search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜனதாவுடன் கூட்டணி முறிவு-நெல்லையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
    X

    பா.ஜனதாவுடன் கூட்டணி முறிவு-நெல்லையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

    • பா.ஜனதா கட்சியுடனான அ.தி.மு.க. கூட்டணி நேற்று முறிந்தது.
    • தச்சநல்லூரில் பால்கண்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    நெல்லை:

    பா.ஜனதா கட்சியுடனான அ.தி.மு.க. கூட்டணி நேற்று முறிந்தது. இதனையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா அறிவுறுத்தலின்பேரில் தச்சநல்லூரில் முன்னாள் நெல்லை தொகுதி செயலாளரும், டவுன் கூட்டுறவு நகர வங்கி தலைவருமான பால்கண்ணன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பகுதி செயலாளர் சக்திகுமார், பகுதி துணைச்செயலாளர் பழனி சுப்பையா, சத்ய முருகன், பால்ராஜ், கேபிள் சுப்பையா, கோல்டு கண்ணன், போர்வெல் மணி, வெள்ளரி அய்யப்பன், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வண்ணார்பேட்டையில் அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை தலைவர் கார்த்திக் தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

    Next Story
    ×