search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddhar Temple"

    • எந்த நூற்றாண்டைச் சேர்ந்த கல் வெட்டு என்று அதிகாரப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
    • தமிழ் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக முன் வைத்து உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம் தேரூர் குறண்டியில் கோரக்கர் சித்தர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பிரதோஷ விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று கோரக்கர் சித்தரை வழிபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த கோவிலின் தெற்கு பகுதியில் பழங்கால தமிழ் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது, இதனைகன்னியா குமரி அருகே உள்ள கொட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சுந்தர்என்பவர் இந்த கோவிலுக்கு சென்று இருந்தபோது இந்தகல்வெட்டை கண்டுபிடித்து உள்ளார்.

    மேலும் இந்த கல் வெட்டை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து கள ஆய்வு செய்து, எந்த நூற்றாண்டைச் சேர்ந்த கல் வெட்டு என்று அதிகாரப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்ட தொல்லியல்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் குறண்டி கோரக்கர் சித்தர் கோவிலை புனரமைக்க இது வழிவகுக்கும் என்றும் பக்தர்கள் கோவிலின் தொன்மையை தெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் தமிழ் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக முன் வைத்து உள்ளனர்.

    • ஸ்ரீ சக்தி வாராகி சித்தர் கோவில் மகா கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
    • யாகத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தம்பதிகள் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் போலீஸ் லைன் 2-வது தெருவில் உள்ள ஸ்ரீ சக்தி வாராகி சித்தர் கோவில் மகா கும்பாபிஷேகம் காலை 6 மணி அளவில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வாராகி அம்மனுக்கு தீபாராதனைகள் நிகழ்ச்சி நடைபெற்றது. கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், சண்டி ஹோமம், சக்தி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டது.

    மேலும் கணவன்- மனைவிகளுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.இதில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தம்பதிகள் கலந்து கொண்டு வாராகி அம்மனின் அருளை பெற்றனர். இதனைத் தொடர்ந்து வாராகி அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம், அரிசி மாவு அபிஷேகம், காய்கறி அபிஷேகம், தேன் அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×