என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

மழை இல்லாததால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள்

- மழை இல்லாததால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டத.
- கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், காரைக்குளம் மற்றும் நெஞ்சத்தூர் பகுதிகளில் பருவமழை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பெறப்பட்டுள்ள பருவமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்வளங்கள் மேம்பாடு அடைந்து, விவசாயப் பயன்பாட்டிற்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. இருப்பினும், இளை யான்குடி உள்ளிட்ட சில வட்டாரங்களில் மழை குறைவாக பெறப்பட்டுள்ளதால், அந்த பகுதிகளில் விவசாய நிலங்களில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதுகுறித்து ஆய்வு செய்து அரசின் சார்பில் சில நிவாரணங்களை விவசாயி களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளும் வகையில், இளையான்குடி வட்டத்திற்கு ட்பட்ட காரைக்குளம் மற்றும் நெஞ்சத்தூர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த பகுதிகளில் இது தொடர்பாக கணக்கெ டுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்கான அறிக்கையை துறை ரீதியாக சமர்ப்பிப்பித்து, அரசால் வழங்கப்படும் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களின் பாதிப்புக்கள் குறித்த விபரங்களை துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். குறிப்பாக, தங்களது விளைநிலங்களில் நெற்பயிர்கள் மட்டும் பயிரிடுவது மட்டுமின்றி, மண்ணின் தன்மைக்கேற்றார் போல் பல்வேறு பயிர்கள் மற்றும் தானியங்களை பயிரிட்டும், அதன்மூலமும் உற்பத்தியைப் பெருக்கி, லாபம் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், இளையான்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தங்கபாண்டியன், வேளாண்மை அலுவலர் அழகர்ராஜா, வட்டாட்சியர் அசோக், துணை வேளாண்மை அலுவலர் சப்பாணிமுத்து, உதவி வேளாண்மை அலுவலர் யுவராணி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
