என் மலர்tooltip icon

    சேலம்

    • மாநாட்டு திடலில் இனிவரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மேடை அமைப்பது தொடர்பாக விரிவாக கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
    • மாநாட்டு வழிகாட்டு குழு மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

    அந்த வகையில், நேற்று காலையில் ஈரோடு மாவட்டத்திலும், மாலையில் நாமக்கல் மாவட்டத்திலும் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று கட்சி இளைஞரணி நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    பின்னர் நேற்று இரவு 9 மணியளவில் சேலம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையான மல்லூர் அருகே நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. , எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    எம்.பி.க்கள் பார்த்திபன், கவுதம சிகாமணி, மேயர் ராமச்சந்திரன், தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமரைக்கண்ணன், மாநகர செயலாளர் ரகுபதி, துணை செயலாளர் சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.அண்ணாமலை உள்பட கட்சியினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதற்கிடையே மாவட்ட கலெக்டர் கார்மேகம் , போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் மற்றும் அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து சேலம் வந்த அமைச்சர் உதயநிதிஸ்டாலின் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார்.

    இன்று காலை சேலத்தில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கு தி.மு.க . இளைஞரணி மாநில மாநாட்டுக்காக அமைக்கப்பட்டு வரும் பிரமாண்டமான பந்தலை பார்வையிட்டார்.

    அப்போது மாநாட்டு திடலில் இனிவரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மேடை அமைப்பது தொடர்பாக விரிவாக கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து மாநாட்டு வழிகாட்டு குழு மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெரிய கருப்பன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

    பின்னர் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு தி.மு.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து அங்குள்ள மைதானத்தில் இளைஞரணியினர் முன்பு சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., இளைஞரணி அமைப்பாளர்கள் அருண்பிரசன்னா, வீரபாண்டி பிரபு, மணிகண்டன் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணியினர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

    இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் முடிந்ததும், சேலத்தில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையெட்டி மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
    • தீயை விரைந்து கட்டுப்படுத்தாவிட்டால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும் என தீயணைப்பு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதையொட்டியுள்ள சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இங்கு முதல் தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஆபரேஷன் தியேட்டர் மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இங்கு 30 நோயாளிகள் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆபரேசன் தியேட்டர் பகுதியில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருந்து திடீரென மின் கசிவு ஏற்பட்டு கரும் புகை கிளம்பியது. உடனடியாக ஊழியர்கள் அந்த இடத்தில் தீயணைப்பான் கருவியை கொண்டு பவுடர் தூவி அணைக்க முயன்றனர்.

    அதற்குள் அந்த குளிர்சாதன பெட்டி மூலம் முதல் தளம் மற்றும் 2-ம் தளத்தில் உள்ள அனைத்து குளிர்சாதன பெட்டிகளுக்கும் கரும் புகை பரவியது. இதை பார்த்த டாக்டர்கள் உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ பிடிக்க தொடங்கியது. இதனால் ஆபரேசன் தியேட்டர் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதனால் நோயாளிகள் பதறினர். டாக்டர்கள் சுதாரித்துக் கொண்டு நோயாளிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். முதல் மாடியில் விபத்து மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெறும் வரும் நோயாளிகள், ஆபரேசனுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை ஸ்டிரெச்சர் மூலமாக அவசர அவசரமாக ஊழியர்கள் வெளியே கொண்டு வந்தனர்.

    முதல் மாடியில் 30 பேர், 2-வது மாடியில் 50 பேர் என மொத்தம் 80 நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களை பத்திரமாக ஆம்புலன்ஸ் மூலம் அருகாமையில் உள்ள வேறு வார்டுக்கு மாற்றினர்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் முதலில் மின் இணைப்பை துண்டித்தனர். அதன் பிறகு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்சுகள், ஊழியர்கள், டெக்னீஷியன்கள் உள்பட அனைவரும் வெளியே வந்து விட்டனரா? என்பதை உறுதி செய்து விட்டு முதல் தளத்துக்குள் ஒவ்வொரு வீரராக புகுந்து புகையை வெளியேற்றும் மிஷின் மூலம் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். தொடர்ந்து மருத்துவமனை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து புகையை வெளியேற்றினர். பின்னர் குளிர்சாதன பெட்டிகளிலும் நுரை தெளிப்பான், ரசாயன பவுடர் ஆகியவற்றை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தினர். மேலும் தீ பரவாமல் இருக்க பெரிய குழாயை கொண்டு தண்ணீரை நாலாபுறம் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த தீயணைப்பு பணி நடைபெற்றது.

    இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் நோயாளிகள், வளாகத்தில் திரண்டிருந்த உறவினர்கள், பீதியில் பரபரப்பாக காணப்பட்டனர்.

    தீயை விரைந்து கட்டுப்படுத்தாவிட்டால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும் என தீயணைப்பு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    தற்போது ஆஸ்பத்திரி எலெக்ட்ரீசியன்கள் மின்கசிவு ஏற்பட்ட ஏ.சி. மற்றும் பிறகு பகுதிகளில் கருகிய வயர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கவர்னர் ஆர்.என். ரவி செல்லும் பாதை மற்றும்பெரியார் பல்கலைக்கழக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • நாளை இரவு கவர்னர் ஆர்.என்.ரவி பெரியார் பல்கலைக்கழகத்தில் தங்குகிறார்.

    சேலம்:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (23-ந்தேதி)சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு காரில் வருகிறார். அவரை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.

    டெல்லியில் ஏற்கனவே நடைபெற்ற ஜி 20 மாநாடு தொடர்பாக பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை மாலை 4.30 மணியளவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். பின்னர் நாளை இரவு கவர்னர் ஆர்.என்.ரவி பெரியார் பல்கலைக்கழகத்தில் தங்குகிறார்.

    தொடர்ந்து நாளை மறுநாள் (24-ந்தேதி) பெரியார் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துகிறார். இதையொட்டி கவர்னர் ஆர்.என். ரவி செல்லும் பாதை மற்றும்பெரியார் பல்கலைக்கழக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • 1-வது கோட்டம் பூனைகரடு அருந்ததியர் பகுதியில் உள்ள கழிவறை இடிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் அருள் எம்.எல்.ஏ.வை சந்தித்து புகார் கூறினர்.
    • இதையடுத்து அருள் எம்.எல்.ஏ. நேரில் சென்று சம்பந்தப்பட்ட இடத்தை பார்வை யிட்டார்.

     சேலம்:

    சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1-வது கோட்டம் பூனைகரடு அருந்ததியர் பகுதியில் உள்ள கழிவறை இடிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் அருள் எம்.எல்.ஏ.வை சந்தித்து புகார் கூறினர்.

    இதையடுத்து அருள் எம்.எல்.ஏ. நேரில் சென்று சம்பந்தப்பட்ட இடத்தை பார்வை யிட்டார். இதையடுத்து மாநகராட்சிஅதிகாரிகளை உடனடியாக வரவழைத்து கழிவறை இடிக்கப்படு வதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார்.

    அப்ேபாது அருள் எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் இங்கு 50-க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் சிறு சிறு வீடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த கழி வறையை விட்டால் வேறு கழிப்பிடமே இல்லை. எனவே கூடுதலாக அதாவது புதிதாக கழிவறை மாநகராட்சி மூலம் கட்டித் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    1986 -ம் ஆண்டு அருந்ததிய மக்களுக்கு தரப்பட்ட இந்த வீடுகளுக்கு நிரந்தரப்பட்டா இல்லை. அதனைபெற்றுத் தருமாறு அப்பகுதியில் வாழும் மக்கள் கேட்டனர். அதன் அடிப்படையில் உடனடியாக தாசில்தாருக்கு தொடர்பு கொண்டு விரைந்து பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

    பின்னர் அப்பகுதியில் உள்ள மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து அடிப்படை பிரச்சனை குறித்து கேட்டறிந்தார். அவருடன் பகுதி தலைவர் செந்தில்குமார், தமிழ், மாரியப்பன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • உடல்நிலை சரியில்லாத நிலையில் செல்வம் மருத்துவ விடுப்பில் இருந்தார்.
    • சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சீலநாயக்கம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (58). இவர் சேலம் வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சேலம் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத நிலையில் செல்வம் மருத்துவ விடுப்பில் இருந்தார். மேலும் சீல நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சீலநாயக்கம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது. 

    • பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்கள் சேலம் மாவட்டத்தில் இன்று கள ஆய்வு மேற்கொள்கிறார்கள்.
    • சட்டமன்றத்தால் ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்தும் பொதுக்கணக்குகுழு ஆய்வு செய்கிறது.

    சேலம்:

    தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023-24-ம் ஆண்டுக்கான பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்கள் சேலம் மாவட்டத்தில் இன்று கள ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

    பொது கணக்கு குழு ஆய்வு

    இந்த குழுவானது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தால் ஒதுக்கப்படும் நிதியினை ஆக்கப்பூர்வமாகவும், சிக்கன மாகவும் பயன்படுத்துவதை உறுதி செய்வதோடு நிர்வாகத்தின் வெளிப்படை தன்மையையும் உறுதி செய்கிறது. சட்டமன்றத்தால் ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்தும் பொதுக்கணக்குகுழு ஆய்வு செய்கிறது.

    இதற்காக பொதுகணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் குழுவினர் நேற்றிரவு சேலம் வந்தனர். இந்த குழுவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகர், பாலாஜி, உதயசூரியன், கிருஷ்ணசாமி, சேகர், சரஸ்வதி ஆகியோர் இன்று ஏற்காடு வாழவந்தி புளியங்கடை பகுதியில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வெண்ணெய் பழ சாகுபடி பரப்பு விரிவாக்கத்தை பார்வையிட்டனர்.

    தொடர்ந்து ஏற்காடு பொன்னி ரேசன் கடைகள், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, அரசு மேல்நிலைப்பள்ளி, ஆதிதிராவிடர் நல விடுதி , சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், பேர்லேண்ட்ஸ் சாரதா கல்வியியல் கல்லூரி, அஸ்தம்பட்டி செரி ரோடு சாலையில் சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரெயில்வே பாலம் கட்டும் பணி, சேலம் டவுன் மற்றும் கிழக்கு ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில்வே சாலையில் மேம்பாலம் கட்டுதல் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது கலெக்டர் மற்றும் பொது கணக்கு குழு உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆய்வு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கிறார்கள். 

    • தனியார் நிலத்தின் வழியாக மயானத்திற்கு செல்ல பாதை அமைத்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • இதனையடுத்து மயானப் பாதை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் முத்தம்பட்டி ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள் தனியார் நிலத்தின் வழியாக மயானத்திற்கு செல்ல பாதை அமைத்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 4 நாட்களுக்கு முன் பஸ்சில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

    இதனையடுத்து மயானப் பாதை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. இதுகுறித்து வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி உள்ளிட்டோ இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மயானத்திற்கு உடலை கொண்டு செல்ல பாதை உடனடியாக அமைத்து கொடுக்க வேண்டும் என கோஷமிட்ட பொதுமக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து மயானப்பாதை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

    முன்னதாக அவர்கள் சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். வாழப்பாடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெத்தநாயக்கன் பாளையத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது.
    • தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நடத்தி வருகிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நடத்தி வருகிறார்.

    செயல்வீரர்கள் கூட்டம்

    அந்த வகையில், சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நாளை (22-ந் தேதி ) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார். அதற்காக இன்று இரவு நாமக்கல்லில் இருந்து சேலம் வருகிறார்.

    அமைச்சர் உதயநிதிஸ்டா லினுக்கு மாவட்ட எல்லை யான மல்லூர் அருகே தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இளைஞரணியினர் திரளாக பங்கேற்கிறார்கள். தொடர்ந்து சேலம் வரும் அவர் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்குகிறார்.

    நாளை ( 22 -ந் தேதி) காலை 10 மணியளவில் சீலநாயக்கன்பட்டியில் நடைபெறும் தி.மு.க. இளை ஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து சிறப்புரையாற்றுகிறார்.

    இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி மற்றும் மாவட்ட செயலா ளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வ கணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், இளைஞரணி அமைப்பா ளர்கள் அருண்பிரசன்னா, வீரபாண்டி பிரபு, மணிகண்டன் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணியினர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    இளைஞரணி செயல்வீ ரர்கள் கூட்டம் முடிந்ததும், பெத்தநாயக்கன் பாளையத்தில் இளைஞரணி மாநில மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அப்போது மாவட்ட செயலாளர் மற்றும் மாநாட்டு வழிகாட்டு குழுவினருடன் ஆேலாசனை நடத்துகிறார். பின்னர் அவர் காரில் கிருஷ்ணகிரி புறப்பட்டு செல்கிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையெட்டி அவர் செல்லும் வழிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • கூட்டுறவு வார விழா சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார்.
    • கூட்டுறவுத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றிருந்தபோது விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்வோம் என்று ரூ.7,500 கோடியை முழுமையாக ரத்து செய்தார்.

    சேலம்:

    70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் பார்த்திபன் எம்.பி., சேலம் வடக்கு ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் 1996-ம் ஆண்டு கூட்டுறவுத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றிருந்தபோது விவசாயிகள் வாங்கிய கடனை

    முழுமையாக ரத்து செய்வோம் என்று ரூ.7,500 கோடியை முழுமையாக ரத்து செய்தார். 1996 முதல் 2001 காலகட்டத்தில் விவசாயிகளுக்கு கடன்களை வழங்கியதோடு 600-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் வங்கிகளுக்கும், 12,500 நியாய விலைக் கடைகளுக்கும், 3 மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. அதேபோல் தற்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் ரூ.20,000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.

    கலைஞர் ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய கடன் தொகைகளை நபார்டு வங்கிகளில் இருந்து 9 சதவீதத்திற்குக் கடனாகப் பெற்று, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் உள்ள 4,500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 1,500 வங்கிகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரசிடமிருந்து நிதியினைப் பெற்று செயல்பட்டு வருகிறது. மேலும் 126 நகர வங்கிகளும், 70 நில வள வங்கிகள், 23 மத்திய வங்கிகளும், ஒரு மாநில வங்கியும் செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகச் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற உள்ளூரில் உள்ள செயலாளர் மூலம் உறுதி செய்தவுடன் கடன் வழங்கப்படுவதால் விவசாயிகள் எளிதாக கடன் பெற முடிகிறது. விவசாயிகள், சிறுவியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும் துறையாக கூட்டுறவுத் துறை விளங்குகிறது.

    இக்கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியின் வாயிலாக பயிர்கடன், கால்நடை பராமரிப்புக்கடன், மத்தியக் காலக் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளி கடன், வீட்டு வசதி கடன், மகளிர் சிறுவணிகக்கடன் மற்றும் வீடு அடமானக்கடன் என 3,024 பயனாளிகளுக்கு ரூ.33.99 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட வழங்கப்படுகின்றன.

    மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகளும், மாவட்ட அளவில் சிறப்பாக செயலாற்றிய 39 கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாகப் பணியாற்றி விருதுகளைப் பெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சேலம் மேற்கு அருள் எம்.எல்.ஏ., மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ., சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், சேகோ சர்வ் மேலாண்மை இயக்குநர் லலித் ஆதித்ய நீலம், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர், மேலாண்மை இயக்குநர் மீராபாய், சரக துணைப் பதிவாளர் முத்து விஜயா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து 4 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

    இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று 4,015 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 4,038 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 62.24 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 62.65 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 26.70 டி.எம்.சி.யாக உள்ளது.

    • வீரபாண்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (21-ந்தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (21-ந்தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையம் பாளையம், ெபத்தாம்பட்டி, ராஜா பாளையம், கூலிப்பட்டி, எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, சென்ன கிரி, முத்தனம்பாளையம், ஏரிக்காடு, வீரபாண்டி, பாலம்பட்டி, கோணயநாயக்கனூர், அரசம்பாளையம், புதுப்பாளையம், வாணியம்பாடி, பைரோஜி, உத்தமசோழபுரம், அரியானூர், சீரகாப்பாடி, சித்தனேரி உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சேலம் தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார். 

    • செட்டிப்பட்டி பாலம் அருகே ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீாசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • காருக்குள் சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்குகள் 20 மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம்-தருமபுரி நெடுஞ்சாலையில் ஓமலூரை அடுத்த செட்டிப்பட்டி பாலம் அருகே ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீாசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதி வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    காருக்குள் இருந்த தேனி மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்நத இளையராஜா (35), அல்லி நகரத்தை சேர்ந்த அருன்குமார் (24) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காருக்குள் சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்குகள் 20 மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

    இதன் எடை 403 கிலோ என்பதும், அதன் மதிப்பு 1 லட்சத்து 66 ஆயிரதத்து 860 என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அந்த பாக்குகளையும், ரூ. 5 லட்சம் மதிப்பிலான காரையும் பறிமுதல் செய்தனர்.செட்டிப்பட்டி பாலம் அருகே ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீாசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

    ×