என் மலர்
சேலம்
- வாழப்பாடி வட்டாரத்தில் உதவி இயக்குநர் முனைவர் பிரியதர்ஷினி தலைமையில் வாழப்பாடி மகளிர் சங்க அலுவலகத்திலும் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.
- இதில் பெண்கள் ஆர்வத்தோடு அதிகளவில் பங்கேற்றனர்.
வாழப்பாடி:
பெத்தநாயக்கன்பாளை யம் வட்டாரத்தில் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர் கோதைநாயகி தலைமையில் புத்திரகவுண்டன்பாளையம் வேளாண்மை வட்டார விரிவாக்க மையத்திலும், அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் உதவி இயக்குநர் முனைவர்.கலைவாணி தலைமையில், மாசிநாயக்கன்பட்டி மகளிர் சங்க அலுவலகத்திலும், வாழப்பாடி வட்டாரத்தில் உதவி இயக்குநர் முனைவர் பிரியதர்ஷினி தலைமையில் வாழப்பாடி மகளிர் சங்க அலுவலகத்திலும் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப்பயிற்சியில், தக்காளி, மிளகாய், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், கீரைகளை மாடித்தோட்டம் அமைத்து சாகுபடி செய்வது குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. 3 வட்டாரங்களிலும் தலா 50 பேர் பயிற்சி பெற்றனர். இதில் பெண்கள் ஆர்வத்தோடு அதிகளவில் பங்கேற்றனர்.
மாடித்தோட்டம் அமைப்பதற்கு தேவையான வளர்ப்பு பைகள், தென்னைநார் கழிவு, காய்கறி விதைகள், உயிர் உரங்கள், வேப்ப எண்ணெய் ஆகியவை உள்ளடக்கிய தொகுப்பை மானிய விலையில் பெறுவதற்கும், ரூ.450 பணம் செலுத்தி ஏராளமானோர் முன்பதிவு செய்தனர். மாடித்தோட்டம் அமைப்பதற்கு ஆர்வமுள்ளவர்கள் அரசு மானியத்தில் ரூ.450 மட்டும் கொடுத்து மாடித்தோட்ட தொகுப்பை பெற்றக் கொள்ளலாமென, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர். மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி பயனுள்ள வகையில் அமைந்ததாக பயிற்சி பெற்ற பெண்கள் தெரிவித்தனர்.
- 15 குடும்பங்களுக்கு கடந்த 1997-ம் ஆண்டு விவவாயி ஒருவரிடம் விவசாய தரிசு நிலத்தை ஆதிதிராவிட நலத்துறை மூலம் விலைக்கு வாங்கி அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
- மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையில் செல்லக்கூடாது என ஊருக்கு அருகில் உள்ள விவசாய நில உரிமையாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.
சங்ககிரி:
சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், வடுகப் பட்டி ஊராட்சி, தாதவராயன்குட்டை கிராமம், புதுகாலனி அருந்ததியர் தெருவைச் சேர்ந்த 15 குடும்பங்களுக்கு கடந்த 1997-ம் ஆண்டு விவவாயி ஒருவரிடம் விவசாய தரிசு நிலத்தை ஆதிதிராவிட நலத்துறை மூலம் விலைக்கு வாங்கி அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதனையடுத்து, அங்கு வீடு கட்டி வசித்து வந்தனர். இந்த மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையில் செல்லக்கூடாது என ஊருக்கு அருகில் உள்ள விவசாய நில உரிமையாளர்கள் சிலர் கூறியுள்ளனர். அதனையடுத்து, நேற்று மதியம் 15 குடும்பத்தினரும் வடுகப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நாங்கள் பயன்படுத்தி வந்த பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சர்வே செய்து தார் சாலை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து வடுகப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் முத்துசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். முற்றுகை போராட்டம் குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையடுத்து, மக்கள் சங்ககிரி வந்து ஆர்.டி.ஓ., லோகநாயகியிடம் புகார் அளித்தனர். அப்போது அவர், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அளவீடு செய்யும் வரை விவசாய நில உரிமையாளர்கள் தடுக்க கூடாது என உத்திரவிட்டார். அதனையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
- ஒரே நாளில் அணை நீர்மட்டம் 5 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.
- கபினி அணை விரைவில் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டூர்:
கேரள மாநிலம் வயநாடு, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைக்கு நேற்று காலை 29 ஆயிரத்து 552 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் மாலையில் 44 ஆயிரத்து 436 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து 5,452 கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டுள்ளது.
124 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 92 அடியாக இருந்த நிலையில் நேற்று 97.5 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் அணை நீர்மட்டம் 5 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.
இதேபோல் கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 79.50 அடியாக இருந்தது. அணை நிரம்ப இன்னும் 5 அடி மட்டுமே பாக்கி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 21,600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணை விரைவில் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
2 அணைகளில் இருந்தும் கடந்த சில நாட்களாக 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று முதல் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 15 ஆயிரத்து 452 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்பட்ட நீர் இன்று பிற்பகல் தமிழக கர்நாடக எல்லையான பிலி குண்டலு வந்து சேருமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் வந்து சேரும் பட்சத்தில் ஒகேனக்கல்லில் இன்று பிற்பகல் முதல் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழக கர்நாடக எல்லையான பிலி குண்டுலு பகுதியில் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் 6 மணி நேரத்தில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் கர்நாடக அணைகளில் இருந்து விடப்பட்ட தண்ணீர் இன்று இரவு மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என தெரிகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 165 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 119 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையின் நீர்மட்டம் 66.86 அடியாக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இனிவரும் நாட்களில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூருக்கு வந்து சேரும் என்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
- பெரமனூர் சாலையில் மரம் திடீரென சாய்ந்து விழுந்தது.
- தொடர் மழை, பனியால் ஏற்காட்டில் காபி விவசாயம் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக நேற்றிரவு ஆனை மடுவு, தலைவாசல், காடை யாம்பட்டி, கரியகோவில், தம்மம்பட்டி, பெத்தநா யக்கன் பாளையம் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோடை காலத்தில் பெய்தமழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள்மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாநகராட்சியில் நேற்றிரவு சாரல் மழை பெய்த போது 15-வது கோட்டம் பெரமனூர் சாலையில் ஒரு மரம் திடீரென சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டது.
பின்னர் மாநகராட்சி ஊழியர்களை, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். உடனடியாக நடவடிக்கை எடுத்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று மாலை தொடங்கிய சாரல் மழை இடைவிடாமல் பெய்து வருகிறது.
மழையுடன் காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால் குளிர் வாட்டி வதைக்கிறது. இடையில் பனி மூட்டமும் காணப்படுகிறது. குளிர் அதிகமாக இருப்பதால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்துவிட்டது. குளிர் மற்றும் காற்று அதிகமாக வீசுவதால் உள்ளூர் வாசிகள் பெரிதும் சிரமப்டுகின்றனர். ஸ்வெட்டர், குல்லா போன்ற உடைகள் அணிந்து தான் வெளியே வேண்டி உள்ளது.
பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். தொடர் மழை, பனியால் ஏற்காட்டில் காபி விவசாயம் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டம் முழுவதும் இன்று தொடர்ந்து சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த மழை தூறலாக நீடித்ததால் சேலத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை வருகிறது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆனைமடுவில் 16 மி.மீ. பதிவாகி உள்ளது . தலைவாசல்-11, காடை யாம்பட்டி-10, கரிய கோவில்-10, தம்மம் பட்டி-9, பெத்தநாயக்கன்பாளை யம் 8, மேட்டூர் 7.6, கெங்கவல்லி 6, வீரகனூர் 6, ஏற்காடு 5.6, சேலம் 4.2, எடப்பாடி 4, ஆத்தூர் 2 மி.மீ. என மவட்டம் முழுவ தும் 98.40 மி.மீ. மழை பெய்துள்ளது.
- சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சேலம் மாவட்ட வக்கீல்கள் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம்:
நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் படங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சேலம் மாவட்ட வக்கீல்கள் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கி ணைப்பாளர்கள் வக்கீல்கள் சசிகுமார், இளைய ராஜா, சந்தியூர் பார்த்திபன், வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த வக்கீல்கள் பிரதாபன், பொன்.ரமணி, மாசிலாமணி, திருமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றி னார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் கனகராஜ், வீரமணி, செல்வராஜ், ரவி, சின்னதுரை, சதீஸ்குமார், திருமுருகன், நேதாஜி, செந்தில்குமார், கதிரவன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- எடப்பாடி - ஜலகண்டாபுரம்ரோடு அருகே உள்ள பெருமாள் கோவில் காலனி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மாதையன்.
- அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த விலை உயர்ந்த எல்.இ.டி டிவி மற்றும் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி - ஜலகண்டாபுரம்ரோடு அருகே உள்ள பெருமாள் கோவில் காலனி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மாதையன். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலை யில், இவரது மனைவி சுந்தராம்பாள், பெருமாள் கோவில் காலனி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இவரது மகன் திருவண்ணா மலை பகுதியில் உள்ள ஒரு அரசு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மே மாதம் 5-ம் தேதி சுந்தராம்பாள் தனது மகனை பார்க்க திருவண்ணாமலைக்கு சென்றிருந்தார்.
நகை கொள்ளை
இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் பெருமாள் கோவில் காலனியில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த விலை உயர்ந்த எல்.இ.டி டிவி மற்றும் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர். இது குறித்து சுந்தராம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த எடப் பாடி போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து அருகில் உள்ள கண்கா ணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கள்ளக்காதல் ஜோடி
இதில் கொள்ளை சம்ப வம் நடந்த அன்று அந்த வீட்டிற்குள் நுழைந்தது சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி கிராமம், பாப்பம்பாடியை அடுத்த சோழவந்தான் வளவு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 24) மற்றும் ஓமலூரை அடுத்த தாசநாயக்கன்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மனைவி சியாமளாதேவி (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சக்திவேலுக்கும், சியாமளா தேவிக்கும் தகாதஉறவு இருந்து
வந்ததாகவும், உல்லாச வாழ்க்கையை அனுபவிப்ப தற்காக, இந்த கள்ளக்காதல் ஜோடி சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீடுகளுக்குள் நுழைந்து திருட்டுச சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.
ஜெயிலில் அடைப்பு
இதையடுத்து இருவரையும் கைது செய்த எடப்பாடி போலீசார் அவர்களிடமிருந்து. கொள்ளையடிக்கப்பட்ட எல்.இ.டி டிவி மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை மீட்டனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கள்ளக்காதல் ஜோடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- மகளிர் உரிமை தொகை பெற சேலத்தில் சிறப்பு முகாம்களில் பயோ மெட்ரிக் மூலம் பெயர் பதிவு நடந்தது.
- ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கனை விநியோகம் செய்தனர்.
சேலம்:
சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்ப டும் என வாக்குறுதி அமைக் கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்ட நிலையில் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்
தொடங்கப்படும்என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்திருந்தார்.
விண்ணப்பம்
இதற்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப் பம் மற்றும் டோக்கன் விநியோகம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கனை விநியோகம் செய்தனர்.
இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் விண் ணப்ப பதிவு முகாம் தொடங்கி யது. இதையொட்டி தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விண்ணப்ப பதிவு முகாமை தொடங்கி வைத்தார்.
ஆயிரம் முகாம்
இதை தொடர்ந்து சேலம் மாவட்டத்திலும் உள்ள 11 லட்சம் கார்டுகளில் 500 கார்டுகளுக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் அரசு பள்ளிகள், திருமண மண்டபங்களில் 1000-க்கும் மேற்பட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் இன்று தொடங்கியது. இதையொட்டி, டோக்கனில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தின் படி பொதுமக்கள் முகாம்களில் குவிந்தனர்.
அவர்களிடம் முதலில் ஆதார் எண் பதியப்பட்டது. பின்னர் விரல் ரேகை பயோ மெட்ரிக் கருவி மூலம் சரி பார்க்கப்பட்டது. விரல் ரேகை பதிவு சரியாக அமை யாத வர்களுக்கு ஆதார் அட்டை யுடன் இணைக்கப் பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. பெறப்பட்டு பதிவு ெசய்யப்பட்டது. பின்னர் விண்ணப்பங்களுக்கு ரசீதுகள் வழங்கப்பட்டது.
இந்த பணியில் வட்ட வழங்கல் துறை மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட் டுள்ளனர். இந்த முகாம் நடைபெறும் சில இடங்க ளில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மாவட்ட வழங்கல் துறை அதிகாரி களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தகுதி உள்ள அனை வருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் அரிதாஸ் இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று ஓசியில் மது குடித்து வந்தார்.
- ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர் ராஜூ மது பாட்டிலை எடுத்து ஹரிதாஸ் மண்டையில் அடித்தார். இதில் அரிதாஸ் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்த கொட்டியது.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் அரிதாஸ் (40). இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று ஓசியில் மது குடித்து வந்தார்.
தகராறு
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஓசியில் மது கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அரிதாஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர் ராஜூ மது பாட்டிலை எடுத்து ஹரிதாஸ் மண்டையில் அடித்தார். இதில் அரிதாஸ் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்த கொட்டியது.
வழக்கு
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி குடிசைமாற்று வாரியம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். சலவை தொழிலாளி. இவரது மனைவி அலமேலு மங்கை பிரியா இவர் தனது மகளுடன் இன்று காலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுப்பதற்காக வந்தார்.
- கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து திடீரென அலமேலு மங்கை மறைத்து கொண்டு வந்த சாணிபவுடரை குடித்து விட்டார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி குடிசைமாற்று வாரியம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். சலவை தொழிலாளி. இவரது மனைவி அலமேலு மங்கை பிரியா (வயது 36). இவர் தனது மகளுடன் இன்று காலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுப்பதற்காக வந்தார்.
அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து திடீரென அலமேலு மங்கை மறைத்து கொண்டு வந்த சாணிபவுடரை குடித்து விட்டார். இதை பார்த்த போலீசார், உடனடியாக ஓடி வந்து, அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது தான், கந்தம்பட்டியை சேர்ந்த ஒருவரிடம் தனது வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து கந்துவட்டிக்கு ரூ.3 லட்சம் கடன் வாங்கினேன். 20 மாத தவணையில் கட்டுவதாக வாங்கியிருந்தேன்.
இதையடுத்து 10-வது தவணையில் முழு பணத்தையும் அவரிடம் கொடுத்தபோது பணத்தை வாங்க மறுத்து 20 தவணையும் முடிந்த பிறகு தான் வீட்டின் பத்திரத்தை தருவேன் என கூறினார். பணத்தை வாங்கி கொண்டு பத்திரத்தை கொடுங்கள் என கேட்டபிறகும் அவர் தர மறுத்து தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி சாணி பவுடரை குடித்து விட்டேன். பத்திரத்தை தர மறுக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் ெதரிவித்தார்.
இதையடுத்து போலீசார், அலமேலு மங்கையை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சேலம் பெரமனூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
- கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் வெளியில் சென்று விட்டு சின்னவர் வீட்டிற்கு வந்தபோது, மகாலட்சுமி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
ேலம்:
சேலம் 4 ரோடு அருகே உள்ள பெரமனூர் நாராயண பிள்ளை தெருவில் வசிப்பவர் சின்னவர் (28).
இவர் கடந்த ஓராண்டிற்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த சின்னவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரை காதல் திருமணம் செய்தார்.
இருவரும் பெரமனூர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி சின்னவர், மகாலட்சுமியிடம் ஏன் வீட்டை சுத்தப்படுத்தி வைக்கவில்லை என கேட்டார். இதனால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
அதன் பின்னர் வெளியில் சென்று விட்டு சின்னவர் வீட்டிற்கு வந்தபோது, மகாலட்சுமி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே திருமணமாகி 9 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்ததால் சேலம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார்.
இதில் மகாலட்சுமியின் பள்ளி சான்றிதழ் ஆய்வு செய்தபோது 17 வயதில் மகாலட்சுமியை சின்னவர் திருமணம் செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக ஆர்.டி.ஓ. சேலம் பள்ளப்பட்டி போலீசுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து பள்ளப்பட்டி போலீசார் 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக சின்னவரை போக்சா வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
- இந்த பூங்காவில் பொது பணி துறை சார்பில் நுழைவு கட்டணமாக ரூ.5. வசூல் செய்யப்படுகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணை பூங்காவிற்கு விடுமுறை நாளான நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். மேலும் இந்த பூங்காவில் பொது பணி துறை சார்பில் நுழைவு கட்டணமாக ரூ.5. வசூல் செய்யப்படுகிறது.பண்டிகை, விடுமுறை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சேலம், ஈரோடு தருமபுரி நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து வழக்கத்தை விட கூடுதலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மேட்டூர் அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். நீண்ட நேரம் காவிரியில் நீராடி விட்டு பூங்காவிற்கு சென்றனர். பூங்காவில் இருந்த பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு ரசித்தனர். பூங்காவில் இருந்த ஊஞ்சல், சர்க்கிள் , ராட்டினம் விளையாடி சிறுவர், சிறுமிகள் மகிழ்ந்தனர்.
- சேலத்தில் பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா பூச்சாட்டுதலுடன் நாளை தொடங்குகிறது.
- கோவிலுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு செல்வார்கள் என்பதால்கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. எட்டு பட்டியை கட்டு ஆளும் அன்னை முதன்மை பெற்ற கோட்டையில் எழுந்தருளி பெரிய மாரியம்மன் என்னும் திருநாமத்தில் பொது மக்களுக்கு அருளாட்சி புரிகிறார்.
21 நாட்கள்
தற்போது திருப்பணிகள் நடைபெறுவதையொட்டி பாலாலயம் செய்யப்பட்டு உள்ளதால் வழக்கமான திருவிழாவில் சில மாற்றங்கள் செய்ய ப்பட்டு நாளை 25-ந் தேதி முதல் (ஆடி மாதம் 9-ந் தேதி) அடுத்த மாதம் 15-ந் தேதி வைரை 21 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இந்தாண்டு ஆடித்திருவிழா கடந்த 17-ந் தேதி மூகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூைஜகள் நடக்கிறது.
பூச்சாட்டுதல் விழா
விழாவின் முக்கிய நிகழ்வான பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நாளை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கொடுக்கும் பூக்களை அம்மனுக்கு சாத்தி சிறப்பு பூைஜகள் நடைபெறும். கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால் கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அடுத்த மாதம் 7-ந் தேதி சக்தி அழைப்பு நிழ்ச்சியும், 9,10 மற்றும் 11-ந் தேதிகளில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு பிரார்த்தனை செலுத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 15-ந் தேதி பால்குட ஊர்வலம், மகா அபிஷேகம், தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதானை நடக்கிறது.
கூடுதல் பாதுகாப்பு
இந்த நாட்களில் கோவிலுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு செல்வார்கள் என்பதால்கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






