு,குறு தொழிற்சாலைகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கும் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப் பட்டுள்ளது.






