search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister K.N.Nehru"

    • களக்காடு பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகளை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இருந்து நெல்லை வந்தார்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்து வரும் உள்ளாட்சித்துறை பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    அமைச்சர் கே.என்.நேரு

    கூட்டத்தில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கீதாஜீவன் ஆகி யோர் தலைமை தாங்கி பேசினர்.

    கூட்டத்தில் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு, குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, இணை மேலாண்மை இயக்குனர் சரவணன், பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண், தனுஷ் குமார் எம்.பி., கலெக்டர்கள் கார்த்திகேயன், செந்தில்ராஜ், துரை ரவிச்சந்திரன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ராஜா, மார்க்கண்டேயன், பழனி நாடார், சண்முகையா, சதன் திருமலை குமார்,

    மேயர்கள் சரவணன், ஜெகன் பெரியசாமி, மகேஷ், மாநகராட்சி கமிஷனர்கள் சிவ கிருஷ்ணமூர்த்தி, தினேஷ் குமார், ஆனந்த் மோகன், நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வளர்ச்சி திட்டப்பணிகள்

    இதில் நெல்லை, தூத்துக் குடி மாநகராட்சிகள், 3 மாவட்டங்களின் நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகளை அமைச்சர் நேரு, அதிகாரிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி களின் உதவி இயக்குனர், மாநகராட்சிகளின் மண்டல சேர்மன்கள், கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், பேரூ ராட்சி தலைவர்கள், செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இருந்து காரில் இன்று அதிகாலை புறப்பட்டு நெல்லை வந்தார். வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு இன்று காலை வந்த அவருக்கு தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் மாலைராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், விவசாய தொழி லாளர் அணி கணேஷ்குமார் ஆதித்தன், ஒன்றிய செயலாளர் அருள்மணி, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பா ளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, வீரபாண்டியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் நவநீதன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை சுற்றுப்ப யணம் மேற்கொள்கிறார்.
    • இதற்காக நாளை காலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி வருகிறார்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை (வெள்ளிக்கிழமை) சுற்றுப்ப யணம் மேற்கொள்கிறார்.

    திட்டப்பணிகள் ஆய்வு

    இதற்காக நாளை காலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி வருகிறார். காலை 8 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் நிலை குறித்து ஆய்வு செய்கிறார்.

    தொடர்ந்து 9 மணிக்கு மாநகராட்சியில் முடிவுற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மற்றும் ஆய்வகத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

    தொடர்ந்து நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் நடக்கும் விழாவில் மாவட்டத்தில் ரூ.605 கோடியில் 6 யூனியன்களை சேர்ந்த 831 ஊரக குடியிருப்பு களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அங்கிருந்து குமரிக்கு செல்கிறார். கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் பேரூராட்சிகளில் ரூ.3 கோடியே 21 லட்சம் மதிப்பீல் கூடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மாலை 4 மணிக்கு மீண்டும் நெல்லை வரும் அமைச்சர் கே.என்.நேரு பாளை நேருஜி கலையரங்கில் நடக்கும் விழாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் அபிவிருத்தி பணிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர் எஸ்.என்.ஹைரோட்டில் கட்டப்பட்டுள்ள வர்த்தக மையத்தில் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.

    தென்காசி

    அங்கிருந்து தென்காசி மாவட்டம் செல்லும் அமைச்சர் கே.என்.நேரு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் தொடங்கி வைக்கிறார். பின்னர் 49 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டப்பணி களை தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து விருதுநகர் செல்கிறார்.

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மாந கராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நெல்லையில் இன்று நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வரவேற்றார்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மாந கராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வரவேற்றார்.

    கூடுதல் தலைமை செயலாளர் ( நகராட்சி நிர்வாகம்) சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, கலெக்டர் விஷ்ணு, குடிநீர் வடிகால் வாரிய இயக்குநர் தட்சணாமூர்த்தி, பேரூராட்சிகள் இயக்குநர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், கீதாஜீவன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

    கூட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் நடந்து வரும் திட்டப்பணிகள், நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் குடிநீர் திட்டப்பணிகள், குடிநீர் விநியோகம், மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நெல்லை வந்த அமைச்சர் நேருவிற்கு தி.மு.க.நிர்வாகிகள் ஆரோக்கிய எட்வின், ஜோசப் பெல்சி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ×