என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் மாநகரில் ஊர்வலம், கூட்டம் நடத்த கட்டுப்பாடு
- சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், பல்வேறு சங்கங்கள், அமைப்பினர் உள்ளிட்டோர் நடத்தும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு மாநகர போலீஸ் சட்டப்படி கமிஷனர் அனுமதி பெற்று நடத்த வேண்டும்.
- மேலும் இதற்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
அன்னதானப்பட்டி:
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், பல்வேறு சங்கங்கள், அமைப்பினர் உள்ளிட்டோர் நடத்தும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு மாநகர போலீஸ் சட்டப்படி கமிஷனர் அனுமதி பெற்று நடத்த வேண்டும். மேலும் இதற்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்பட மாட்டாது. அதேசமயம் விளையாட்டு நிகழ்ச்சிகள், திருமண நிகழ்வுகள், இறந்தோர் இறுதி ஊர்வலங்கள், மத நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுக்கு இது பொருந்தாது. இந்த உத்தரவு இன்று முதல் அடுத்த மாதம் 9- ந் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






