search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் கவிழ்ந்து விபத்தில் கணவன்-மனைவி உயிர் தப்பினர்
    X

    கார் கவிழ்ந்து விபத்தில் கணவன்-மனைவி உயிர் தப்பினர்

    • திருப்பத்தூர் அருகே கார் கவிழ்ந்து விபத்தில் கணவன்-மனைவி உயிர் தப்பினர்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் உதயஅரசன். இவர் தனது மனைவி மேனஸ்கா, 2 வயது மகன் ஆகியோருடன் காரில் மதுரைக்கு புறப்பட்டார். திருப்பத்தூர் அருகே உள்ள சுண்ணாயிருப்பு பகுதி அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த அவரது மேனஸ்கா, அவரது இரண்டு வயது மகன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு முதல் உதவி சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

    Next Story
    ×