search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Joint drinking water project"

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை சுற்றுப்ப யணம் மேற்கொள்கிறார்.
    • இதற்காக நாளை காலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி வருகிறார்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை (வெள்ளிக்கிழமை) சுற்றுப்ப யணம் மேற்கொள்கிறார்.

    திட்டப்பணிகள் ஆய்வு

    இதற்காக நாளை காலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி வருகிறார். காலை 8 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் நிலை குறித்து ஆய்வு செய்கிறார்.

    தொடர்ந்து 9 மணிக்கு மாநகராட்சியில் முடிவுற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மற்றும் ஆய்வகத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

    தொடர்ந்து நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் நடக்கும் விழாவில் மாவட்டத்தில் ரூ.605 கோடியில் 6 யூனியன்களை சேர்ந்த 831 ஊரக குடியிருப்பு களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அங்கிருந்து குமரிக்கு செல்கிறார். கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் பேரூராட்சிகளில் ரூ.3 கோடியே 21 லட்சம் மதிப்பீல் கூடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மாலை 4 மணிக்கு மீண்டும் நெல்லை வரும் அமைச்சர் கே.என்.நேரு பாளை நேருஜி கலையரங்கில் நடக்கும் விழாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் அபிவிருத்தி பணிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர் எஸ்.என்.ஹைரோட்டில் கட்டப்பட்டுள்ள வர்த்தக மையத்தில் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.

    தென்காசி

    அங்கிருந்து தென்காசி மாவட்டம் செல்லும் அமைச்சர் கே.என்.நேரு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் தொடங்கி வைக்கிறார். பின்னர் 49 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டப்பணி களை தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து விருதுநகர் செல்கிறார்.

    மேச்சேரியில் ரூ.158.64 கோடி மதிப்பிலான நங்கவள்ளி-மேச்சேரி கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். #TNCM #edappadipalaniswami
    நங்கவள்ளி:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் மேச்சேரி, வீரக்கல்புதூர், பி.என்.பட்டி, நங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டாபுரம் ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்குட்பட்ட 698 குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்குவதற்காக ரூ.158.64 கோடியில் நங்கவள்ளி-மேச்சேரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்துக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்காக மேச்சேரியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    தொடர்ந்து வனவாசியில் நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்பு துறைகளின் புதிய திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.



    பின்னர் மாலை 3 மணிக்கு எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேலம் மாவட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இதில் மாவட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை சேலம் சேகோசர்வ் இரும்பாலை பிரிவு ரோட்டில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    பின்னர் ரூ.30 கோடியில் சேலத்தாம்பட்டி பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கான பூமி பூஜையை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார். மேலும் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    மாலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இதையொட்டி சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  #TNCM #edappadipalaniswami

    ×