search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சிவகங்கை அருகே மொபட்டில் கொண்டு சென்ற ரூ.17 லட்சம் பறிமுதல்

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    சிவகங்கை:

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது மேலும் பணநடமாட்டத்தை கட்டுப்படுத்த பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் நியமனம் செய்து தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சிவகங்கையை அடுத்த இலந்தங்குடிபட்டி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியில் வந்த மொபட்டை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த மொபட்டை ஓட்டிவந்த காரைக்குடியை அடுத்த கோட்டையூரை சேர்ந்த வைரவபிரகாஷ் என்பவரிடம் ரூ.17 லட்சத்து 19 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவரிடம் பணத்துக்கான ஆவணங்கள் இல்லை.

    இதை தொடர்ந்து ரூ.17 லட்சத்து 19 ஆயிரத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தொகை சிவகங்கை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
    Next Story
    ×