search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வெட்டு கண்டுபிடிப்பு"

    • மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி சிறப்பு பூஜை செய்து வழிபடும் பண்பாடு இம்மண்ணுக்கு உரியது.
    • தமிழகத்திலேயே தருமபுரியை கல்வெட்டு பூமி என சொல்வதுண்டு.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் காடுகளையும் காடுகளையொட்டிய வாழ்வியலை உள்ளடக்கய பூமி. தமிழ் நிலங்களில் குறிஞ்சியும், முல்லையும் நிரம்பியிருந்தாலும் முல்லை பூமியாக இருக்கிறது. இங்கு ஆதிகாலம் தொட்டே கால்நடைகளை மேய்பதும், வளர்பதும், மேட்டு நிலங்களை பண்படுத்தியும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலத்தில் பொங்கல் திருவிழா காலம் காலமாக ஆட்டுப்பட்டி பொங்கல் மாட்டுப்பட்டி பொங்கல் என பட்டிப் பொங்கல் மிக பிரசக்தி பெற்றது.

    ஆடுகளை காட்டில் மேய்ந்துவிட்டு வந்து அடைக்கப்படும் பட்டியிலும் விவசாயமாடுகள் வாழும் வீடான பட்டியிலும் பொங்கல் வைத்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் இந்த மண்ணில் பொங்கல் திருவிழாவில் கால்நடைகளுக்கு நன்றி சொல்லி மரியாதை செலுத்தும் மாட்டுப்பொங்கலை வெகு விமர்சியாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி சிறப்பு பூஜை செய்து வழிபடும் பண்பாடு இம்மண்ணுக்கு உரியது.

    தமிழகத்திலேயே தருமபுரியை கல்வெட்டு பூமி என சொல்வதுண்டு. இப்போது வாழ்வியலை புத்தகத்தில் பதிவு செய்வது போல அக்கால கல்வெட்டில் ஆட்சியாளர்களை பற்றிய குறிப்புகளும் தாம் வாழும் காலத்திய அடையாளங்களையும் கல்வெட்டில்பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் உழவுத்தொழில் செய்யும் கல்வெட்டு இருப்பது ஆச்சரியம்தானே!

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்திலிருந்து ஏரியூர் செல்லும் சாலையில் இருக்கிறது அளேபுரம்.

    குளத்தங்கரையை தாண்டி அளேபுரத்திற்கு செல்லும் வழியில் இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

    இந்த கல்வெட்டில் ஏர் உழும் காட்சியை கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறார்கள். தமிழகத்திலேயே ஏர் உழுதலை போன்ற கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

    பொங்கல் திருநாளில் உழவுக்கு உதவிய மாடுக ளுக்கு மரியாதை செலுத்தும் இந்த நேரத்தில் இந்த கல்வெட்டிற்கும் நாம் மரியாதை செலுத்துவோம்.

    • எந்த நூற்றாண்டைச் சேர்ந்த கல் வெட்டு என்று அதிகாரப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
    • தமிழ் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக முன் வைத்து உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம் தேரூர் குறண்டியில் கோரக்கர் சித்தர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பிரதோஷ விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று கோரக்கர் சித்தரை வழிபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த கோவிலின் தெற்கு பகுதியில் பழங்கால தமிழ் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது, இதனைகன்னியா குமரி அருகே உள்ள கொட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சுந்தர்என்பவர் இந்த கோவிலுக்கு சென்று இருந்தபோது இந்தகல்வெட்டை கண்டுபிடித்து உள்ளார்.

    மேலும் இந்த கல் வெட்டை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து கள ஆய்வு செய்து, எந்த நூற்றாண்டைச் சேர்ந்த கல் வெட்டு என்று அதிகாரப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்ட தொல்லியல்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் குறண்டி கோரக்கர் சித்தர் கோவிலை புனரமைக்க இது வழிவகுக்கும் என்றும் பக்தர்கள் கோவிலின் தொன்மையை தெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் தமிழ் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக முன் வைத்து உள்ளனர்.

    • வல்லவன் கோட்டை என்ற கிராமம் பல்கலைக்கழகத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
    • வட்டெழுத்து கல்வெட்டை கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகரின் முயற்சியில் முதுகலை தொல்லியல் துறை பட்டப்படிப்பு இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.

    இந்த படிப்பில் 25 மாணவ-மாணவிகள் இப்போது படித்து வருகின்றனர். பேராசிரியர் சுதாகர் இந்த துறையின் தலைமை பொறுப்பை ஏற்று பணியாற்றி வருகிறார்.

    தொல்லியல் துணைப் பேராசிரியர் முருகன் மற்றும் துணைப் பேராசிரியர் மதிவாணன், முறைப்படி இந்த மாணவர்களுக்கு தொல்லியல் நுட்பங்களை கற்பித்து வருகின்றனர்.

    வல்லவன் கோட்டை என்ற கிராமம் பல்கலைக்கழகத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    இந்த கிராமத்திலிருந்து சுகன்யா என்ற மாணவி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் பட்டப்படிப்பு தொடர்ந்து வருகின்றார்.

    மாணவி சுகன்யா வகுப்பறையில் பேராசிரியர்கள் கற்றுக்கொடுத்த நுட்பத்தைப் பயன்படுத்தி வல்லவன் கோட்டையில் ஒரு பழமையான கல்வெட்டைக் கண்டுபிடித்தார்.

    இதனைப் பற்றி ஆய்வு செய்ய இந்த துறை பேராசிரியர்கள் மற்றும் தொல்லியல் படிக்கும் மாணவ-மாணவிகளும் வல்லவன் கோட்டைக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்பு குழுவினர் கூறியதாவது:-

    இந்த கல்வெட்டு இவ்வூருக்கு வெளியே மாடசாமி கோவிலில் உள்ளது. இந்த கல்வெட்டில் சந்தன மற்றும் குங்கும திலகமிட்டு கோட்டை மாடசாமி என்ற பெயரில் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    அதாவது வட்டெழுத்து கல்வெட்டை கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

    இந்தக் கல்வெட்டு கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதாவது 1228 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்டறிந்தனர். தமிழ் என தங்கள் குழந்தைகளுக்கு பெயரிட்டு மகிழும் தமிழ் சமூகம் இவ்வளவு பழமையான தமிழ் கல்வெட்டை மக்கள் வணங்குவதில் வியப்பேதும் இல்லை.

    மேலும் இந்த கோவிலுக்கு வடமேற்கே ஒரு கல்வட்டம் உள்ளது. கல்வட்டம் என்பது பல ஈமத்தாழிகளைப் புதைத்த இடம். இந்த இடத்தை அடையாளப்படுத்த தாழியைப் புதைத்த இடத்தைச் சுற்றி பெரிய பாறைகளால் ஒரு வட்டத்தை நம் முன்னோர்கள் உருவாகுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த கோவில் அருகே உள்ள இந்த வட்டக்கல் வட்டமாக இல்லை.

    மாறாக இது செவ்வக வடிவமாக உள்ளது. இது சுமார் 6 சென்ட் பரப்பளவில் சதுர வடிவில் பெரிய கருங்கல் பாறைகளால் இதனை உருவாக்கியுள்ளனர்.

    இந்த அமைப்பு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • எழுத்துக்களை வாசித்ததில் கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு என்பது தெரிய வந்தது.
    • முற்கால, பிற்கால பாண்டியர் காலத்தில் மன்னர்கள் கோவிலை நிர்மாணித்து அக்கோவிலுக்கு நிலங்களை தானமாக வழங்கினர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் கோட்டூர் பஸ் நிலையம் அருகே சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இதன் சுற்றுச்சுவர் பகுதியில் 2 கல்வெட்டுகள் வைகை தொல்லியல் பண்பாட்டு கழக நிறுவனர் பாவெல் பாரதி தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்து ஆய்வு செய்தனர்.

    இதில் உள்ள எழுத்துக்களை வாசித்ததில் கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு என்பது தெரிய வந்தது. இதில் கோட்டூரின் பழைய பெயர் மாதேவநல்லூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு 31 அங்குலம் நீளமும், 17 அங்குலம் அகலமும், 9 அங்குலம் கனமும் கொண்டுள்ளது. இதில் அளநாட்டைச் சேர்ந்த மாதேவநல்லூரில் தென்னடை பிரானார் கோவில் அகம்படி முதலிகளில் வடுகன் திருவாலி சீவலப்பன் என்ற வாசகம் தொடர்ச்சியின்றி உள்ளது. கோவிலின் இடது புறம் உள்ள இன்னொரு கல்வெட்டில் கோட்டூரின் பெயர் கோட்டையூர் என்று இடம்பெற்றுள்ளது. இந்த கல்வெட்டின் தொடக்கப்பகுதி சிதிலமடைந்துள்ளது.

    இதில் மன்னரின் பெயரையோ, ஆட்சி குறித்தோ குறிப்பிட்டு இருக்கலாம். அதன்பின் பக்கமோ வடுவன் சீவலப்பன் நிலதானம் தொடர்பான செய்தி உள்ளது. இது குறித்து பாவெல் பாரதி கூறியதாவது:-

    முற்கால, பிற்கால பாண்டியர் காலத்தில் மன்னர்கள் கோவிலை நிர்மாணித்து அக்கோவிலுக்கு நிலங்களை தானமாக வழங்கினர். அதை மையப்படுத்தி ஊர்கள் உருவாக்கப்பட்டன.

    அத்தகைய ஊர்கள் நல்லூர் என அழைக்கப்பட்டன. இன்றைய கோட்டூரில் சிவன் கோவிலை நிர்மாணித்து அக்கோவிலுக்கு நிலம் தானம் வழங்கி மாதேவநல்லூர் என்று பெயர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் வீற்றிருக்கும் கடவுள் சிவன் தென்னடை பிரானார் என்று அழைக்கப்பட்டுள்ளார். இந்த கல்வெட்டுகள் குறித்து தஞ்சாவூர் கல்வெட்டுக்கழகம் மற்றும் சென்னையில் உள்ள தொல்லியல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொட்டனுார் என்ற ஊரில் கோவில் நிலத்தில் உள்ள கல்வெட்டை படி எடுக்கப்பட்டது.
    • வரதராச பெருமாள் கோவில் மேற்கு நோக்கி மலையின் மேற்கு பக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் அறம் கிருஷ்ணன் கொடுத்த தகவலின்படி கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப் படுத்தும் குழுவும் இணைந்து, வரலாற்றுக் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மாரண்டபள்ளி பஞ்சாயத்தில், தொட்டனுார் என்ற ஊரில் கோவில் நிலத்தில் உள்ள கல்வெட்டை படி எடுக்கப்பட்டது.

    இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    கோவில் நிலத்தில் இந்த கல்வெட்டு இன்னும் கிராமத்து மக்கள் மெட்டுக்கால் அப்ப பெருமாள் என்று வழிபட்டு வருகின்றனர். இந்த பெயரே 650 ஆண்டுகள் பழமையானது என்பது கல்வெட்டு வாயிலாக தெரிய வருகிறது. கல்வெட்டில் பெரிதாக சக்கரம் வரையப்பட்டுள்ளது.

    அதன் இரண்டு பக்கமும் சந்திர சூரியனும், சக்கரத்தின் அருகே சங்கும், குத்து விளக்கும் காணப்படுகிறது. இந்த பஞ்சாயத்தின் பெயரான மாராண்டப்பள்ளி 650 ஆண்டுகளுக்கு முன் முடமாராண்டான்பள்ளி என்பதும், இக் கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது.

    இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்படாத பலகை வாவிபற்று விஜயநகர மன்னர் வீர கம்பன உடையார் காலத்தில் இருந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. பற்று என்பது நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட பகுதி. தற்போதுள்ள தாலுக்கா போன்ற ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டில் அஸ்தகிரியில் உள்ள வரதராச பெருமாள் கோவிலுக்கு கொடுக்கப்பட்ட தானத்தைப்பற்றி கூறுகிறது.

    தற்போதுள்ள சூளகிரி 650 ஆண்டுகளுக்கு முன் அஸ்தகிரி என்று அழைக்கப்பட்டு வந்திருக்கி றது. தற்போதும் அந்த சூளகிரியில் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள வரதராச பெருமாள் கோவில் உள்ளது.

    அஸ்தகிரி என்பது சூரியன் மறையும் மலை என்பதற்கு ஏற்ப வரதராச பெருமாள் கோவில் மேற்கு நோக்கி மலையின் மேற்கு பக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுப்பணியில், சரவணக்குமார், ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், கிராமத்தைச் சேர்ந்த மாரப்பகவுடா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கல்வெட்டு கோவில் காவலுக்கு வழங்கப்பட்ட கொடை பற்றி விவரிக்கிறது.
    • சவுமிய வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் இதனை கொடுத்துள்ளார் என்பதற்கான சான்றாக இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே கன்னிவாடி போலீஸ் நிலையம் எதிரே உள்ள பெருமாள் கோவிலில் சவுமிய வருட கல்வெட்டு உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் ஒட்டன்சத்திர அலுவலக ஆய்வாளர்கள் லட்சுமணமூர்த்தி மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த கல்வெட்டு கோவில் காவலுக்கு வழங்கப்பட்ட கொடை பற்றி விவரிக்கிறது. கன்னிவாடியில் பெரியகாளி கோவில் காவலுக்கு குமார நரசிம்ம அப்பயன் என்பவரை நியமித்துள்ளனர்.

    இதற்கான செலவீனங்களை கொப்பம்மா என்பவர் ஏற்றுள்ளார். சவுமிய வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் இதனை கொடுத்துள்ளார் என்பதற்கான சான்றாக இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வேலன்பட்டி அன்னதான மடத்திற்கு தானமாக கொடுக்க பட்ட ஊர் நத்தம் அருகே பள்ளப்பட்டி கிராமம்.
    • எல்லைக்கு உள்ளிட்ட இடங்களில் சூலம் குறியிட்ட 19 அடையாளங்கல் நடப்பட்டுள்ளது.

    குள்ளனம்பட்டி:

    நத்தம் அருகே நத்தம் பாளையக்காரர் லிங்கையநாயக்கர் அன்னதானமடம் அளித்தற்கான 16-ம் நூற்றாண்டு கல்வெட்டு திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விஷ்வநாததாஸ், தலித்சந்திரசேகர், ரத்தினமுரளிதர் ஆகியோர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

    அன்னதான மடத்திற்கு நத்தம் பாளையக்காரர் லிங்கம நாயக்கர் கல்வெட்டு பட்டையம் ஸ்வஸ்தி ஸிரி சாலி வாகன சகாப்தம் 1571, கலியுகம் 4750, (இதற்கு‌ ஆங்கில ஆண்டு 1649) தினம் செல்லா நின்ற விரோதி வருடம் கார்த்திகை மாதம் ஐந்தாம் நாள் சோம வாரமும் திருதிகையும் மூல நட்சத்திரமும் கூடிய சுப தினத்தில் யாதவ கொக்கி குல காப்பவர் ஆகிய தொந்திலிங்கைய நாயக்கர் மகன் முத்திலிங்கைய நாயக்கர்.

    அவர்கள் வேலன்பட்டி அன்னதான மடத்திற்கு தானமாக கொடுக்கப்பட்ட ஊர் நத்தம் அருகே பள்ளப்பட்டி கிராமம். அதன் அருகே உள்ள மினங்கு மக குளம் அதற்கு உட்பட்ட நஞ்சை புஞ்சை விவரம் பூதக்குடி மலை நாளிக்கல் கருங்கல் பாறை இரக்கம் இது ஈசான மூலை (வடகிழக்கு எல்லை) அதன் நேர் கட்டுக்கால்,உசில மரம் இது அக்னி மூலை (தென்கிழக்கு எல்லை) கொங்கான கரை (காட்டு ஓரம்) இது கன்னி மூலை (தென்மேற்கு எல்லை) வாயு மூலை (வடமேற்கு எல்லை) கோப்பையம் பட்டி குளத்து மதகு அன்னதான மடத்திற்கு இந்த எல்லைகள் கொண்ட பள்ளப்பட்டி ஊர் குளம் அதற்கு உட்பட்ட நஞ்சை புஞ்சை நிலங்கள் மடத்திற்கு தானமாக வழங்கினார்.

    இந்த எல்லைக்கு உள்ளிட்ட இடங்களில் சூலம் குறியிட்ட 19 அடையாளங்கல் நடப்பட்டுள்ளது. இந்நிலங்களில் நஞ்சை புஞ்சையில் அரசு நிர்வாக நிலங்கள் நீக்கலாக புஞ்சை 903 நஞ்சை 23 இவை அஷ்ட போக தேச சுவாமிகள் தனச சந்திரர் நிர்வாகிக்கும் தர்ம பரிபாலனம் பண்ணி கொண்டு வருவார். அவருடன் மற்றவர்களும் பரிபாலனம் பண்ணி வர இக்கல்லையும் மடத்தையும் யாரும் சேதப்படுத்தினால் கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற பாவம் வரும். என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

    இந்த கல்வெட்டு 16-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகவும், லிங்கயநாயக்கர் மகன் முத்துலிங்கயநாயக்கர் வேலன்பட்டி அன்னதான மடத்திற்கு தானமாக கொடுக்கப்பட்ட ஊர் பள்ளபட்டி கிராமமாகும். இந்த அன்னதான மடம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது.

    இதுபோன்ற பழமையான கல்வெட்டு மண்டபங்கள், நினைவுச்சின்னங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றனர்.

    ×