என் மலர்
நீங்கள் தேடியது "சக்கரபாணி"
- ஆயிரக்கணக்கான மூட்டைகளில் நெல்மணிகள் மழையில் நனைந்து அதிகளவில் சேதமடைந்தன.
- பகுத்தறிவு பேசும் தமிழக அரசின் அடிப்படை அறிவுக்கு எட்டவில்லை என்றே நினைக்க வேண்டி உள்ளது.
நெருக்கடியில் தவிக்கும் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்:
தமிழ்நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் முதன்மையானதாக விளங்குகிறது. இந்த காவிரி டெல்டா பகுதி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.
விவசாயிகள் நிறைந்த இந்த டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் விளைவிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான ஏக்கர்களில் விளைவிக்கப்படும் நெல்மணிகள் அரசு வாணிப கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 1000 நெல் மூட்டைகள் வரை கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் ஆண்டுதோறும் பருவமழை சமயங்களில் நெல் மூட்டைகள் சேதம் அடையும் அவல நிலையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல் மூட்டைகள் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படாமல் வெளியே திறந்தவெளிகளில் தேக்கி வைக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

அதேபோல் பயிர்க் காப்பீட்டு முறை மூலம் விவசாயிகள் எந்த அளவுக்கு தங்கள் இழப்பை நிவர்த்தி செய்துகொள்ள முடிகிறது என்ற கேள்வியும் உள்ளது. பெரும்பாலான சமயங்களில் காப்பீட்டுத் தொகை அவர்கள் சந்தித்த இழப்புக்கு போதுமானதாக இருந்துவிடுவதில்லை. இந்த வருடம் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாளாகும். ஒரு ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.38 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிரிமியம் தொகையாக விவசாயிகள் ரூ.570 செலுத்த வேண்டும்.
காயத்துக்கு போடப்பட்ட பேண்டேஜ் ஆகவே இந்த காப்பீடு உள்ளது. மற்ற காப்பீடுகளை போல இதற்கான முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு உள்ள விழிப்புணர்விலும் முன்னேற்றம் தேவையாக உள்ளது. நியாயமான இழப்பீட்டு தொகை கிடைக்கிறதா என்பது கேள்விக் குறியே.
அதிமுக Vs திமுக:
இதற்கிடையே வழக்கம்போல இந்த வருடமும் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே ஆயிரக்கணக்கான மூட்டைகளில் நெல்மணிகள் மழையில் நனைந்து அதிகளவில் சேதமடைந்தன.
நெற்பயிர் அறுவடை நேரத்தில் மழை பெய்தால் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்யவும், மேலும் நெல்லில் இருந்து பெறப்படும் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசியை கலக்கவும் மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்.
இந்த அனுமதி கடந்த ஆகஸ்ட் மாதமே கிடைத்து என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூற, இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி அந்த கூற்றை மறுத்துள்ளார்.
இதன் காரணமாக தற்போது 9 லட்சத்து 75 ஆயிரத்து மெட்ரிக் டன் நெல் தேங்கிக் கிடப்பதாக சக்கரபாணி கூறுகிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு நிலையத்திற்கு 800 மூட்டையிலிருந்து 1000 மூட்டைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது என்றும் திமுக ஆட்சியில் 2000 முதல் 3000 மூட்டைகள் வரை வாங்கப்படுவதாக அமைச்சர் கூறுகிறார். எடப்பாடி பழனிச்சாமி இதை நேரில் வந்து பார்த்துவிட்டு மறுத்து பேச வேண்டும் என்று சவால் விடுகிறார்.
அமைச்சரின் விளக்கம் தற்போதைய நிலைமைக்கு சாக்காக இருந்தபோதிலும் நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமடைவதற்கான தீர்வு என்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.

என்னதான் தீர்வு:
கடந்த பல ஆண்டுகளாக நெல் மூட்டைகள் சேதம் அடையும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு குறித்து முந்தைய அதிமுக அரசும் தற்போதைய திமுக அரசும் தீவிரம் காட்டவில்லை என்பதையே ஆண்டுதோறும் கடின உழைப்பின் மூலம் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் யாருக்கும் உபயோகம் இல்லாமல் போவது உணர்த்துகிறது.
அரசு கொள்முதல் நிலையங்களில் போதிய வசதியின்மையே நெல்மணிகள் சேதத்துக்கு காரணம் என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. பல கொள்முதல் நிலையங்களில் நெல்கள் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.
தமிழ்நாடு அரசு அறிவித்தபடி செமி குடோன்களை உடனடியாக திறக்க வேண்டும். விவசாயிகளின் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று பல வருடங்களாக அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகளை சேமித்து வைப்பதற்கேற்ப குடோன்களை அமைப்பதில் அரசுக்கு என்ன சிக்கல் என்பது தெரியவில்லை.
இந்த வசதியை ஏற்படுத்த அதிஉயர்ந்த தொழில்நுட்பம் ஏதும் தேவையில்லை என்பதை பகுத்தறிவு பேசும் தமிழக அரசின் அடிப்படை அறிவுக்கு எட்டவில்லை என்றே நினைக்க வேண்டி உள்ளது.

கார் பந்தயம் மூலமும் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவதன் மூலமும் கிடைக்கும் விளம்பரம் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதில் அதிகம் கிடைத்துவிடாது என்று அரசு மெத்தனம் காட்டுகிறதா என்ற கேள்வியையும் புறந்தள்ள முடியாது.
வருடந்தோறும் விவசாயிகளின் வேதனையில் மாறி மாறி அரசியல் செய்துகொள்ளவே இந்த பிரச்சனைக்கு இரு திராவிட அரசுகளும் தீர்வு காணாமல் புறக்கணிக்கிறதா என்றும் எண்ண வேண்டி உள்ளது.
முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை வரையறுக்கும் அதே சமயம், நெல் மூட்டைகளை தார்பாய்கள் மூலம் மூடி காப்பாற்றிவிட முயலும் சூழல் நிலவுவது முரணானதாக உள்ளது.
சிறு மழைக்கே விவசாயிகளின் கடின உழைப்பு கண்முன்னே அழிந்து போவது ஆண்டுதோறும் நடந்தேறும் வேதனைக்குரிய சடங்காக மாறிவிட்டதற்கு முன்னாள் மற்றும் இந்நாள் அரசுகளின் தொலைநோக்கு பார்வை இன்மையே காரணம் என்று எளிதில் கூறிவிட முடியும்.
இனியேனும் ஊடகங்கள் மூலம் சினிமா பாணியில் அறிக்கைகளையும் சவால்களையும் விடுவதை விட்டுவிட்டு இனி வரும் காலங்களுக்கு பயனளிக்கும் ஆக்கபூர்வமான தீர்வை நோக்கி அரசு நகரும் என்று நம்புவோமாக!
- திருமங்கலம், ஈரோடு, இடைதேர்தல் பார்முலா போல நடக்கின்றது.
- பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க முடியாத நிலை.
விழுப்புரம்:
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜூனன் ஆகியோர் விழுப்புரத்திற்கு இன்று வந்தனர். அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திருமங்கலம், ஈரோடு, இடைதேர்தல் பார்முலா போல நடக்கின்றது. இதற்கு உதாரணம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டும் தமிழக அமைச்சர்கள் 33 பேர் ஒவ்வொரு தெருவிலும் சூழ்ந்து கொண்டு மக்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து அவர்களை மாலையில் விடுவிக்கின்றனர்.
இதனால் பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க முடியாத நிலை உள்ளது. இதுதான் தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் அவலமாகும். இப்படிப்பட்டவர்களுக்கு காவல்துறை முழு ஆதரவு அளிக்கின்றது. இதையெல்லாம் முன்பே உணர்ந்துதான் அ.தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






