என் மலர்
சிவகங்கை
- அடுத்த தேர்தலில் தி.மு.க. காணாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசினார்.
- இந்த திராவிட மாடல் என்பது பூச்சாண்டி காட்டக்கூடிய வேலை.
சிவகங்கை
சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பங்கேற்று பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப அரசியல் செய்து வருகிறார். ஒரு சாதாரண எளிய தலித் தி.மு.க. தொண்டனை வருகிற 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா?
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தலைவராக ஒரு சாதாரண எளிய தொண்டன் கட்சியின் கிளை செயலாளரை ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா? அப்படி சொன்னால்தான் திராவிட மாடல் ஆகும். இந்த திராவிட மாடல் என்பது பூச்சாண்டி காட்டக்கூடிய வேலை.
திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப அரசியல் செய்து வரும் தி.மு.க. அடுத்த தேர்தலில் காணா மல் போய்விடும்
இவ்வாறு அவர் பேசி னார். இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, கருணாகரன், அருள்ஸ்டிபன், சிவாஜி , சிவசிவஸ்ரீதர், சேவியர், பழனிச்சாமி, கோபி, மண்டல தகவல் தொழி ல்நுட்ப இணை செயலாளர் தமிழ்செல்வன்.
மகளிரணி செயலாளர் ஜாக்குலின், மாவட்ட மகளிரணி வெண்ணிலா சசிகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாலுகோட்டை மணிகண்டன், மணிமுத்து, பாசறை பொருளாளர் சரவணன்.
பாசறை இணை செயலாளர் சதீஸ்பாலு, கவுன்சிலர்கள் ராபர்ட், கிருஷ்ணகுமார், தாமு, மாணவரணி நகரசெய லாளர் ராஜபாண்டி, பாசறை இணை செயலாளர் மோசஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடக்கிறது.
- இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
குடியரசு தினமான வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குடியரசு தினம் அன்று காலை 11 மணியளவில் உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
அன்றைய கிராம சபைக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான ஜனவரி 26-ந் தேதியன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த ஊராட்சியில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும்.
கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தை ஒப்பிட்டு விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,பிரதமரின் குடியிருப்பு திட்ட பயனாளிகள் குறித்து விவாதித்தல்.
அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு,ஜல் ஜீவன் இயக்கம்,பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் போன்றவற்றை கிராம சபைக் கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருப்பத்தூர் அருகே கார் கவிழ்ந்து விபத்தில் கணவன்-மனைவி உயிர் தப்பினர்.
- விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் உதயஅரசன். இவர் தனது மனைவி மேனஸ்கா, 2 வயது மகன் ஆகியோருடன் காரில் மதுரைக்கு புறப்பட்டார். திருப்பத்தூர் அருகே உள்ள சுண்ணாயிருப்பு பகுதி அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த அவரது மேனஸ்கா, அவரது இரண்டு வயது மகன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு முதல் உதவி சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்
- திருப்பத்தூர் அருகே நடந்த விழாவில் விருதுகளை வாங்கி குவிக்கும் சிறுவனுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
- இளம் பயிற்சியாளர் என்ற விருதை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சொக்க நாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக சாதனை முயற்சியாக 133 மாணவ-மாணவிகள் ஒன்றிணைந்து 1330 திருக்குறளை சொல்லிக்கொண்டே கன சதுர தீர்க்கத்தில் தேசியக்கொடியை போல் ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழாவில் சொக்கநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்தண்ணங்கோட்டை கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார்-வளர்மதி ஆகியோரின் 6 வயது மகன் அபிமன்யு கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை படைத்து விருதுகள் வாங்கியதை பாராட்டி அவருக்கு "இளம் பயிற்சியாளர்" என்ற விருதை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், ஊராட்சி மன்றத்தலைவர் கண்ணன், துபாய் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. ஆட்சியில் 1½ லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
- நடப்பாண்டில் 50,000 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், அதிகரம், பில்லத்தியேந்தல் ஆகிய பகுதிகளில் ரூ. 18.47 லட்சம் மதிப்பில் 63 கிலோ வாட் கொண்ட புதிய மின்மாற்றிகளை அமைச்சர் பெரியகருப்பன் பொது மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:-
மின் இணைப்புகள்
முதல்-அமைச்சர் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில், எண்ணற்ற திட்டங்களை தொலை நோக்கு பார்வையுடன் சிந்தித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றி டும் பொருட்டு, பொது மக்களின் தேவை களை அறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.
நாட்டின் முதுகெழும் பாக திகழ்ந்து வரும் விவசாயி களின் நலனை காக்கின்ற வகையிலும், விவசாயப் பயன்பாட்டிற்கான புதிய மின் இணைப்புக்களை வழங்கிடும் பொருட்டு, நடவடிக்கைகள் மேற் கொள்வதற்கென 2021- 2022-ம் நிதி யாண்டில் விவசாயி களுக்கென 1 லட்சம் புதிய மின் இணைப்புகளும், நடப்பாண்டில் 50,000 புதிய மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற 1 ½ ஆண்டு கால ஆட்சியில் மொத்தம் 1,50,000 மின் இணைப்புக்களை விவ சாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கைகள் மேற் கொண்டு உள்ளார்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதுன்ரெட்டி, மின் உதவி செயற்பொறியாளர் கென்னடி, செல்லத்துரை, வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, உதவி பொறியாளர் அப்துல் காதர்,சிராவயல் ஊராட்சி மன்ற தலைவர் சரோஜாதேவி குமார், வாணியங்காடு ஊராட்சி மன்ற தலைவர் மீனா மாதவன், மற்றும் திருப்பத்தூர், கல்லல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்தனர்.
- நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த தின விழா சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் தலைமையில் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதில் நகர செயலாளர் பாலா, மாநில இளைஞரணி இணை செயலாளர் திருஞானம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் அழகப்பன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சித்தார்த்தன், தொகுதி செயலாளர் சக்கந்தி பழனி, மாவட்ட பாசறை செயலாளர் அங்குராஜ், தேவகோட்டை நகர செயலாளர் ரவிக்குமார், மாணவரணி செயலாளர் கண்ணதாசன், குணா பாண்டியன், மகளிரணி நிர்வாகி ராமாமிர்தம், முன்னாள் கவுன்சிலர் ரவி உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- நாட்டரசன்கோட்டையில் நடந்த பொங்கல் விழாவில் கலெக்டர் பங்கேற்றார்.
- செயல் அலுவலர் ஜெயராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் சுற்று லாத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பொங்கல் விழா நடந்தது. இதில் மாவட்ட மதுசூதன் ரெட்டி பங்கேற்றார்.
பின்னர் அவர் பேசுகை யில், நாட்டரசன்கோட்டை பேரூ ராட்சியில் சுற்றுலாத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழர்களின் புகழை பறைசாற்றும் வகையில் பரதநாட்டியம் மற்றும் பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த இந்த விழாவில், பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு சுற்றுலா வந்துள்ள வெளி நாட்டு சுற்றுலாப் பயணி களும் கலந்து கொண்டது பெருமைக்குரிய ஒன்றாகும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கலெக் டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, உதவி சுற்றுலா அலுவலர் சங்கர், காளையார்கோவில் வட்டாட்சியர் பஞ்சவர்ணம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சித் தலைவர் பிரியதர்சினி, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கார் மோதி, மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி பலியாயினர்.
- விபத்து, 2 பேர் பலி Accident, 2 killed
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது60). இவரது மனைவி கஸ்தூரி (54). இவர்கள் தீயனூரில் நடைபெறும் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அவர்கள் தீயனூர் விலக்கு பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கார் மோதியது.
இதில் படுகாயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி பொதுமக்கள் மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பலியான ராஜாமணி, கஸ்தூரி உடல்களை மீட்டுபிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மோதிய காரை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற கணவன்-மனைவி விபத்தில் பலியான சம்பவம் மிளகனூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பலத்த காயம் அடைந்த 25 பேர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
- காளை முட்டி சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் என்ற பார்வையாளர் உயிரிழந்தார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க 600-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அந்த காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
போட்டியில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து மஞ்சுவிரட்டை தொடங்கிவைத்தார்.
இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிப்பட்டன. பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் பரிசுகளை தட்டிச் சென்றன.
வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அண்டா, கட்டில், குக்கர், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் சீறிபாய்ந்து ஓடிய காளைகள் அங்கு திரண்டிருந்தவர்கள் பலரை முட்டிவிட்டு சென்றன. காளைகள் முட்டியதில் 130-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
பலத்த காயம் அடைந்த 25 பேர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் பார்வையாளராக வந்திருந்த மதுரை மாவட்டம் சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் (வயது 52) என்பவர், மாடு முட்டியதில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர், விவசாயி பெரியபுலியன் (வயது 80). மாட்டு பொங்கல் அன்று அதே பகுதியில் உள்ள வெள்ளிமலையாண்டி கோவில் அருகே நடந்து சென்றார். அந்த பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டில் கலந்துகொண்ட காளை ஒன்று, அந்த வழியாக ஓடிவந்தது. திடீரென அந்த காளை பெரியபுலியனை முட்டி தள்ளியது. படுகாயம் அடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கே.ராயவரம் நொண்டி ஐயா கோவில் திடலில் நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது.
இதில் காளை முட்டி சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் (50) என்ற பார்வையாளர் உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ராமச்சந்திரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடைபெற்றது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜி (72) என்ற மூதாட்டி சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த மாடு மூதாட்டியை முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.
இவ்வாறு வெவ்வேறு இடங்களில் நடந்த மஞ்சுவிரட்டு, எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 4 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.
- தேவகோட்டை அருகே தாய்-மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படை தேடுதல் வேட்டை நடந்தது.
- போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் கனகம், அவரது மகள் வேலுமதி ஆகியோர் கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்து இறந்தனர். இந்த சம்பவத்தில் வேலுமதியின் மகன் மூவரசு (வயது 12) என்ற சிறுவன் படுகாயம் அடைந்தான். அவனுக்கு மதுரை தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள்.
இந்த நிலையில் கண்ணங்கோட்டை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 3000-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்ணின் திருமணத்திற்கு நகைகள் மற்றும் பணம் வழங்க முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள்.
கூட்டத்தில் அனைத்து நாட்டார்களும் மற்றும் கிராமத்தார்களும் பங்கேற்ற னர். அவர்கள் 2 பெண்களை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற உண்மை குற்றவாளி கண்டுபிடிக்க வேண்டும்.பா திக்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும். மேலும் இழப்பீட்டு தொகையாக அரசு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். தேவகோட்டை பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளை விரை வில் கண்டுபிடிக்கவில்லை என்றால் தேவகோட்டையில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து கொலையுண்ட 2 பேரின் உடல்களை அவர்களது உறவினர்கள் வாங்க மறுத்து வந்தனர். இதுபற்றி அறிந்த அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன ரெட்டி, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆவின் சேர்மன் அசோகன், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத்தலைவர் ரமேஷ், தேவகோட்டை ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், கண்ணங்குடி ஒன்றிய தலைவர் சித்தனூர் சரவணன், மெய்யப்பன், கார்த்திக் மற்றும் கிராம மக்கள்அஞ்சலி செலுத்தி னர்.இதன் பிறகு கொலை யுண்ட கனகம், வேலுமதி உடல்களை உறவினர்கள் பெற்று அடக்கம் செய்தனர்.
இந்த கொலையில் துப்பு துலக்க போலீஸ் டி.ஐ.ஜி. துரை ஆலோசனையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ ராஜ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த கண்ணங்கோட்டை கிராமத்தில் முகாமிட்டு கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேவகோட்டையில் கடந்த சில மாதங்களாக பூட்டி இருக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பதும், பொருட்கள் கிடைக்க வில்லை என்றால் வீடுகளை தீயிட்டு கொளுத்துவதும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் இதுவரை பிடிக்காதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
- மழை இல்லாததால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டத.
- கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், காரைக்குளம் மற்றும் நெஞ்சத்தூர் பகுதிகளில் பருவமழை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பெறப்பட்டுள்ள பருவமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்வளங்கள் மேம்பாடு அடைந்து, விவசாயப் பயன்பாட்டிற்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. இருப்பினும், இளை யான்குடி உள்ளிட்ட சில வட்டாரங்களில் மழை குறைவாக பெறப்பட்டுள்ளதால், அந்த பகுதிகளில் விவசாய நிலங்களில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதுகுறித்து ஆய்வு செய்து அரசின் சார்பில் சில நிவாரணங்களை விவசாயி களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளும் வகையில், இளையான்குடி வட்டத்திற்கு ட்பட்ட காரைக்குளம் மற்றும் நெஞ்சத்தூர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த பகுதிகளில் இது தொடர்பாக கணக்கெ டுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்கான அறிக்கையை துறை ரீதியாக சமர்ப்பிப்பித்து, அரசால் வழங்கப்படும் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களின் பாதிப்புக்கள் குறித்த விபரங்களை துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். குறிப்பாக, தங்களது விளைநிலங்களில் நெற்பயிர்கள் மட்டும் பயிரிடுவது மட்டுமின்றி, மண்ணின் தன்மைக்கேற்றார் போல் பல்வேறு பயிர்கள் மற்றும் தானியங்களை பயிரிட்டும், அதன்மூலமும் உற்பத்தியைப் பெருக்கி, லாபம் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், இளையான்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தங்கபாண்டியன், வேளாண்மை அலுவலர் அழகர்ராஜா, வட்டாட்சியர் அசோக், துணை வேளாண்மை அலுவலர் சப்பாணிமுத்து, உதவி வேளாண்மை அலுவலர் யுவராணி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
- மகளிர் திட்ட மேலாளர் சரவணன் மற்றும் இளைஞர்கள், கிராம பெரியோர்கள், பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை ஒன்றியம் நாலுகோட்டை கிராமத்தில் சமுதாய பொங்கல் விழா நடந்தது. தாலுகா காவல் ஆய்வாளர் ரமேஷ். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரத்தினவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாட்டை நாலுகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன் செய்திருந்தார்.
இதில் ஊராட்சி அலுவலகம் முன்பு 5 பானைகளில் பொங்கலிட்டனர். சிறுவர்-சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சக்தி, மகளிர் குழு உறுப்பினர்கள் தமிழரசி, மாசிலாமணி, மீனாட்சி, நேத்ரா, காளியம்மாள், கனிமொழி, பாண்டீசுவரி, வீரம்மாள், பால்ரூபதி, புவனேசுவரி, பாண்டியம்மாள், அம்பிகா, நாலுகோட்டை ஊராட்சி செயலர் சோனையா, வழக்கறிஞர் ராம்பிரபாகர், இணை இயக்குநர் நாராயணன், உதவிதிட்ட அலுவலர்கள் அன்புராஜ், குபேந்திரன், வட்டார மகளிர் திட்ட மேலாளர் சரவணன் மற்றும் இளைஞர்கள், கிராம பெரியோர்கள், பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.






