என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • கீழடியில் 8-ஆம் கட்ட அகழாய்வுப்பணிகள் முடிந்த பிறகு அகழாய்வு வைப்பகம் திறந்து வைக்கப்படும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • புதிய தொழில்நுட்பத்தில் ஒலி அமைப்புடன் கண்ணாடியில் காட்சிப்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கொந்தகை கிராமத்தில், கீழடியில் கட்டப்பட்டு வரும் புதிய அகழாய்வு வைப்பக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியகருப்பன், பி.மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகழாய்வு வைப்பக கட்டுமானப் பணிகள் முழுமை பெற்றுள்ளது. அகழ் வைப்பகத்தில் அகழ்வராய்ச்சியின் மூலம் கண்டெடுக்கப் பொருட்கள் உலகத்தரத்திலான வகையில் காட்சிப்படுத்த துறை வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, வரைபடங்கள்

    தயாரிக்கப்பட்டு சுவற்றில் காட்சிப்படுத்த வேண்டிய பொருட்கள், புதிய தொழில்நுட்பத்தில் ஒலி அமைப்புடன் கண்ணாடியில் காட்சி ப்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

    அந்தவகையில் ஏறத்தாழ 10,210 வகை பொருட்களை காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அகழ்வராயச்சி பொ ருட்களை காட்சிப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்ப ணிகளால் அகழாய்வு வைப்பகம் திறந்து வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை கிடைத்துள்ள பொருட்களையும் காட்சிப்படுத்த இதுவும் ஒருவகையில் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    தற்போது 8-ஆம் கட்ட அகழாய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெற்றபின் முதலமைச்சர் மூலம் அகழாய்வு வைப்பகம் திறந்து வைக்கப்படும். கீழடியில் அகழ்வராய்ச்சியின் மூலம் கிடைக்கும் பொருட்களை காட்சிப்படுத்தியும் அந்த பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு புரியும் வகையில் குறும்படங்கள் மூலம் விளக்கப்படுத்திடவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    முன்காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் முதல் தற்போது வரை பயன்படுத்திய பொருட்கள் குறித்த குறும்படம் தயாரிக்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ஜனவரி மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது தமிழரசிரவிக்குமார் எம்.எல்.ஏ., முதன்மை தலை மைப்பொறியாளர் விஸ்வநாதன், மதுரை மண்டல தலைமைப்பொ றியாளர் ரகுநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (பாரம்பரிய கட்டிடக்கோட்டம்) மணிகண்டன், தொல்லியியல் துறை இணை இயக்குநர் ரமேஷ், திருப்புவனம் பேரூராட்சித்தலைவர் சேங்கைமாறன், கீழடி ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆண்களுக்கு இணையாக பெண்கள் வீரமிக்கவர்களாக திகழவேண்டும் என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • முதல்-அமைச்சர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை அரண்மனை வளாகத்தில் வீரமங்கை வேலுநாச்சியாரின் இசையார்ந்த நாடக விழா நடந்தது. இதை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

    சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட தமிழர்களின் அளப்பறியாப் பங்கு குறித்தும், வீரர்களின் தியாகம் குறித்தும், போராட்டங்கள் குறித்தும், தாய்மொழியான தமிழ்மொழி குறித்தும், வீரம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவைகளில் பங்கு பெற்ற முன்னோர்களை கவுரவிக்கும் வகையிலும் இதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் முதல்-அமைச்சர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    வீரமங்கை வேலுநாச்சியாரின் இசை நாடகம் அவர் வாழ்ந்த அரண்மனை வளாகத்தில் நடைபெறுவது, சிவகங்கை மண்ணிற்கு பெருமை சேர்க்கப்பதாகும். வெள்ளையனை வீரப்போர் புரிந்து எதிர்த்து, எதிரிகளை துவம்சம் செய்த காட்சிகளை கண் முன் எடுத்துக்காட்டும் நிகழ்வு சிறப்பாக இருந்தது.

    இளைய தலைமுறை யினரான எதிர்காலச் சந்ததியினர் வேலுநாச்சியார் சிறப்பை அறிந்து கொள்ளும் வகையில் இந்த நாடகம் இருந்தது. வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த இசை நாடகத்தை அனைவரும் கண்டு களித்து, வீரம், நாட்டுப்பற்று மிக்கவராகவர்களாகவும், குறிப்பாக ஆண்களுக்கு இணையாக பெண்கள் வீரமிக்கவர்கள் என்பதை நிருபிக்கும் வகையிலும் வீரப்பெண்மணிகளாக திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை), பி.ஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை), ராணி மதுராந்தகி நாச்சியார், ராஜ்குமார் மகேஷ்துரை, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் சுகிதா, ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, வட்டாட்சியர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாலாற்று படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
    • வெள்ள நீர் புகுந்துவிடும் என கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியை சுற்றி அமைந்துள்ள திருங்காக் கோட்டை, முட்டாக்கட்டி, பிரான்மலை, எஸ்.வி. மங்க லம், காளாப்பூர், கண்ண மங்கலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்க ளாக மாலை நேரத்தில் கனமழை பெய்தது. இதனால் இரவு நேரத்தில் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் ஓடியது. மேலும் சிங்கம்புணரி ஒன்றிய பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு செல்லும் வாய்க்கால்கள் சரிவர பராமரிக்கப்படாததால் மழை நீர் சேமிக்க இயலாமல் வீணாகியது.மேலும் சிங்கம்புணரி வழியாக ஓடும் பாலாற்றில் கடுமையான சீமக்கருவை முள் ஆக்கிரமித்துள்ளதால் பாலாற்று படுகை அருகில் உள்ள அணைக்கரைப்பட்டி, ஓசாரிப்பட்டி, பட்ட கோவில் குளம், காளாப்பூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்குள் காட்டாற்று வெள்ளநீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது.

    அக்டோபர் நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ள பருவமழை காரணமாக காட்டாற்று வெள்ளமாக வரும். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் பாலாற்று படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கடன்உதவிகளை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம். மானாமதுரை தொகுதியில் உள்ள திருப்புவனம் பால்உற்பத்தியாளர் சங்கம் அதிக அளவில் பால்கொள்முதல் செய்யும் சங்கமாகும். இந்த சங்கத்திற்கு உட்பட்ட பால்உற்பத்தியாளர்களுக்கு திருப்புவனம் பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    திருப்புவனம்பேரூராட்சி தலைவரும், பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்க தலைவருமான சேங்கைமாறன் தலைமை தாங்கினார். மானாமதுரை ஒன்றிய குழு துணை தலைவர் மூர்த்தி, பால் உற்பத்தியாளர் சங்க மேலாளர் கிருஷ்ணன் மற்றும் கூட்டுறவு சங்க அலுவலர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது.
    • தீர்த்தவாரி- கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சி நாளை நடக்கிறது

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலான இங்கு மூலவராக விநாயகப் பெருமான் காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாளிலிருந்து தினந்தோறும் காலையில் வெள்ளிக் கேடயத்திலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் கற்பக விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

    விழாவில் கடந்த 27-ந் தேதி கஜமுக சூரசம்காரம் நடந்தது. நேற்று குதிரை வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளினார். முன்னதாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. 4‌.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் கற்பக விநாயகர் வீதி உலா வருகிறார். சிறிய தேரில் சண்டிகேஸ்வரர் வலம் வருகிறார். இதனை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பார்கள்.

    தேரோட்டத்தை முன்னிட்டு இன்று காலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அதன் பின் விநாயகர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடை பெறாமல் இருந்த தேரோட்டம் இந்த ஆண்டு இன்று மாலை நடை பெறுவதால் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மூலவரான கற்பக விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்கும் அதன்படி. நாளை சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று (30-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு கற்பக விநாயகர் காட்சியளிப்பார். இரவு 10 மணி வரை இந்த தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும்.

    விநாயகர் சதுர்த்தியான நாளை காலை கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பிற்பகலில் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும், இரவு பஞ்ச மூர்த்தி சுவாமி புறப்பாடும் நடக்கிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று முதல் பிள்ளையார்பட்டியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதையொட்டி பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மாவட்டம் நிர்வாகம் செய்து வருகிறது.

    • இஸ்லாமியர்களின் பங்கு குறித்த விளக்க கூட்டம் நடந்தது.
    • ஹாஜி மவுலானா மவுலவி முஹம்மது பாரூக் ஆலிம் மன்பஈ தலைமை தாங்கினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளி நிர்வாகிகள், ஜமாத்தார்கள் இணைந்து ''இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு'' குறித்த விளக்க கூட்டத்தை நடத்தியது.

    சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி மவுலானா மவுலவி முஹம்மது பாரூக் ஆலிம் மன்பஈ தலைமை தாங்கினார். பெரிய பள்ளிவாசல் துணைத்தலைவர் பாபா அமீர் பாதுஷா முன்னிலை வகித்தார். மதரசா ஆசிரியர் மவுலானா ஷேக் பாசில் யூசுப் கிராஅத் ஓதினார். மஸ்ஜித் அல் அக்ஸா பள்ளி மவுலானா முஹம்மது சிராஜுதீன் கீதம் பாடினார், இமாம் ஹிதாயா ஜும்மா பள்ளிவாசல் இமாம் மவுலானா நூருல் அஜீம் மிப்தாஹி தொகுத்து வழங்கினார். திருப்பத்தூர் வட்டார உலாமா சபை தலைவர் மவுலானா சையது முகமது இல்ஹாமி வரவேற்றார்.

    திருப்பத்தூர் பெரிய பள்ளிவாசல் செயலாளர் சிக்கந்தர் பாதுஷா, தாருல் உலூம் தாவத்துல் ஹூதா மதரஸா தலைமை ஆசிரியர் மவுலானா மவுலவி முஹம்மது ஆதில் தாவூதி, கவிஞர் பாரதன், சிவகங்கை மாவட்ட உலமா சபை தலைவர் மவுலானா முஹம்மது ரிலா பாக்கவி ஆகியோர் ஆகியோர் பேசினர். மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் தலைவர் அப்பாஸ் அலி நன்றி கூறினார்.

    • மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று வருகிற 2-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ன் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலமாக திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைக்கும் திட்டத்தில் பொதுப் பிரிவில் 1 ஹெக்டேர் (40 சதவீத மானியம்) மற்றும் பெண்களுக்கு 1 ஹெக்டேர் (60சதவீத மானியம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்கும் திட்டத்தில் பெண்களுக்கு 4 ஹெக்டேர் (60 சதவீத மானியம்), ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு 1 ஹெக்டேர் (60சதவீத மானியம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்தில் பெண்களுக்கு 4 ஹெக்டேர் (60 சதவீத மானியம்), ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு 1 ஹெக்டேர் (60சதவீத மானியம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவிலான பயோபிளாக் குளங்க ளில் மீன்வளர்ப்பு செய்த லுக்கான மானியம் வழங்குதல் திட்டத்தில் பொதுப் பிரிவில் 1 அலகு (40சதவீத மானியம்), பெண்களுக்கு 2 அலகுகள் (60சதவீத மானியம்), ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு 2 அலகுகள் (60சதவீத மானியம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று வருகிற 2-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், 5/3, யூனியன் வங்கி மாடி, பெருமாள் கோவில் தெரு, சிவகங்கை - 630561 என்ற முகவரிக்கும், 04575-240848 என்ற தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • வட்டார அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
    • இதில் 5-0 என்ற கோல் கணக்கில் ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்றது.

    சிவகங்கை

    சிவகங்கை வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையே 14 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான ஆக்கி போட்டி சிவகங்கை மாவட்ட திறந்தவெளி விளையாட்டரங்கில் நடந்தது. இறுதிப் போட்டியில் சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி-சுவாமி விவேகானந்தா பள்ளி அணிகள் மோதின.

    இதில் 5-0 என்ற கோல் கணக்கில் ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்றது. முதல்வர் புஷ்பம் மற்றும் ஆசிரியர்கள், வெற்றி பெற்ற வீராங்கனைகள், உடற்கல்வி ஆசிரியர் மோகன் ஆகியோரை பாராட்டினர்.

    • சித்த மருத்துவ முகாம் நடந்தது.
    • இதில் 230 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி ஒன்றியம் காப்பரப்பட்டி சமுதாயக்கூடத்தில் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சித்த மருத்துவ விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செம்மலர் சந்திரன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு, ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெயசுந்தரி சக்திவேல் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் சித்த மருந்து வழங்குதல், வர்ம சிகிச்சை, மூலிகை கண்காட்சி, சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு, யோகா பயிற்சி, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, கண் பரிசோதனை ஆகியவை பொதுமக்களுக்கு செய்யப்பட்டது. இதில் 230 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    • மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடு களை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கீழச்சேவல் பட்டி போலீசார் பாது காப்பு ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள விராமதி ஊராட்சியில் கோவில் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பந்தையை மாடுகளுடன் சாரதிகளும் பங்கேற்றனர். இதில் பெரிய மாடு, நடுமாடு, சிறிய மாடு, பந்தயம் என 3 பந்தயமாக விராமதியிலிருந்து நெடுமறம் ஊர் எல்லை வரை சென்று திரும்ப வேண்டும் என விழா குழு கமிட்டியிணரால் நிர்ணயம் செய்யப்பட்டது.

    3 கட்டங்களாக நடத்த ப்பட்ட எல்கை பந்தயத்தில் பெரிய மாடுகள் பங்கேற்ற போட்டியில் முதல் பரிசினை நல்லாங்குடி அமராவதி புதூர் முத்தையா சேர்வை, வேலு கிருஷ்ணன் அம்பலம் ஆகியோர் பெற்றனர்.2-ம் பரிசை கானாடுகாத்தான் ஆர்.எஸ். கோழி கடையும், 3-ம் பரிசை பாஸ்கரன் மகேஸ்வரியும் ,4-ம் பரிசை மாவூர் ஏஆர்.ராமச்சந்திரன் பெற்றனர்.

    நடுமாடு முதல் பரிசு பரளி யாழினி பெரிய கருப்பன், 2-ம் பரிசு நல்லாங்குடி அமராவதி புதூர் வேலுகிருஷ்ணன் அம்பலம், முத்தையா சேர்வை, 3-ம் பரிசு நெய் வாசல் சாத்தி க்கோட்டை பெரியசாமி கருப்பையா சேர்வை, 4-ம் பரிசு காரைக்குடி மகிழ்மித்திரன் ஆகியோர் பெற்றனர். சின்ன மாடு பந்தயத்தில் முதல் பரிசு நல்லாம்பட்டி ஆர்விபி நித்திஷ் மங்கை, 2-ம் பரிசு ஓனாங்குடி எல்லா புகழும் இறைவனுக்கே அப்துல்லா, ஆர்.ஆர். சின்னம்மாள் வளையவயல், 3-ம் பரிசு கம்பம் வக்கீல் போது ராஜா, கூடலூர் அச்சரம் பட்டி மாதவ கோனார், நான்காம் பரிசு பில்லமங்கலம் வாசுதேவன் ஆகியோர் பெற்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கீழச்சேவல் பட்டி போலீசார் பாது காப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.37.88 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி பாரதி நகரில் பகுதி நேர நியாயவிலைக்கடை திறப்பு விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று ரேசன்கடையை திறந்து வைத்தார். மேலும் 78 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு ரூ.37.88 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள், 59 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் அவர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

    குடும்ப அட்டை தாரர்களின் சிரமத்தைப் போக்குவதற்காக 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகளை பிரித்து தனியாக புதிய நிலைவிலைக்கடைகள் அமைக்க முதல்-அமைச்சர் ஆணையிட்டதற்கிணங்க, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதில், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி பாரதி நகரில், தற்போது செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடையில் 454 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறப்பு பொது விநியோகப் பொருட்கள் மாதந்தோறும் உரிய அளவின்படி விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    கிருங்காக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அணை க்கரைப்பட்டி பகுதி நேர நியாயவிலைக்கடையில் பாரதி நகர் கிராமத்தில் 168 குடும்ப அட்டைகள் உள்ளன.

    பாரதி நகர் கிராமம் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளதால், பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று புதிய பகுதி நேர நியாயவிலைக்கடை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி அத்தியாவசியப் பொருட்களை பெறும் வகையிலும், மகளிர் சுயஉதவிக் குழு கட்டிடத்தில் இயங்குவதற்கு பகுதிநேர நியாயவிலைக்கடையாக அமைக்கப்பட்டு, இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்று, பொதுமக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தமிழக அரசால் மேம்படுத்தப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் கோ.ஜீனு, துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) குழந்தைவேல், சரகத்துணைப் பதிவாளர் (காரைக்குடி) சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, வட்டாட்சியர் கயல்செல்வி, ஊராட்சி மன்றத்தலைவர் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிங்கம்புணரி பகுதியில் மட்டும் சுமார் 58 மில்லி மீட்டர் மழை பெய்தது.
    • இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த சிறுவர்கள் உள்பட 8 பேர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் ஓடிவரும் காட்டாற்று பாலாறாகும். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கரந்தைமலை பகுதியில் இருந்து உற்பத்தியாகி வரும் இந்த காற்றாற்று வெள்ளம் பருவமழை காலத்தில் மட்டுமே இந்த பாலாற்று படுகையில் நீர் வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று வெப்பச்சலனம் காரணமாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் சிங்கம்புணரி பகுதியில் மட்டும் சுமார் 58 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக சிங்கம்புணரி பாலாற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக ஆற்றின் இரு கரைகளைத் தொட்டு வெள்ள நீர் பாய்ந்து வந்தது.

    அதிகாலை 3 மணியிலிருந்து வரத்துவங்க தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வரும் நிலையில் பாலாற்று படுகை முழுவதும் புதர் போல் மண்டியிருக்கும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இதன் காரணமாக நீர் கடைமடை பகுதிகளை சென்று அடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    கருவேல மரங்கள் அதிகம் உள்ள காரணத்தினால் இனி பருவமழை காலத்தில் இந்த பாலாற்றில் ஏற்படும் தண்ணீர் வருகையால் இந்தப் பகுதி கரையோரங்களில் வாழும் வேங்கைபட்டி, அணைக்கரைபட்டி, பாரதி நகர் காளாப்பூர் முறையூர் பகுதி கிராம மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    ×