search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    17 வயது சிறுமியை திருமணம்  செய்த வாலிபர் போக்சோவில் கைது
    X

    17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

    • சேலம் பெரமனூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
    • கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் வெளியில் சென்று விட்டு சின்னவர் வீட்டிற்கு வந்தபோது, மகாலட்சுமி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    ேலம்:

    சேலம் 4 ரோடு அருகே உள்ள பெரமனூர் நாராயண பிள்ளை தெருவில் வசிப்பவர் சின்னவர் (28).

    இவர் கடந்த ஓராண்டிற்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த சின்னவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரை காதல் திருமணம் செய்தார்.

    இருவரும் பெரமனூர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி சின்னவர், மகாலட்சுமியிடம் ஏன் வீட்டை சுத்தப்படுத்தி வைக்கவில்லை என கேட்டார். இதனால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    அதன் பின்னர் வெளியில் சென்று விட்டு சின்னவர் வீட்டிற்கு வந்தபோது, மகாலட்சுமி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே திருமணமாகி 9 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்ததால் சேலம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார்.

    இதில் மகாலட்சுமியின் பள்ளி சான்றிதழ் ஆய்வு செய்தபோது 17 வயதில் மகாலட்சுமியை சின்னவர் திருமணம் செய்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக ஆர்.டி.ஓ. சேலம் பள்ளப்பட்டி போலீசுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து பள்ளப்பட்டி போலீசார் 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக சின்னவரை போக்சா வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×