search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivagangai collector"

    • சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் காது கேளாதோர் நலச்சங்கத்தினர் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
    • சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒரு செவித்திறன் குறைபாடு உடையோர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் காது கேளாதோர் நலச்சங்கத்தினர் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒரு செவித்திறன் குறைபாடு உடையோர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு இப்பள்ளியின் ஆசிரியர்கள் சிலர், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில மாணவிகளை சிறப்பு வகுப்புக்கு வர வேண்டும் என்று கூறி வரவழைத்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும், இந்த சம்பவங்களை வெளியில் சொன்னால் தேர்வில் பெயிலாக்கி விடுவோம் என்றும், உங்களுக்கு அரசு வேலை, அரசாங்க சலுகைகள் கிடைக்காமல் செய்து விடுவோம் என்று மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் இந்த பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக இங்கு பணியில் இருப்பதால், பள்ளியின் நிர்வாகத்தை தங்களின் குற்ற செயல்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக தெரிகிறது.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நான் இந்த பணிக்கு வந்து சில ஆண்டுகள் தான் ஆகிறது. இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக தொடர் புகார்கள் வருகிறது. ஒரு ஆசிரியர் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி அந்த கேக்கை மாணவிகளுக்கு ஊட்டி விட்டதாக ஒரு புகாரும் உள்ளது. மற்றொரு ஆசிரியர் சிறப்பு வகுப்பு நடத்துவதாக கூறி சில மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார்கள் வந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உத்தரவு விதிக்கப்பட்டதன் எதிரொலியாக சிவகங்கை நகரில் உள்ள கடைகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
    சிவகங்கை:

    தமிழகத்தில் பிளாஸ்டிக்பொருட்கள் தடையை தொடர்ந்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், இறைச்சிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவதற்கு பதிலாக துணி பைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் நேற்று சிவகங்கை பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு உள்ளதா என்பது குறித்து திடீர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் ஒவ்வொரு கடைக்கும் சென்று அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களை பொதுமக்களுக்கு எவ்வாறு கடையின் உரிமையாளர்கள் கொடுக்கிறார்கள் என்பதையும் ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர் சிவகங்கை பஸ் நிலையம் பகுதியில் உள்ள பழக்கடைகளுக்கு சென்று கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார். பின்னர் அங்கு வந்த பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து சிவகங்கை பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்று பார்வையிட்ட கலெக்டர் அதை சுத்தமாக வைத்துக்கொள்ளும்படி நகராட்சி ஆணையாளருக்கு அறிவுறுத்தினார். #tamilnews
    சிவகங்கை மாவட்டத்தில் நீர்வரத்துக் கால்வாய் சீரமைக்க எந்திரங்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:-

    நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகை கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும். பயிர் காப்பீடு செய்யாதவர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் பயிர் சேதங்களுக்கு ஏற்ப கணக்கிட்டு உரிய இழப்புகள் வழங்கப்படும்.

    கண்மாய்க்கு செல்லும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு தட்கல் முறையில் மின்சாரம் வரிசைப்படி வழங்கப்படும். சேதமடைந்த மின்கம்பங்கள் சரிசெய்யப்படும். ஊராட்சி சாலைகளை சீரமைக்கவும், நெடுஞ் சாலைகளை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் சேதமடைந்த வீடுகளில் பராமரிப்பு மேற்கொள்ளப்படும். வீடுகளும் கட்டித்தரப்படும்.

    நெடுஞ்சாலை அமைப்பதற்கு விளை நிலங்கள் வழங்கியவர்கள் வருவாய்த் துறையின் மூலம் கணக்கிட்டு உரிய தொகை விரைவில் வழங்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைக்கேற்ப வருவாய்த்துறை சான்றிதழ் கிராம நிர்வாக அலுவலர் மூலம் உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதேபோல் ஒவ்வொரு ஒன்றியத்திலும் நீர்வரத்துக் கால்வாய் சீரமைக்க எந்திரங்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகள் நடைபெறும்போது அந்தந்த பகுதி விவசாயிகள் கண்காணித்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

    ஆக்கிரமிப்புகள் தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. பொதுப் பணித்துறை கால்வாய்களாக இருந்தாலும் அவர்களிடம் தடையின்மை சான்று வாங்கி உள்ளாட்சி அமைப்புக்கள் மூலம் வரத்துக்கால்வாய்கள் சீர மைக்கப்படும். மேலும் நீர்நிலைகளிலுள்ள ஆக்கிர மிப்புக்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

    இவ்வாறு அவர் பேசினார்.

    வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், குன்றக்குடி வேளாண் அறிவியல் மைய இயக்குநர் செந்தில்குமரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ரூ.25 லட்சம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கலெக்டர் லதா கூறியுள்ளார். #keralafloods
    சிவகங்கை:

    கேரள மாநிலத்தில் தொடர் மழையின் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அனைத்து பகுதிகளில் இருந்து நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க வசதியாக பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், கொடையாளர்கள் ஆகியோரிடம் பெறப்பட்ட உணவு தானியங்கள், மருந்து பொருட்கள், போர்வை, ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் என ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

    கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் தலைமையில் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்ட வழங்கல் அதிகாரி ராம்பிரதீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் லதா தெரிவித்துள்ளார். #keralafloods
    ×