என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.1 லட்சம் திருட்டு"

    • டிரைவர் தூக்கம் வந்ததால் வாகனத்தை திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்திவிட்டு தூங்கினார்.
    • மர்மநபர்கள் சரக்கு வேன், கண்ணாடியை உடைத்து அதிலிருந்த ரூ.1 லட்சத்தை திருடிச்சென்றனர்.

    வடமதுரை:

    பாண்டிச்சேரி வாதனூர் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன்(45). புளி வியாபாரி. இவர் அய்யலூர், வடமதுரை பகுதியில் புளி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஊர் திரும்பி கொண்டிருந்த போது தூக்கம் வந்ததால் வாகனத்ைத திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்திவிட்டு தூங்கினார்.

    அசதியின் காரணமாக ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சரக்கு வேன், கண்ணாடியை உடைத்து அதிலிருந்த ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற னர். இன்று காலை கண்விழித்து பார்த்தபோது கண்ணாடி உடைக்கப்பட்டு பணம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம்பக்கம் விசாரி த்தும் எந்த பயனும் இல்லை. இதுகுறித்து வடமதுரை போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவை கொண்டு பணம் திருடிச்சென்ற மர்ம நப ர்களை தேடி வருகின்றனர்.

    • சேலம் உயிரியல் பூங்கா அருகே உள்ள கோம்பைபட்டி பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (33). இவர் டி.வி சீரியலில் நடித்து வருகிறார்.
    • இரவு வெளியில் சென்றவர் இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    சேலம்:

    சேலம் உயிரியல் பூங்கா அருகே உள்ள கோம்பைபட்டி பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (33). இவர் டி.வி சீரியலில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வெளியில் சென்றவர் இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த சபரிநாதன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசில் சபரிநாதன் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்து பழைய கொள்ளையர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×