search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல் மூட்டைகள்"

    • நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • ஒவ்வொரு வருடமும் சீசன் காலங்களில் செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைப்பது வழக்கம்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விற்பனைக்கு வரும் நெல் மூட்டைகள் தரமானதாக இருப்பதால் அதிக அளவு நெல் மூட்டைகள் இங்கு கொள்முதல் செய்யப்படும்.

    இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கட்டிடமில்லாமல் திறந்த வெளியிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 வருடம் முன்பு புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டது. அதில் சுமார் 10,000 நெல் மூட்டைகள் மட்டுமே வைக்க கூடிய நிலை உள்ளது. அதிகமாக வரும் நெல் மூட்டைகள் திறந்த வெளியில்தான் வைக்க வேண்டும். அப்போது மழை உள்ளிட்ட சம்பவங்களால் பாதிப்பு ஏற்படக்கூடும். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தற்போது சீசன் என்பதால் நெல் மூட்டைகள் வரத்து அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் 500 லாட் நெல் மூட்டைகளாக 14, 1474 நெல் மூட்டைகளும் நேற்று 700 லாட்டுகளாக சுமார் 16,000 நெல் மூட்டைகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செஞ்சி கமிட்டியில் எடைப்பணி தொழிலாளர்கள் சாக்கு மற்றும் தொழிலாளர்கள் லாரி மூட்டை ஏற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் அதிக அளவு நெல் மூட்டைகள் வரும்போது கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

    எனவே நெல் மூட்டைகள் நேற்று முன்தினமும் நேற்றும் கொள்முதல் செய்யப்பட்டன. அவைகள் ரூ.3 கோடியே 20 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டனர். நேற்று வந்த நெல் மூட்டைகள் நேற்று மாலை மற்றும் இன்று கொள்முதல் செய்யப்படுகிறது. அவை சுமார் 3 கோடி அளவுக்கு கொள்முதல் செய்யப்படும்.

    இந்நிலையில் இன்று ஒரு நாள் மட்டுமே வேலை நாளாக இருப்பதாலும் மற்ற நான்கு நாட்கள் விடுமுறையா இருப்பதாலும் விவசாயிகள் இனி நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என்றும் திங்கட்கிழமை நடைபெறும் கொள்முதலுக்காக ஞாயிற்றுக்கிழமை இரவு விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வந்தால் போதும் என்று கமிட்டி கண்காணிப்பாளர் வினோத்குமார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கமிட்டியின் வெளியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தை மாதமும் சீசன் டைம் என்பதால் சுமார் 15 நாட்களுக்கு இவ்வாறு அதிக அளவில் நெல்மூட்டைகள் வரும் என்றும், மற்ற நாட்களில் சாதாரணமாக இருக்கும் என்றும் கமிட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் சீசன் காலங்களில் செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • நெல் கொள்முதல் நிலையங்களில் 22310 டன் நெல்மூட்டைகள் பெறப்பட்டது.
    • சரக்கு இரயில் மூலம் 8000 டன் நெல்மூட்டைகள் அனுப்பபட்டது,

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20000 ஏக்கர் பரப்பளவிற்கு குறுவை சாகுபடி நடைபெற்று அறுவடைக்கு பின் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22310 டன் நெல்மூட்டைகள் பெறப்பட்டது.

    பின்னர் அந்த நெல்மூ ட்டைகள் திருத்துறைப்பூண்டியில் இருந்து சிவகங்கை புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரவை மில்களுக்கு சரக்கு இரயில் மூலம் 8000 டன் நெல்மூட்டைகளும், லாரி மூலம் 11000 டன் நெல்மூட்டைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் ஏற்றி அனுப்பபட்டுள்ளது.

    மேலும் மீதம் உள்ள நெல்மூட்டைகளை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுவதாக அதிகா ரிகள் துணை மேலாளர் ஏ. கண்ணன் தெரிவித்தார்.

    • சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது.
    • நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் ஏற்றப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அங்கேயே அடுக்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு தஞ்சை, பிள்ளையார்பட்டி, புனல்குளம், அம்மன்பேட்டை ஆகிய இடங்களி ல் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

    இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்ப ப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொது வினியோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலை களுக்கும் அனுப்பப்படும்.

    இந்தநிலையில் இன்று சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது. பின்னர் இந்த லாரிகள் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் ஏற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து தலா 1,000 டன் நெல் வீதம் அரவைக்காக திருநெல்வேலி , திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • 20 ஆயிரம் டன் மூட்டைகள் மட்டுமே கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
    • குறைந்தபட்சம் 5 ஆயிரம் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 93 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த பயிர்கள் ஆகஸ்டு மாதத்தில் துவங்கி அறுவடை செய்யப்பட்டது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சேமிப்பு கட்டிடங்கள் கூடிய நெல் கொள்முதல் நிலையம், திறந்தவெளி கொள்முதல் நிலையம் என 120 இடங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    கொள்முதல் நிலையங்களிலும் இதுவரை 35ஆயிரம் டன்களுக்கு மேல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் 20 ஆயிரம் டன் மட்டுமே கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    15 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடப்பதால் எடை குறைவு ஏற்பட்டால் ஊழியர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து கொள்முதல் நிலைய ஊழியர்கள், விவசாயிகள் தெரிவிக்கையில் குறுவை நெல் எப்போதும் அறுவடை செய்து பல நாட்கள் அடுக்கிவைத்திருந்தால் இயல்பாகவே எடை குறையும்.

    கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டுசெல்லப்படாமல் தேங்கி கிடக்கிறது, கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை நேரத்தில் மழையும் பெய்துவருகிறது.

    கடந்த சில வாரங்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் குறைந்த பட்சம் 5 ஆயிரம் மூட்டைகள் குறையாமல் தேங்கி கிடக்கிறது,

    இதனால் ஏற்படும் எடை இழப்பிற்கு ஊழியர்கள்தான் ரெக்கவரி கட்டவேண்டிய சூழல் இருந்து வருகிறது.

    மேலும் மழைபெய்வதாலும், கால்நடைகள், எலி ஆகியவற்றால் ஏற்படும் சேதத்திற்கும் ஊழியர்கள்தான் ரெக்கவரி கட்டவேண்டிய சூழல் இருந்து வருகிறது, கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைவத்றகு முன்பு உடனுக்குடன் கிடங்கிற்கு கொண்டு செல்ல கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
    • குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி கிடங்கிலிருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமாகியிருப்பதை அத்துறையின் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். மாயமான நெல் மூட்டைகளின் மதிப்பு ரூ.1.50 கோடிக்கும் அதிகம் ஆகும்.

    24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ள கிடங்கிலிருந்து நெல் மூட்டைகளை வெளியாட்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்க முடியாது. 7000 டன் நெல் மூட்டைகள் மாயமானது அம்பலமான பிறகு, அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று கூறி, மிகப்பெரிய முறைகேட்டை, மோசடியை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

    இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நெல் மூட்டைகள் மாயமானதாக கூறப்பட்ட தருமபுரி வாணிப கழக திறந்த வெளி குடோனில் இன்று மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
    • 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பது வதந்தியான செய்தியாகும்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது.

    இந்த நிலையில் நெல் மூட்டைகள் மாயமானதாக கூறப்பட்ட தருமபுரி வாணிப கழக திறந்த வெளி குடோனில் இன்று மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது கலெக்டர் சாந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு வாணிப கழக சார்பில் தருமபுரி மாவட்டத்திற்கு 22 ஆயிரம் நெல் மூட்டைகள் தஞ்சை, நாகப்பட்டிணம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இருந்து ரெயில் மூலம் வரவழைக்கப்பட்டது. இந்த நெல் மூட்டைகளை கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட வாணிப கழக திறந்த வெளி குடோனில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த குடோனில் இருந்த 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமானதாக தகவல்களை பரப்பினர். இதுகுறித்து எழுந்த புகார் காரணமாக விஜிலென்ஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஆய்வு செய்வதற்காக இன்று இங்கு வந்து பார்வையிட்டபோது, 7 ஆயிரம் நெல் மூட்டை மாயமாக வாய்ப்பில்லை. ஏனென்றால், ஒரு அட்டிக்கு 3 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை அடுக்கி வைக்கப்படுவது வழக்கம்.

    ஆனால், தற்போது அடுக்கி வைக்கப்பட்டுள்ள முறையில் ஒரு சில அட்டிகளில் 3 ஆயிரத்திற்கும் மேலாக இருக்கும், சில அட்டிகளில் 2500-க்கும் குறைவாக மூட்டைகள் அடுக்கி வைக்கப்படும். அவ்வாறு குறைவாக அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை ஒரு சிலர் தவறுதலாக எண்ணி விட்டு நெல் மூட்டைகள் மாயமானது தெரியவந்ததாக திரித்து எங்கள் மீது உள்ள காழ்புணர்ச்சி காரணமாக புகார் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாகதான் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குடோனில் எந்த மூட்டைகளும் மாயமாகவில்லை. மேலும், சரிந்து கிடக்கும் மூட்டைகளை சரிசெய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

    7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பது வதந்தியான செய்தியாகும்.

    தற்போது நெல்மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், நெல் மூட்டைகள் மாயமான சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தவும், மாவட்டத்தில் உள்ள 80 அரிசி ஆலைகளிலும் ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரித்தபோது, தற்போது நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைக்கும்பணி நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள் 7 ஆயிரம் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.
    • மாயமான 7 ஆயிரம் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த தி.மு.க. ஆட்சியில் தற்போது தருமபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7 ஆயிரம் நெல் மூட்டை மாயமாகி உள்ளதாக செய்தித்தாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    சர்க்கரையை எரும்புதின்றது. சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள் 7 ஆயிரம் நெல் மூட்டைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

    மக்கள் வரிப்பணத்தில் உல்லாச பயணம் சென்றிருக்கும் இந்த சர்க்கஸ் அரசின் முதலமைச்சர் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெல் மூட்டைகள் மாயமாவதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாயமான 7 ஆயிரம் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் மூட்டைகள் குறித்து ஆய்வு செய்தார்.
    • அம்மன்பேட்டையில் உள்ள நவீன அரிசி ஆலையில் ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் உழவர் சந்தையில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர், காய்கறிகள் வரத்து, விலை நிர்ணயம் குறித்து கேட்டறிந்ததுடன் உழவர் சந்தை காய்கறி கழிவுகளை உரமாக்கும் எந்திரத்தின் செயல்பாட்டை யும் பார்வையிட்டார்.

    மேலும் அவர், உழவர் சந்தையில் உள்ள விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழு கடைகளுக்கு சென்று விற்பனை நிலவரத்தை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அவர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படும் மாநில அக்மார்க் ஆய்வகத்தின் செயல்பாடு குறித்தும், சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் மூட்டைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    பின்னர் ஒரத்தநாடு ஒன்றியம் ஈச்சங்கோட்டை யில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற கலெக்டர் தீபக் ஜேக்கப், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    இதையடுத்து அவர், ஈச்சங்கோட்டையில் உள்ள நாற்றாங்கால் பண்ணை, திருவையாறு ஒன்றியம் அம்மன்பேட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலை ஆகியவற்றிலும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, வேளாண்மை துணை இயக்குனர் வித்யா, உதவி பொறியாளர் கலைமாமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கு நெல் மூட்டைகள் அனுப்பப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது.

    இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் திருவள்ளூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.

    இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் புனல்குளம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2 ஆயிரம் டன் நெல், 240 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் நெல்மூட்டைகள் ஏற்றப்பட்டு அரவைக்காக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • வியாபாரிகள் ஆன்லைனில் கொள்முதல்
    • ஈரப்பதமின்றி உலர்த்திக்கொண்டு வந்தால் கூடுதல் விலை கிடைக்கும் என கண்காணிப்பாளர் தகவல்

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 20 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் போளூர் 2-வது இடம் பெற்றுள்ளது.

    இங்கு தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விவசாயிகளின் விளைபொருளான நெல்லை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கு போளூர், கேளூர், செங்குணம், சனிக்குவாடி, உள்பட 40 கிராமங்களில் இருந்து தினசரி நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றன. நெல் மூட்டைகள் காஞ்சிபுரம், கலவை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, போன்ற ஊர்களில் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு நெல் மூட்டைகளை ஆன்லைனில் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    விவசாயிகளின் விளை பொருளுக்கு நல்ல விலை கிடைப்பதாலும் உடனே பணம் தங்கள் கணக்கில் வரவு வருவதாலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நேற்று வரை 26 ஆயிரத்து நெல் மூட்டைகள் வந்து ரூ.4.25 கோடிக்கு விற்பனை ஆயின சன்னரக நெல் 75 கிலோ கொண்ட மூட்டைகள் 1க்கு ரூ.1,450 முதல் 2,000 வரையிலும், குண்டு ரகம் ரூ.1,300 முதல் 1,639 வரையிலும், கோ-51 ரகம் 1,280முதல் ரூ.1,549 வரையிலும் விற்பனை ஆயின.

    மத்திய அரசின் மின்னனும் தேசிய வேளாண் சந்தை (இ.என்.ஏ.எம்) திட்டத்தின் கீழ் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது.

    வியாபாரிகள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு நெல் மூட்டைகளை கொள்முதல் செய்கின்றனர். இதனால் போளூரில் உள்ள 8 கிடங்குகளில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்க மடைந்துள்ளன.

    இடமில்லாமல் சுமார் 6 ஆயிரம் மூட்டைகள் களத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து கண்காணிப்பாளர் என்.வெங்கடேசன் கூறியதாவது:-

    விவசாயிகள் நெல் அறுவடை ஆனவுடன் ஈரப்பதமின்றி நன்கு உலர்த்திக்கொண்டு வந்தால் கூடுதலாக நல்ல விலை அவர்களுக்கு கிடைக்கும். என்று கூறி வருகின்றோம் என்றார்.

    சமீபத்தில் இங்கு ஆய்வு செய்த முன்னாள் அமைச்சரும் போளூர் தொகுதி எம்.எல்.ஏ, -வுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நெல் சேமித்து வைக்க கிடங்கு கட்டித் தருவதாக உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

    தற்சமயம் சம்பா பருவம் முடிந்து விவசாயிகள் அறுவடையில் மும்பரமாக ஈடுபட்டு வருவதால் மேலும் நெல் வரத்து அதிகரிக்கும் வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்வார்கள் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 61,260 நெல் மூட்டைகள் வந்தன. ரூ.9 லட்சத்து 85 ஆயிரத்துக்கு விற்பனை ஆயின.

    • நெல் மூட்டைகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைக்க தார்பாய்கள் தயார் நிலையில் போதிய எண்ணிக்கையில் உள்ளன.
    • நெல் மூட்டைகளை பாதுகாக்கவும், நெல்மூட்டைகளை அரவைக்கு துரிதமாக அனுப்பவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் தஞ்சாவூர் மண்டலம் நடப்பு கொள்முதல் பருவத்தில்

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு இயக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    கும்பகோணம் தாலுகா கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் 6933 டன் நெல் இருப்பு வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் 6933 மெட்ரிக் டன் மேலும் கருப்பு பாலித்தின் கவர் கொண்டு மூடி கயிறு கட்டப்பட்டுள்ளது.

    மழையினால் நெல் மூட்டைகள் நனைந்து விட்டது என்று தகவல்வ ரப்பெற்றதை தொடர்ந்து மேலாளர் (தரக்கட்டுப்பாடு) கொத்தங்குடி திறந்தவெளி சேமிப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஏற்கனவே அங்கு திறந்த வெளியிலிருந்த நெல் மூட்டைகள் சரியான முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகவும் முதல் நாள் பெய்த மழையில் ஏதும் நனையவில்லை என்றும் ஆனால் ஒரு அட்டி மட்டும் கீழே அட்டி அமைப்பதற்காக அமைக்கப்பட்ட வெட்டுக்கல் மண் அமைப்பினால் உள் வாங்கியதால் நெல் மூட்டைகள் சரிந்து விட்டன.

    அதை மீண்டும் மறு அட்டி அடுக்கும்போது சிலர் அதை புகைப்ப டமெடுத்து அது மழையில் நனைந்ததாக சுட்டிகாட்டி விட்டதாகவும் தெரியவந்தது.

    மழையி னால் எவ்வித பாதிப்பும், இழப்பும் இல்லை என்பதோடு சேமிப்பு மைய த்தில்64 அட்டிகளும் (6.933 மெ.டன்) பாதுகாத்து கருப்பு பாலித்தின் கவர் கொண்டு மூடி சுற்றிலும் கயிர் கட்டி பாதுகாக்க ப்பட்டு வருகிறது.

    இது குறித்து நான் (கலெக்டர்) இந்த சேமிப்பு மையத்தை ஆய்வு செய்தபோது மழையினால் எவ்வித நெல் மூட்டைகளும் நனையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

    நெல் மூட்டைகள் அனை த்தையும் பாதுகாப்பாக வைக்க தார்பாய்கள் தயார் நிலையில் போதிய எண்ணிக்கையில் உள்ளன.

    திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் அனைத்தையும் ஆய்வு செய்து நெல் மூட்டைகளை பாதுகா க்கவும், நெல்மூட்டைகளை அரவைக்கு துரிதமாக அனுப்பவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க சம்பந்த ப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணி க்கப்பட்டு வருகிறது.

    அதே போன்று வருங்காலங்களில் நெல் மூட்டைகளை இது போன்று புகார் மற்றும் செய்தி வராமல் மழையிலிருந்து பாதுகாக்க மேற்கூரையிட்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×