என் மலர்tooltip icon

    தென்காசி

    • மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது
    • குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்தது.

    இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

    பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளை வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்த பிறகு குளிக்க தடை விதிப்பது தொடர்பாக உத்தரவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டது.
    • அதிகாலை முதலே குடும்பத்துடன் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குவிந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான சாரல் மழை பெய்தது.

    இந்த சாரல் மழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதமான சூழல் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது.

    இதனால் குற்றால அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று அதிகாலை முதலே குடும்பத்துடன் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குவிந்தனர்.

    குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டது,

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பங்களுடன் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குவிந்தனர்.

    • பேரிடர் மீட்பு பணிக்காக மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை.
    • மத்திய பா.ஜ.க. அரசு என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.

    தென்காசி:

    தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * நெல்கொள்முதல் ஈரபதத்தை 22 சதவீதமாக உயர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தேன்.

    * பேரிடர் மீட்பு பணிக்காக மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை.

    * மத்திய பா.ஜ.க. அரசு என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.

    * SIR என்ற பெயரில் நமது வாக்குரிமையை பறிக்க முயல்கிறார்கள்.

    * வாக்குரிமை பறிப்பை எந்த நிலையிலும் நடக்க விடமாட்டோம்.

    * ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமை தான், அதனை எந்நாளும் விட்டுத்தரமாட்டோம் என்றார். 

    • தென்காசி மாவட்ட மாற்று திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படும்.
    • கடனா நதி அணை ரூ.4 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

    தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    * தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு ரூ.15 கோடியில் 11 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.

    * தென்காசி மாவட்ட மாற்று திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படும்.

    * ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ.1 கோடி செலவில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

    * கடனா நதி அணை ரூ.4 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

    * அடவி நயினார் அணைத்திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியில் அணைக்கட்டுகள், கால்வாய்கள், குளங்கள் சீரமைக்கப்படும்.

    * ரூ.52 கோடி மதிப்பீட்டில் தென்காசி மாவட்டத்திற்கு புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும்.

    * வீரகேரளம்புதூர் வட்டத்தில் உள்ள மாறாந்தை கால்வாய் ரூ.2 கோடி செலவில் சீரமைக்கப்படும்.

    * கடையநல்லூர் வட்டம் வரட்டாறு பாசன அணைக்கட்டுகள், குளங்கள் ரூ.4 கோடியில் மேம்படுத்தப்படும்.

    * தென்காசியில் கண்மாய்கள் ரூ.12 கோடியில் சீரமைக்கப்படும்.

    * கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடம், சிவசைலம் கடனா அணை ரூ.4 கோடியில் சீரமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாள்தோறும் அவதூறுகளை அடித்துவிடுகிறார்கள், எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்திற்கே சென்று அவதூறுகளை பரப்புகிறார்.
    • மக்களை காக்க தி.மு.க. அரசிற்கு யாரும் சொல்லி தரவேண்டியதில்லை.

    தென்காசி:

    தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 22,70,293 மெட்ரின் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.

    * அ.தி.மு.க. ஆட்சியை போல் இல்லாமல் செப்டர்பர் 1-ந்தேதி முதலே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

    * தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினமும் ஆயிரம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

    * கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் 1,70,45,545 மெட்ரின் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    * ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

    * தி.மு.க. ஆட்சியில் பாசன நிலத்தின் பரப்பளவு அதிகரித்து கொள்முதலும் அதிகரித்துள்ளது.

    * மக்களை மகிழ்விக்கவும் மக்களை காக்கவுமே இந்த ஆட்சி நடந்து வருகிறது.

    * வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தேன்.

    * 3 வேளாண் சட்டங்களை ஆதரித்து பேசியதுடன் போராட்டங்களை கொச்சைப்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி.

    * எடப்பாடி பழனிசாமியிடம் பொய்யையும், துரோகத்தையும் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

    * நாள்தோறும் அவதூறுகளை அடித்துவிடுகிறார்கள், எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்திற்கே சென்று அவதூறுகளை பரப்புகிறார்.

    *தி.மு.க. அரசுக்கு மக்கள் துணையாக இருப்பதால் சிலருக்கு தூக்கம் வருவதில்லை, அதனால் அவதூறு பரப்புகின்றனர்.

    * மக்களை காக்க தி.மு.க. அரசிற்கு யாரும் சொல்லி தரவேண்டியதில்லை என்றார்.

    • எங்கும் இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி மண்.
    • தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9 லட்சம் பேருக்கு புதிதாக முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

    தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:

    * எங்கும் இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி மண்.

    * வடக்கே ஒரு காசி என்றால் தெற்கே ஒரு தென்காசி என சொல்லும் அளவிற்கு பெருமை வாய்ந்த நகரம் தென்காசி.

    * தூறலும் சாரலும் கொண்டு மக்களை குளிர்விக்கும் மண் தென்காசி.

    * காலுக்கு கீழே நிலமும், தலைக்கு மேலே கூரையும் வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவு.

    * கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் கட்டப்பட்ட ஒரு லட்சமாவது வீட்டை பயனாளிக்கு ஒப்படைத்தது பெருமை.

    * வருவாய் துறை சார்பில் 17 விதமான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

    * 10 லட்சம் பேருக்கு இதுவரை இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    * அன்பு மகள் பிரேமாவிற்கு கொடுத்த வாக்குறுதிப்படி நடைபெறும் வீடு கட்டும் பணியை நேரில் பார்வையிட்டேன். வீடு கட்டும் பணி வேகமாக நடைபெறுகிறது.

    * தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9 லட்சம் பேருக்கு புதிதாக முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

    * 15 ஊர்களில் ஊராட்சி மன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    * எல்லோருக்கும் எல்லாம் என்பதை நோக்கமாக கொண்டு அனைத்து மாவட்டங்களையும் வளர்த்து வருகிறோம்.

    * தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்து துறைகளையும் முன்னேற்றி வருகிறோம்.

    * திராவிட மாடல் அரசு அமைந்த பின்னர் தமிழ்நாடு உயர்ந்துள்ளது.

    * மாவட்டந்தோறும் அரசு விழாக்களில் பங்கேற்று அந்த மாவட்டங்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சீவநல்லூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் ஒரு லட்சமாவது வீட்டை திறந்து வைத்தார்.
    • புளியங்குடி சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.141 கோடியே 60 லட்சம் செலவிலான 117 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

    தென்காசி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அரசு சார்பில் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

    மேலும் மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைத்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அவர் அங்கிருந்து கார் மூலமாக கோவில்பட்டி வந்தார். அங்கு முதலமைச்சருக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து கோவில் பட்டியில் நகர தி.மு.க. சார்பில் கட்டப்பட்டுள்ள அலுவலகம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார். பின்னர் நெல்லை மாவட்டம் அரிய நாயகிபுரம் சென்று தங்கினார்.

    இன்று காலை நெல்லையில் இருந்து கார் மூலம் தென்காசி மாவட்டம் வந்த அவருக்கு ஆலங்குளத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் தென்காசி மாவட்டம் சீவநல்லூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் ஒரு லட்சமாவது வீட்டை திறந்து வைத்தார்.

    அதன் பிறகு ஆய்க்குடி செல்லும் வழியில் அனந்தபுரம் என்ற இடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளான தென்காசி மாவட்டம் மைய நூலகம், தென்காசி மகப்பேறு மையம் மற்றும் குழந்தைகள் நல கட்டிடம், மாறாந்தையில் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள், புளியங்குடி சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.141 கோடியே 60 லட்சம் செலவிலான 117 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

    மேலும் ரூ.291 கோடியே 19 லட்சம் மதிப்பிலான 83 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து 2 லட்சத்து 44 ஆயிரத்து 469 பயனாளிகளுக்கு ரூ.587 கோடியே 39 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    மொத்தத்தில் ரூ.1,020 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் ரூ.22,912 கோடியில் 6 லட்சத்து 3 ஆயிரத்து 246 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2,074 கோடியில் 37 ஆயிரத்து 221 வளர்ச்சி திட்டபணிகள் நடைபெற்றுள்ளது.

    மொத்தத்தில் ரூ.24,986 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டப்பணிகளும் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கழுநீர்குளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாகனத்தை நிறுத்தச்சொன்னார்.
    • மாணவி பிரேமாவுக்கு போன் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    நெல்லை:

    சென்னையில் கடந்த மாதம் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்து, தனியார் நிறுவனத்தில் வேலை பெற்ற மாணவ-மாணவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பேசினார்.

    அப்போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளத்தை சேர்ந்த பிரேமா என்பவர் பேசியபோது, தான் கல்லூரி விடுதியில் தங்கி படித்ததாகவும், கஷ்டப்பட்டு படிக்க வைத்த தன் தந்தை, மழையில் ஒழுகும் வீட்டில் வசிப்பதாகவும் கூறினார்.

    இதையடுத்து உடனடியாக அவருக்கு, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், புதிய வீடு கட்டி கொடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து கலெக்டர் கமல்கிஷோர் கடந்த 27-ந்தேதி சம்பந்தப்பட்ட மாணவியின் வீட்டுக்கே நேரடியாக சென்று கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கான ஆணையை வழங்கினார். தொடர்ந்து வீடு கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று தென்காசி மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு செல்லும் வழியில் உள்ள கழுநீர்குளத்தில் தனது வாகனத்தை நிறுத்தச்சொன்னார்.

    திடீரென அவர் மாணவி பிரேமாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று கனவு இல்லம் கட்டுமான பணியை ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவி பிரேமாவுக்கு போன் செய்து உணர்ச்சி பொங்க பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவியின் பெற்றோரிடமும் சிறிது நேரம் கலந்துரையாடினார். பின்னர் அங்கிருந்து விழா மேடைக்கு புறப்பட்டார்.

    • மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
    • சாலையோரம் சிலம்பம் சுற்றும் பயிற்சியில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டிருந்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அரசு சார்பில் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

    மேலும் மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைத்திருந்தார்.

    இந்நிலையில் தென்காசி மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.

    அப்போது கழுநீர்குளம் பகுதியில் சாலையோரம் சிலம்பம் சுற்றும் பயிற்சியில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டிருந்தனர். அதனை கண்ட முதலமைச்சர் தானும் காரில் இருந்து இறங்கி சென்று மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து சிலம்பம் சுற்றி அசத்தினார். 

    • கடந்த 2 நாட்களாக மெயின் அருவி பகுதியில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • விடுமுறை நாளான இன்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக கடந்த 16-ந்தேதி முதல் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மீண்டும் 20-ந்தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிக்கரைகள், பாதுகாப்பு தடுப்பு கம்பிகள், சேதமடைந்தன.

    பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

    கடந்த 2 நாட்களாக மெயின் அருவி பகுதியில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சீரமைப்பு பணிகள் நேற்றுடன் முடிவுற்றதால் இன்று காலை முதல் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    பழைய குற்றால அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்னும் நீடிக்கிறது. பழைய குற்றாலத்தில் அருவிக்கு செல்லும் சாலைகளில் ஏற்பட்ட மண் அரிப்புகள், பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் முற்றிலுமாக சீரமைத்த பிறகே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இன்று காலையில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயிலின் தாக்கம் எதுவும் இல்லாமல் இதமான சூழ்நிலை குற்றாலம் பகுதியில் நீடிக்கிறது.

    விடுமுறை நாளான இன்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 

      தென்காசி:

      தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

      அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று 4-வது நாளாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றும், இன்று காலையும் மழைப்பொழிவு சற்று குறைந்துள்ளதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கும் சற்று தணிந்து காணப்படுகிறது.

      இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்காக வந்த நிலையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

      மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக அருவி கரையையொட்டி அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் அனைத்தும் சேதமடைந்து ஆங்காங்கே உடைந்து தொங்கிக் கொண்டுள்ளன.

      குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி பகுதிகளில் தடுப்பு கம்பிகள் மற்றும் தரைதளம் பலத்த சேதமடைந்துள்ளது. இன்று காலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழத்தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

      சேதம் அடைந்த தடுப்பு கம்பிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

      • மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
      • கனமழை காரணமாக குற்றால அருவிகளில் திடீரென காட்டாற்று வெள்ளமானது ஏற்பட்டது.

      தென்காசி:

      தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. தொடர் கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

      இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குள் நேற்று மதியம் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் திடீரென காட்டாற்று வெள்ளமானது ஏற்பட்டது.

      குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டது.

      கடந்த 2 தினங்களாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினமும் காட்டாற்று வெள்ளமானது சற்றும் குறையாமல் ஆர்ப்பரித்துக் கொண்டு வரும் நிலையில், 3-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று காலையில் மழைப்பொழிவு சற்று குறைந்து காணப்பட்டதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு சீற்றம் சற்று தணிந்து காணப்பட்டது.

      ×