என் மலர்
சிவகங்கை
- தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது என நடிகர் சிங்கமுத்து பேசினார்.
- வருங்காலங்களில் ஒரே குடும்பத்தினர் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆர்ச் உட்புறம் அண்ணா அரங்கில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் காரைக்குடி தொகுதி அ.தி.மு.க. சார்பில் நடந்தது. சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் சிங்கமுத்து, மதுரை தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசும்போது, கருவறை முதல் கல்லறை வரை சிறப்பான திட்டங்களை அ.தி.மு.க. கொண்டு வந்து செயல்படுத்தியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அ.தி.மு.க. செயல்படுத்திய தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, பெண்களுக்கு மானிய இருசக்கர வாகனம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. இதனால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.
திரைப்பட நடிகர் சிங்கமுத்து பேசுகையில், தி.மு.க. வாரிசு அரசியலை ஊக்கப்படுத்தி வருகிறது. வருங்காலங்களில் ஒரே குடும்பத்தினர் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஈேராடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில்போட்டியிடும். அந்த சின்னம் கிடைக்கா விட்டால் வேறு சின்னத்தில் நின்று வெற்றி பெறும் என்றார்.
கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் தேவகோட்டை தெற்கு தசரதன், வடக்கு முருகன், கண்ணங்குடி தெற்கு பெரிய சாமி, வடக்கு சரவணன், காரைக்குடி நகர் செயலாளர் மெய்யப்பன், ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், நடராஜன், நகர்மன்ற துணைத் தலைவர் ரமேஷ், கண்டதேவி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பேரவை இணைச் செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
- விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு பணி நடக்கிறது.
- இது தொடா்பான கூடுதல் தகவல்களை பெற www.airmenselection.cdac.in என்ற இணையதள முகவரி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய விமானப் படையில் Medical Assistant (Male Candidates) பணிக்கு, சிவகங்கை மாவட்டம் உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தை சேர்்ந்தோர்்களுக்கான, ஆட்சோ்ப்பு பணி சென்னை தாம்பரத்தில் உள்ள எண் 8, Airman Selection Centre, Air Force Station-ல் வருகிற 1.2.2023 முதல் 9.2.2023 வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த வா்களுக்கு 1.2.2023, 2.2.2023 மற்றும் 7.2.2023, 8.2.2023 ஆகிய தேதிகளில் மேற்கண்ட ஆட்சோ்ப்பு பணி நடைபெற உள்ளது. மணமாகாத ஆண்கள் 27.6.2002 முதல் 27.6.2006-க்குள் பிறந்திருக்க வேண்டும். மணமான ஆண்கள் 27.6.1999 முதல் 27.6.2004-க்குள் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதியில் 10, பிளஸ்-2 இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்தில் தோ்ச்சி பெற்று குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2 வருடங்களுக்கான Vocational Course, Non-vocational பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலத்தில் தோ்ச்சி பெற்று குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
10, பிளஸ்-2 இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்தில் தோ்ச்சி பெற்று குறைந்தபட்சம் 50சதவீதம் மதிப்பெண்கள் தோ்ச்சி பெற்று, கூடுதலாக டிப்ளமோ,B.Sc (பார்மசி), படிப்பில் தோ்ச்சி பெற்று 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதியில் Medical Assistant பணிக்கு 152.2 செ.மீ உயரமும், மார்்பளவு 5 செ.மீ விரிவடைய வேண்டும். Visual Acutely 6/36 each eye, Correctable to 6/9 each eye எனவும் not exceeding + 3.50 D including Astigmatism, Colour vision CP -III எனவும் இருக்க வேண்டும்.இது தொடா்பான கூடுதல் தகவல்களை பெற www.airmenselection.cdac.in என்ற இணையதள முகவரி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காரைக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- தேவர் சிலை அருகில் தொடங்கிய பேரணியை மாங்குடி எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் முத்துதுரை ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் போக்குவரத்து காவல் நிலையம், காரைக்குடி மண்டல போக்குவரத்துக் கழகம் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. தேவர் சிலை அருகில் தொடங்கிய பேரணியை மாங்குடி எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் முத்துதுரை ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெரியார் சிலை, கல்லூரி சாலை வழியாக மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வரை வலம் வந்தனர். பின்னர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மருத்துவர் ஸ்ரீதர் தலைமையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 200-க்கும் மேற்பட்ட பள்ளி வாகன ஓட்டுநர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் கண் பரிசோதனை செய்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலையரசி, வடக்கு காவல் ஆய்வாளர் ராஜ்குமார், அரசு போக்குவரத்துக் கழக தொழில்நுட்ப பிரிவு துணை மேலாளர் நலங்கிள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேவகோட்டையில் தொடர்ந்து நடந்து வரும் கொலை-கொள்ளை சம்பவங்களை போலீசார் குற்றவாளிகளை பிடிக்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
- இந்த சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட தாய்-மகள் இறந்து விட்டனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நாட்டார்கள், நகரத்தார்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அதற்கு சான்றாக பழங்கால வீடுகள் அரண்மனை போல் காட்சியளித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் பூட்டி கிடக்கும் வீடு களை குறிவைத்து கொள்ளையிலு ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால், கொள்ளையர்கள் வீட்டுக்கு தீ வைத்து சென்று விடுகின்றனர்.
ஆறாவயல் கிராமத்தில் உள்ள முதல்-அமைச்சரின் உறவினர் வீட்டில் கதவை உடைத்து தங்கம் மற்றும் வைர நகைகள் திருடிய சம்பவம் நடந்தது. மேலும் அடுத்தடுத்த வீடுகளிலும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. கோட்டூர் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 90 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.
தேவகோட்டை நகரில் அண்ணா சாலையில் பேராசிரியர் வீட்டில் 100 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. அண்ணா சாலை பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உறவினர் வீட்டில் கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் திருடப்பட்டன. அருகில் உள்ள வீடுகளின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டது.
மனைவியை உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றபோது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற்றி விட்டு வந்து பார்த்தபோது வீட்டில் திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவரங்காடு பகுதி யில் வங்கி பணியாளர் வீட்டில் பகல் நேரத்தில் 48 பவுன் நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டது. மேலும் இடையன்காளி கோவில், முத்து பெரியநாயகி கோவில், இரவுசேரி காளியம்மன் கோவில், கற்படை அய்யனார் கோவில் உள்பட சில கோவில்களில் கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்துள்ளது. இங்கு கண்காணிப்பு காமிரா இருந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது மர்மமாக உள்ளது.
தேவகோட்டை நகரில் வளர்ந்து வரும் பகுதியான ராம் நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டது. அவ்வாறு பொருட்கள் இல்லாத ராணுவ வீரர் வீடு உள்பட பல வீடுகளுக்கு கொள்ளையர்கள் தீ வைத்து சென்ற சம்பவம் நடந்தது.இந்த சம்பவங்களில் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்க படாமல் உள்ளனர். இதற்கு போலீ சாரின் மெத்தனமே முக்கிய காரணம் என்று பொதுமக்கள் கூறுகின்ற னர்.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் தாய், மகள், பேரன் ஆகியோரை அரிவாளால் வெட்டி வீட்டில் திருமணத்துக்காக வைத்திருந்த நகைகள் உட்பட 60 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட தாய்-மகள் இறந்து விட்டனர். பேரன் ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இனிமேல் இதுபோல் சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். அதில் குற்றவாளிகளை வருகிற 31-ந்தேதிக்குள் போலீசார் கைது செய்யாவிட்டால் 1-ந்தேதி கிராம மக்கள் ஒன்று திரண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இருந்தபோதிலும் கொலை யாளிகள் இன்னும் கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்படவில்லை.
இது கிராம மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
- அடுத்த தேர்தலில் தி.மு.க. காணாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசினார்.
- இந்த திராவிட மாடல் என்பது பூச்சாண்டி காட்டக்கூடிய வேலை.
சிவகங்கை
சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பங்கேற்று பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப அரசியல் செய்து வருகிறார். ஒரு சாதாரண எளிய தலித் தி.மு.க. தொண்டனை வருகிற 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா?
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தலைவராக ஒரு சாதாரண எளிய தொண்டன் கட்சியின் கிளை செயலாளரை ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா? அப்படி சொன்னால்தான் திராவிட மாடல் ஆகும். இந்த திராவிட மாடல் என்பது பூச்சாண்டி காட்டக்கூடிய வேலை.
திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப அரசியல் செய்து வரும் தி.மு.க. அடுத்த தேர்தலில் காணா மல் போய்விடும்
இவ்வாறு அவர் பேசி னார். இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, கருணாகரன், அருள்ஸ்டிபன், சிவாஜி , சிவசிவஸ்ரீதர், சேவியர், பழனிச்சாமி, கோபி, மண்டல தகவல் தொழி ல்நுட்ப இணை செயலாளர் தமிழ்செல்வன்.
மகளிரணி செயலாளர் ஜாக்குலின், மாவட்ட மகளிரணி வெண்ணிலா சசிகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாலுகோட்டை மணிகண்டன், மணிமுத்து, பாசறை பொருளாளர் சரவணன்.
பாசறை இணை செயலாளர் சதீஸ்பாலு, கவுன்சிலர்கள் ராபர்ட், கிருஷ்ணகுமார், தாமு, மாணவரணி நகரசெய லாளர் ராஜபாண்டி, பாசறை இணை செயலாளர் மோசஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடக்கிறது.
- இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
குடியரசு தினமான வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குடியரசு தினம் அன்று காலை 11 மணியளவில் உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
அன்றைய கிராம சபைக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான ஜனவரி 26-ந் தேதியன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த ஊராட்சியில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும்.
கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தை ஒப்பிட்டு விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,பிரதமரின் குடியிருப்பு திட்ட பயனாளிகள் குறித்து விவாதித்தல்.
அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு,ஜல் ஜீவன் இயக்கம்,பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் போன்றவற்றை கிராம சபைக் கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருப்பத்தூர் அருகே கார் கவிழ்ந்து விபத்தில் கணவன்-மனைவி உயிர் தப்பினர்.
- விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் உதயஅரசன். இவர் தனது மனைவி மேனஸ்கா, 2 வயது மகன் ஆகியோருடன் காரில் மதுரைக்கு புறப்பட்டார். திருப்பத்தூர் அருகே உள்ள சுண்ணாயிருப்பு பகுதி அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த அவரது மேனஸ்கா, அவரது இரண்டு வயது மகன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு முதல் உதவி சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்
- திருப்பத்தூர் அருகே நடந்த விழாவில் விருதுகளை வாங்கி குவிக்கும் சிறுவனுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
- இளம் பயிற்சியாளர் என்ற விருதை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சொக்க நாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக சாதனை முயற்சியாக 133 மாணவ-மாணவிகள் ஒன்றிணைந்து 1330 திருக்குறளை சொல்லிக்கொண்டே கன சதுர தீர்க்கத்தில் தேசியக்கொடியை போல் ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழாவில் சொக்கநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்தண்ணங்கோட்டை கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார்-வளர்மதி ஆகியோரின் 6 வயது மகன் அபிமன்யு கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை படைத்து விருதுகள் வாங்கியதை பாராட்டி அவருக்கு "இளம் பயிற்சியாளர்" என்ற விருதை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், ஊராட்சி மன்றத்தலைவர் கண்ணன், துபாய் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. ஆட்சியில் 1½ லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
- நடப்பாண்டில் 50,000 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், அதிகரம், பில்லத்தியேந்தல் ஆகிய பகுதிகளில் ரூ. 18.47 லட்சம் மதிப்பில் 63 கிலோ வாட் கொண்ட புதிய மின்மாற்றிகளை அமைச்சர் பெரியகருப்பன் பொது மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:-
மின் இணைப்புகள்
முதல்-அமைச்சர் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில், எண்ணற்ற திட்டங்களை தொலை நோக்கு பார்வையுடன் சிந்தித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றி டும் பொருட்டு, பொது மக்களின் தேவை களை அறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.
நாட்டின் முதுகெழும் பாக திகழ்ந்து வரும் விவசாயி களின் நலனை காக்கின்ற வகையிலும், விவசாயப் பயன்பாட்டிற்கான புதிய மின் இணைப்புக்களை வழங்கிடும் பொருட்டு, நடவடிக்கைகள் மேற் கொள்வதற்கென 2021- 2022-ம் நிதி யாண்டில் விவசாயி களுக்கென 1 லட்சம் புதிய மின் இணைப்புகளும், நடப்பாண்டில் 50,000 புதிய மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற 1 ½ ஆண்டு கால ஆட்சியில் மொத்தம் 1,50,000 மின் இணைப்புக்களை விவ சாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கைகள் மேற் கொண்டு உள்ளார்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதுன்ரெட்டி, மின் உதவி செயற்பொறியாளர் கென்னடி, செல்லத்துரை, வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, உதவி பொறியாளர் அப்துல் காதர்,சிராவயல் ஊராட்சி மன்ற தலைவர் சரோஜாதேவி குமார், வாணியங்காடு ஊராட்சி மன்ற தலைவர் மீனா மாதவன், மற்றும் திருப்பத்தூர், கல்லல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்தனர்.
- நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த தின விழா சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் தலைமையில் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதில் நகர செயலாளர் பாலா, மாநில இளைஞரணி இணை செயலாளர் திருஞானம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் அழகப்பன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சித்தார்த்தன், தொகுதி செயலாளர் சக்கந்தி பழனி, மாவட்ட பாசறை செயலாளர் அங்குராஜ், தேவகோட்டை நகர செயலாளர் ரவிக்குமார், மாணவரணி செயலாளர் கண்ணதாசன், குணா பாண்டியன், மகளிரணி நிர்வாகி ராமாமிர்தம், முன்னாள் கவுன்சிலர் ரவி உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- நாட்டரசன்கோட்டையில் நடந்த பொங்கல் விழாவில் கலெக்டர் பங்கேற்றார்.
- செயல் அலுவலர் ஜெயராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் சுற்று லாத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பொங்கல் விழா நடந்தது. இதில் மாவட்ட மதுசூதன் ரெட்டி பங்கேற்றார்.
பின்னர் அவர் பேசுகை யில், நாட்டரசன்கோட்டை பேரூ ராட்சியில் சுற்றுலாத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழர்களின் புகழை பறைசாற்றும் வகையில் பரதநாட்டியம் மற்றும் பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த இந்த விழாவில், பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு சுற்றுலா வந்துள்ள வெளி நாட்டு சுற்றுலாப் பயணி களும் கலந்து கொண்டது பெருமைக்குரிய ஒன்றாகும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கலெக் டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, உதவி சுற்றுலா அலுவலர் சங்கர், காளையார்கோவில் வட்டாட்சியர் பஞ்சவர்ணம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சித் தலைவர் பிரியதர்சினி, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கார் மோதி, மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி பலியாயினர்.
- விபத்து, 2 பேர் பலி Accident, 2 killed
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது60). இவரது மனைவி கஸ்தூரி (54). இவர்கள் தீயனூரில் நடைபெறும் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அவர்கள் தீயனூர் விலக்கு பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கார் மோதியது.
இதில் படுகாயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி பொதுமக்கள் மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பலியான ராஜாமணி, கஸ்தூரி உடல்களை மீட்டுபிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மோதிய காரை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற கணவன்-மனைவி விபத்தில் பலியான சம்பவம் மிளகனூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.






