search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தருமபுரி அரசு குடோனில் 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தருமபுரி அரசு குடோனில் 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    • சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள் 7 ஆயிரம் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.
    • மாயமான 7 ஆயிரம் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த தி.மு.க. ஆட்சியில் தற்போது தருமபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7 ஆயிரம் நெல் மூட்டை மாயமாகி உள்ளதாக செய்தித்தாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    சர்க்கரையை எரும்புதின்றது. சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள் 7 ஆயிரம் நெல் மூட்டைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

    மக்கள் வரிப்பணத்தில் உல்லாச பயணம் சென்றிருக்கும் இந்த சர்க்கஸ் அரசின் முதலமைச்சர் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெல் மூட்டைகள் மாயமாவதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாயமான 7 ஆயிரம் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×