search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paddy Bags"

    • நெல் கொள்முதல் நிலையங்களில் 22310 டன் நெல்மூட்டைகள் பெறப்பட்டது.
    • சரக்கு இரயில் மூலம் 8000 டன் நெல்மூட்டைகள் அனுப்பபட்டது,

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20000 ஏக்கர் பரப்பளவிற்கு குறுவை சாகுபடி நடைபெற்று அறுவடைக்கு பின் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22310 டன் நெல்மூட்டைகள் பெறப்பட்டது.

    பின்னர் அந்த நெல்மூ ட்டைகள் திருத்துறைப்பூண்டியில் இருந்து சிவகங்கை புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரவை மில்களுக்கு சரக்கு இரயில் மூலம் 8000 டன் நெல்மூட்டைகளும், லாரி மூலம் 11000 டன் நெல்மூட்டைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் ஏற்றி அனுப்பபட்டுள்ளது.

    மேலும் மீதம் உள்ள நெல்மூட்டைகளை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுவதாக அதிகா ரிகள் துணை மேலாளர் ஏ. கண்ணன் தெரிவித்தார்.

    • 20 ஆயிரம் டன் மூட்டைகள் மட்டுமே கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
    • குறைந்தபட்சம் 5 ஆயிரம் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 93 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த பயிர்கள் ஆகஸ்டு மாதத்தில் துவங்கி அறுவடை செய்யப்பட்டது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சேமிப்பு கட்டிடங்கள் கூடிய நெல் கொள்முதல் நிலையம், திறந்தவெளி கொள்முதல் நிலையம் என 120 இடங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    கொள்முதல் நிலையங்களிலும் இதுவரை 35ஆயிரம் டன்களுக்கு மேல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் 20 ஆயிரம் டன் மட்டுமே கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    15 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடப்பதால் எடை குறைவு ஏற்பட்டால் ஊழியர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து கொள்முதல் நிலைய ஊழியர்கள், விவசாயிகள் தெரிவிக்கையில் குறுவை நெல் எப்போதும் அறுவடை செய்து பல நாட்கள் அடுக்கிவைத்திருந்தால் இயல்பாகவே எடை குறையும்.

    கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டுசெல்லப்படாமல் தேங்கி கிடக்கிறது, கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை நேரத்தில் மழையும் பெய்துவருகிறது.

    கடந்த சில வாரங்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் குறைந்த பட்சம் 5 ஆயிரம் மூட்டைகள் குறையாமல் தேங்கி கிடக்கிறது,

    இதனால் ஏற்படும் எடை இழப்பிற்கு ஊழியர்கள்தான் ரெக்கவரி கட்டவேண்டிய சூழல் இருந்து வருகிறது.

    மேலும் மழைபெய்வதாலும், கால்நடைகள், எலி ஆகியவற்றால் ஏற்படும் சேதத்திற்கும் ஊழியர்கள்தான் ரெக்கவரி கட்டவேண்டிய சூழல் இருந்து வருகிறது, கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைவத்றகு முன்பு உடனுக்குடன் கிடங்கிற்கு கொண்டு செல்ல கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் மூட்டைகள் குறித்து ஆய்வு செய்தார்.
    • அம்மன்பேட்டையில் உள்ள நவீன அரிசி ஆலையில் ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் உழவர் சந்தையில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர், காய்கறிகள் வரத்து, விலை நிர்ணயம் குறித்து கேட்டறிந்ததுடன் உழவர் சந்தை காய்கறி கழிவுகளை உரமாக்கும் எந்திரத்தின் செயல்பாட்டை யும் பார்வையிட்டார்.

    மேலும் அவர், உழவர் சந்தையில் உள்ள விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழு கடைகளுக்கு சென்று விற்பனை நிலவரத்தை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அவர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படும் மாநில அக்மார்க் ஆய்வகத்தின் செயல்பாடு குறித்தும், சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் மூட்டைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    பின்னர் ஒரத்தநாடு ஒன்றியம் ஈச்சங்கோட்டை யில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற கலெக்டர் தீபக் ஜேக்கப், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    இதையடுத்து அவர், ஈச்சங்கோட்டையில் உள்ள நாற்றாங்கால் பண்ணை, திருவையாறு ஒன்றியம் அம்மன்பேட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலை ஆகியவற்றிலும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, வேளாண்மை துணை இயக்குனர் வித்யா, உதவி பொறியாளர் கலைமாமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • வியாபாரிகள் ஆன்லைனில் கொள்முதல்
    • ஈரப்பதமின்றி உலர்த்திக்கொண்டு வந்தால் கூடுதல் விலை கிடைக்கும் என கண்காணிப்பாளர் தகவல்

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 20 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் போளூர் 2-வது இடம் பெற்றுள்ளது.

    இங்கு தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விவசாயிகளின் விளைபொருளான நெல்லை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கு போளூர், கேளூர், செங்குணம், சனிக்குவாடி, உள்பட 40 கிராமங்களில் இருந்து தினசரி நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றன. நெல் மூட்டைகள் காஞ்சிபுரம், கலவை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, போன்ற ஊர்களில் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு நெல் மூட்டைகளை ஆன்லைனில் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    விவசாயிகளின் விளை பொருளுக்கு நல்ல விலை கிடைப்பதாலும் உடனே பணம் தங்கள் கணக்கில் வரவு வருவதாலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நேற்று வரை 26 ஆயிரத்து நெல் மூட்டைகள் வந்து ரூ.4.25 கோடிக்கு விற்பனை ஆயின சன்னரக நெல் 75 கிலோ கொண்ட மூட்டைகள் 1க்கு ரூ.1,450 முதல் 2,000 வரையிலும், குண்டு ரகம் ரூ.1,300 முதல் 1,639 வரையிலும், கோ-51 ரகம் 1,280முதல் ரூ.1,549 வரையிலும் விற்பனை ஆயின.

    மத்திய அரசின் மின்னனும் தேசிய வேளாண் சந்தை (இ.என்.ஏ.எம்) திட்டத்தின் கீழ் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது.

    வியாபாரிகள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு நெல் மூட்டைகளை கொள்முதல் செய்கின்றனர். இதனால் போளூரில் உள்ள 8 கிடங்குகளில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்க மடைந்துள்ளன.

    இடமில்லாமல் சுமார் 6 ஆயிரம் மூட்டைகள் களத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து கண்காணிப்பாளர் என்.வெங்கடேசன் கூறியதாவது:-

    விவசாயிகள் நெல் அறுவடை ஆனவுடன் ஈரப்பதமின்றி நன்கு உலர்த்திக்கொண்டு வந்தால் கூடுதலாக நல்ல விலை அவர்களுக்கு கிடைக்கும். என்று கூறி வருகின்றோம் என்றார்.

    சமீபத்தில் இங்கு ஆய்வு செய்த முன்னாள் அமைச்சரும் போளூர் தொகுதி எம்.எல்.ஏ, -வுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நெல் சேமித்து வைக்க கிடங்கு கட்டித் தருவதாக உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

    தற்சமயம் சம்பா பருவம் முடிந்து விவசாயிகள் அறுவடையில் மும்பரமாக ஈடுபட்டு வருவதால் மேலும் நெல் வரத்து அதிகரிக்கும் வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்வார்கள் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 61,260 நெல் மூட்டைகள் வந்தன. ரூ.9 லட்சத்து 85 ஆயிரத்துக்கு விற்பனை ஆயின.

    விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு குருகுலம் கிராமத்தில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே குருகுலம் கிராமத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான 51 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகள் இங்கு வைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் சமீபத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 20 ஆயிரம் நெல் மூட்டைகள் குருகுலம் கிராமத்தில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அப்படி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மீது தார்ப்பாய்கள் போட்டு பாதுகாப்புடன் மூடி வைக்கவில்லை.

    இதற்கிடையே நேற்று மாலை மதுராந்தகம் பகுதியில் கன மழை பெய்தது. இந்த மழையால் குருகுலம் கிராமத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் நெல் மூட்டைகளும் நனைந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

    இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், நெல் வாங்கும் போது ஈரப்பதம் இருந்தால் அதை அதிகாரிகள் வாங்க மறுக்கிறார்கள். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகியுள்ளன என்றனர்.

    ×