என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் முகாம்
- இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் முகாம் நடந்தது.
- முகாமில் 750 மாணவ-மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதல்வவர் அப்பாஸ் மந்திரி வழிகாட்டலின் படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் சிறப்பு முகாம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையான்குடி, தாலுகா அலுவலகத்துடன் இணைந்து நடத்தியது.
இதில் தாசில்தார் அசோக்குமார், மண்டல துணை தாசில்தார் முத்துவேல், சாலைகிராமம் துணை வட்டாச்சியர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர்கள் சதீஷ் குமார், ராமகிருஷ்ணன் மற்றும் லதா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 750 மாணவ-மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். முகாமினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஆதார் எண்ணைவாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டியதன் அவசியம் குறித்த கருத்தரங்கமும் நடந்தது.
Next Story






