என் மலர்
சிவகங்கை
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியப்பன் நகரில் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கழைக் கூத்தாடுவது, சர்க்கஸ் செய்வது இவர்களின் பிராதன தொழிலாக இருந்துவருகிறது.
மானாமதுரை பகுதியில் உள்ள கங்கை அம்மன் குடியிருப்பு, மாரியம்மன் நகர், சன்னதி புதுக்குளம் பகுதியில் பெரும்பாலான கழைக் கூத்தாடிகள் வசித்து வருகின்றனர்.
இதனிையே இந்த தொழிலை செய்து வரும் சன்னதிபுதுகுளத்தை சேர்ந்த சுப்பையா மகள் அம்சவல்லிக்கும், மாரியப்பன் நகரை சேர்ந்த கணேஷ் மகன் விஜய்க்கும் திருமணம் நடை பெற்றது.
திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் மறுவீட்டிற்கு புறப்பட்டனர். மாப்பிள்ளை வீட்டான மாரியம்மன் நகருக்கு அவர்கள் மீன்பாடி வண்டியில் 10 கிலோமீட்டர் தூரம் சென்றனர். இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
இதுகுறித்து மணமகனின் உறவினர்கள் கூறுகையில் ‘பெண் வீட்டில் வரதட்சணை என்பது கிடையாது. நாங்கள் யாரும் வாங்க மாட்டோம். சர்க்கஸ் வருமானம் மட்டுமே.
பெண்ணுக்கு எங்களால் முடிந்த நகைகளை போட்டு நாங்கள் திருமணம் செய்து கூட்டி வருவோம். ஒரு காலத்தில் மாட்டுவண்டியில் அழைத்து சென்ற காலம் போய் தற்போது நவீன காலத்தில் குதிரை வண்டியிலும், கார்களிலும் அழைத்து செல்வது வழக்கம். எங்கள் வசதிக்கு ஏற்ப மீன்பாடி வண்டியில் அழைத்து வருவோம். இருப்பதே வைத்து மகிழ்ச்சி அடைகின்றோம் என்றனர்.
இதுகுறித்து மாப்பிள்ளை விஜய் கூறும்போது, ‘இந்த வண்டியில் வருவது தான் மகிழ்ச்சி என்றாலும் ஒரு காலத்தில் மாட்டு வண்டியில் கையில் இழுத்து செல்லுவோம். ஆனால் தற்போது காலம் மாறியதால் நாங்கள் தொழிலுக்கு பயன்படுத்தும் மீன்பாடி வண்டியில் ஊர்வலமாக வருகிறோம். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.
காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பகுதியில் இருந்து சுமார் 150 நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று மாலை கோவிலூர் நெல்குடோனுக்கு சென்று கொண்டு இருந்தது. அந்த லாரி காரைக்குடி வாட்டர் டேங்க் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது.
உடனே லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதை நிறுத்தி விட்டு தப்பினார். இதுகுறித்து காரைக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் லாரி முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. லாரியில் இருந்த 150 நெல் மூட்டைகளும் எரிந்து நாசமாயின.
இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் நடத்திய விசாரணையில் என்ஜின் கோளாறு காரணமாக லாரி தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது.
மானாமதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள மனச்சனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியேந்திரன் (வயது 30). இவருக்கும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிளாங்காட்டூரைச் சேர்ந்த வளர்மதி (24) என்பவருக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நிவேதா (6) என்ற மகளும், ஆகாஷ் (3) என்ற மகனும் உள்ளனர்.
சத்தியேந்திரன் திருச்சி சின்னக்கடை வீதியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது ஊருக்கு வந்து மனைவியையும், குழந்தைகளையும் பார்த்து விட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி வளர்மதி திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
விசாரணையில் வளர்மதிக்கும், மனச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்த வேல்ராஜ் (20) என்ற வாலிபருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு 2 பேரும் ஊரை விட்டு ஓடியது தெரியவந்தது. அவர்கள் திருச்சி தாராநல்லூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்தனர்.
கள்ளக்காதல் ஜோடியை சத்தியேந்திரன் மற்றும் வளர்மதியின் சகோதரர் ராமையா என்ற மணிகண்டன் ஆகியோர் தேடி வந்தனர்.
அவர்கள் திருச்சியில் இருப்பதை அறிந்து சத்தியேந்திரன், அவரது தம்பி பிரபு, ராசையா மற்றும் உறவினர் காட்டுராஜா, தனசேகர் ஆகியோர் திருச்சி சென்றனர்.
அங்கு வேல்ராஜை சரமாரியாக தாக்கி விட்டு வளர்மதியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.
இதில் படுகாயம் அடைந்த வேல்ராஜை போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் சத்தியேந்திரன், பிரபு உள்பட 6 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் காட்டுராஜா மற்றும் தனசேகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வளர்மதியை சந்தித்து உன்னால்தான் நாங்கள் கொலை வழக்கில் சிக்கி விட்டோம் என கூறி தகராறில் ஈடுபட்டனர்.
தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அவர்கள் அரிவாளால் வளர்மதியை சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வளர்மதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்த மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று வளர்மதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காட்டுராஜா, தனசேகர் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது மேலும் பணநடமாட்டத்தை கட்டுப்படுத்த பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் நியமனம் செய்து தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் சிவகங்கையை அடுத்த இலந்தங்குடிபட்டி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியில் வந்த மொபட்டை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த மொபட்டை ஓட்டிவந்த காரைக்குடியை அடுத்த கோட்டையூரை சேர்ந்த வைரவபிரகாஷ் என்பவரிடம் ரூ.17 லட்சத்து 19 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவரிடம் பணத்துக்கான ஆவணங்கள் இல்லை.
இதை தொடர்ந்து ரூ.17 லட்சத்து 19 ஆயிரத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தொகை சிவகங்கை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மானாமதுரை:
மானாமதுரையைச் சேர்ந்தவர்கள் வினோத்ராஜ், மணி. இவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த மாதம் இவர்கள் 2 பேரும் மானாமதுரை கோர்ட்டு எதிரில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.
இதில் படுகாயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வினோத்ராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதத்திணல் இந்த கொலை நடந்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரை அருகே உள்ள ஆவாரங்காட்டைச் சேர்ந்த தங்கமணி மகன் அக்னிராஜ் (வயது 23) என்பவர் 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு மானாமதுரை போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதன் அடிப்படையில் அக்னிராஜ் தினமும் மானாமதுரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இன்றும் அவர் வழக்கம் போல் கையெழுத்திடுவதற்காக மானாமதுரை வந்தார். இன்று மதியம் 11 மணியளவில் போலீஸ் நிலையத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள திருமண மண்டபம் அருகே அக்னிராஜ் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 9 பேர் கொண்ட கும்பல் அக்னிராஜை வழிமறித்தது. மேலும் அந்தப்பகுதி மக்களை அரிவாளால் மிரட்டி இங்கிருந்து செல்லுங்கள் என அந்த கும்பல் கூறியது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அக்னிராஜை சரமாரியாக வெட்டினர்.
தன்னை காத்துக் கொள்ள அவர் ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அந்த கும்பல் அவரை துரத்திச் சென்று தலையில் சரமாரியாக வெட்டியது.
இதில் அக்னிராஜ் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைத் தொடர்ந்து அந்த கொலை கும்பல் அங்கிருந்து தப்பியது.
பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகரமாக நடந்த கொலை சம்பவம் பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கடந்த மாதம் நடந்த கொலையில் பழிக்கு பழியாக அக்னிராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.






