

திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20000 ஏக்கர் பரப்பளவிற்கு குறுவை சாகுபடி நடைபெற்று அறுவடைக்கு பின் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22310 டன் நெல்மூட்டைகள் பெறப்பட்டது.
பின்னர் அந்த நெல்மூ ட்டைகள் திருத்துறைப்பூண்டியில் இருந்து சிவகங்கை புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரவை மில்களுக்கு சரக்கு இரயில் மூலம் 8000 டன் நெல்மூட்டைகளும், லாரி மூலம் 11000 டன் நெல்மூட்டைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் ஏற்றி அனுப்பபட்டுள்ளது.
மேலும் மீதம் உள்ள நெல்மூட்டைகளை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுவதாக அதிகா ரிகள் துணை மேலாளர் ஏ. கண்ணன் தெரிவித்தார்.