என் மலர்
சேலம்
- அம்சாரம்மன் சமேத வேடியப்பன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
- இவ்விழாவை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி (புதன்கிழமை) காலை மகாகும்பாபிேஷக முகூர்த்தகால் நடுதல், கங்கனம் கட்டுதல், முளைப்பாரி போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சேலம்:
சேலம் உடையாப்பட்டி குபேர கணபதி, சப்த கன்னிமார்கள், திரவுபதி அம்மன், சப்த முனியப்பன்கள், அம்சாரம்மன் சமேத வேடியப்பன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
இவ்விழாவை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி (புதன்கிழமை) காஅம்சாரம்மன் சமேத வேடியப்பன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.லை மகாகும்பாபிேஷக முகூர்த்தகால் நடுதல், கங்கனம் கட்டுதல், முளைப்பாரி போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தீர்த்தக்குடம்
வருகிற 26-ந்தேதி காலை 8 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, தீபாராதனை, 10 மணிக்கு உடையாப்பட்டி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து அழைத்து வருதல், மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேச பலி, மாலை 6.30 மணிக்கு கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜைகள், இரவு 8.30 உபசார பூஜை, 9.30 பஞ்சலோகம், நவரத்தினம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதையடுத்து 27-ந்தேதி காலை 6 மணிக்கு உடையாப்பட்டி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து பால் குடம் எடுத்து அழைத்து வருதல், 7 மணிக்கு மங்கள இசை, 2-ம் கால யாக பூஜைகள், வேதபாராயணம், மூலமந்திர ஹோமங்கள், 8 மணிக்கு ஸ்பர்சஹூதி, நாடி சந்தனம், திரவியாஹூதி, காலை 9 மணிக்கு பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, உபசார பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
கும்பாபிஷேகம்
இதையடுத்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தனூர் லக்னத்தில் யாத்ராதானம், கடம் புறப்பாடு, வேடியப்பன் சாமி மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் மகாகும்பாபிஷேகம் எனும் நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது.
காலை 10.30 மணிக்கு மேல் மகா அபிஷேகம், அலங்காரம், கோ பூைஜ, மகா நெய்வேத்தியம், மகா தீபாராதனை ஆசீர்வாதம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. காலை 10.45 மணி முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இவ்விழாவில் ஊர் பொதுமக்கள், பக்தர்கள், குல பங்காளிகள் தங்கள் குடும்பத்தாருடன் பெருந்திர ளாக பங்கேற்று வேடியப்பன் சாமியின் அருளை பெறுமாறு வேடியப்பன் அம்சாரம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் குலவழி மக்கள், பங்காளிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
+2
- சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது.
- கோவில் கும்பாபி ஷேக விழா வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 2-ந் தேதி கோவில் வளாகத்தில் யாகசாலைக்கு முகூர்த்த கால் நடப்பட்டது.
சேலம்:
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வழிபட்டு செல்கிறார்கள்.
கும்பாபிேஷக விழா
இந்த கோவில் கும்பாபி ஷேக விழா வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 2-ந் தேதி கோவில் வளாகத்தில் யாகசாலைக்கு முகூர்த்த கால் நடப்பட்டது. நாளை (25-ந் தேதி) முதல் யாகசாலை பூஜை தொடங்குகிறது. தற்போது இறுதி கட்ட யாக சாலை பூைஜ பணிகள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 60 அடி நீளம், 60 அடி அகலத்தில் பஞ்சாசன வேதிகை அமைத்து நவ குண்டத்துடன் அரண்மனை யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் கோட்டை மாரியம்மனுக்கு 9 யாக குண்டம், விநாயகருக்கு 5 யாககுண்டம் , வெள்ளையம்மன், பொம்மியம்மாள், மதுரை வீரன் ஆகிய சுவாமிகளுக்கு ஓட்டு மொத்தமாக 1 யாக குண்டம், துர்க்கை அம்மன், வைஷ்ணவி, மகேஸ்வரி உள்பட பரிவார மூர்த்திகளுக்கு ஒட்டு மொத்தமாக 1 யாக குண்டம், கோபுரத்திற்கு 5 யாக குண்டம், தங்கத்தேருக்கு தலா 1 யாக குண்டம் என மொத்தம் 23 யாக குண்டம் அமைக்கப்பட்டுள்ளது.
ராஜகோபுரத்திற்கு 7 கலசம், மூலஸ்தான விமானம் 5 , விநாயகர் சன்னதி விமானம் 3, மதுரை வீரன் சன்னதி விமானம் 1 என ெமாத்தம் 16 கலசங்கள் வைக்கப்பட உள்ளது.யாகசாலை பூைஜக்கு சேலம், கோவை, தஞ்சை, கடலூர் உள்பட மாவட்டங்களில் இருந்து சிவாச்சாரியார்கள், தமிழ் ஓதுவார்கள் என மொத்தம் 45 பேர் பங்கேற்கிறார்கள். யாகத்திற்காக 108 வகையான மூலிகைகள், நெய் பழங்கள் பயன்படுத்தப்படும், கும்பாபிஷேகத்திற்கு பின் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும்.
விநாயகர் வழிபாடு
இன்று கணபதி வழிபாடு தொடங்கியது. தொடர்ந்து மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாலிகையை யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்களும் புனித நீர் கலசம், முளைப்பாலிகையை கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். இரவு 8.30 மணிக்கு வாஸ்து சாந்தி, திசா ஹோமம், காப்பு கட்டுதல் நடக்கிறது.
முதற்கால யாக பூஜை
நாளை (25-ந் தேதி) காலை 8 முதல் 11.30 வரை விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாகம், அக்னி சங்கரணம், 4 முதல் 5 மணி வரை சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு, 6 மணி முதல் 10 மணி வரை முதற்கால யாக பூஜை நடக்கிறது.
26-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் 2-ம் கால யாக பூஜை, 11 மணி முதல் 1 மணி வரை ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசம் பொருத்துதல், 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.
கும்பாபிஷேக விழா
27-ந் தேதி அதிகாலை 4.30 முதல் 7.30 வரை 4-ம் கால யாக பூஜை, 7.40 முதல் 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடி மரத்திற்கு சம காலத்தில் மகாகும்பாபிஷேகம், 8.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம், 10 மணிக்கு மேல் மூலவர் சுவாமிக்கு மகா அபிேஷகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம், மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்படுதலும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அதிகாரி அமுதசுரபி, அறங்காவலர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார் உள்பட பலர் செய்து வருகிறார்கள்.
- கல்லூரியில் சேர்த்து விட்டதற்காக மணிகண்டனிடம் கமிசன் தொகையாக ரூ.3,500-யை கேட்டு ஜெயசூர்யா தொந்தரவு செய்து வந்துள்ளார்.
- சாலையில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த ஜெயசூர்யா மற்றும் அவரது நண்பர் பிரேம் ஆகியோர் வழிமறித்து தாக்கியுள்ளனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள கோணகப்பாடி கிராமம். அத்திக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (19) இவருடைய நண்பர் மணிகண்டன் (19)என்பவரை நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்க அத்திகட்டானூர் பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா என்பவர் உதவி செய்ததாக கூறப்படுகிறது.
கல்லூரியில் சேர்த்து விட்டதற்காக மணிகண்டனிடம் கமிசன் தொகையாக ரூ.3,500-யை கேட்டு ஜெயசூர்யா தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கமிஷன் தொகையை கொடுக்காமல் காலதாமதம் படுத்தி வந்த மணிகண்டனை நேற்று அத்திக்கட்டானூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த ஜெயசூர்யா மற்றும் அவரது நண்பர் பிரேம் ஆகியோர் வழிமறித்து தாக்கியுள்ளனர்.
அப்போது சிவப்பிரகாஷ் என்பவர் மணிகண்டனுக்கு ஆதரவாக பேசியபோது அவரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இதில் காயம் அடைந்த சிவப்பிரகாஷ் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் ஜெயசூர்யா,பிரேம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடந்த 1 மாத காலமாக சரியாக மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
- தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் குப்ப கவுண்டன் வளவு பகுதியை சேர்ந்தவர் பெரமச்சி இவருடைய மனைவி குள்ளம்மாள் (80) இவர் கடந்த 5 வருடமாக ஆஸ்துமா மற்றும் டிபி நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 1 மாத காலமாக சரியாக மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய மகன் கந்தசாமி மற்றும் உறவினர்கள் குள்ளம்மாளை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.
- நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியில் தொடங்கப்படும் காரியம் வெற்றி கரமாக அமையும் என்பதால் அன்று குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கவும் ஆர்வம் காட்டுகின்றனர்.
- அந்த வகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசும், தனியார் பள்ளிகளும் தீவிரம் காட்டி வருகிறது.
சேலம்:
நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியில் தொடங்கப்படும் காரியம் வெற்றி கரமாக அமையும் என்பதால் அன்று குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கவும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசும், தனியார் பள்ளிகளும் தீவிரம் காட்டி வருகிறது .
அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள 800-க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டிருந்தது. பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். தொடர்ந்து காலை முதலே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்தது. ஆர்வத்துடன் மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர். இதே போல தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.
மாணவர்களுக்கு கையை பிடித்து வித்யாரம்பம் நிகழ்ச்சியுடன் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக நடந்தது. அரசு பள்ளிகளில் கல்வி துறை அதிகாரிகள், தனியார் பள்ளிகளில் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்காணித்து வருகிறார்கள்.
- இளங்கோவன் 48, இவர் மேட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
- இரவு 10 மணியளவில் அரசு பஸ்சில் வீட்டிற்கு திரும்பினார். பஸ் மேச்சேரி அருகே வந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரியை சேர்ந்தவர் இளங்கோவன் 48, இவர் மேட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நேற்று அந்த நிறுவனத்திற்கு சென்ற அவர் இரவு 10 மணியளவில் அரசு பஸ்சில் வீட்டிற்கு திரும்பினார். பஸ் மேச்சேரி அருகே வந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த சக பயணிகள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிேலயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
- அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
சேலம்:
சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களைத் தவிர்த்து, வெடிபொருள் சட்டமும் விதிகளும், 1884 மற்றும் வெடிபொருள் சட்டம் 2008–ன் கீழ் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.
தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் வழிபாடு நடத்தினர்.
- நிறுவன உரியைாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் வாகனங்களுக்கும் மாலையிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வணங்கினர்.
சேலம்:
ஆயுத பூஜை விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆயுத பூஜை விழா
இதையொட்டி வீடுகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் வழிபாடு நடத்தினர். மேலும் நிறுவன உரியைாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் வாகனங்களுக்கும் மாலையிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வணங்கினர்.
இதையொட்டி கடந்த 21 மற்றும் 22-ந் தேதிகளில் பூஜைக்கு தேவையான பழங்கள், காய்கறிகள், சுண்டல், பொரி, அவல், கடலை, சுண்டல், பூக்கள் விற்பனை அதிக அளவில் ந டந்தது. மேலும் வீடுகள், தொழில் நிறுவனங்களில் கட்டப்படும் வாழைக்கன்றுகள், வெண் பூசணிக்காய்களும் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இதனை பொது மக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர். வாழைக்கன்றுகளை வீடுகள், நிறுவனங்களிலும் அதிக அளவில் கட்டியிருந்தனர். மேலும் மீதம் உள்ள வழைக்கன்றுகள், சேதம் அடைந்த காய்கறிகள், பூக்களையும் வியாபாரிகள் சாலையோரம் விட்டு சென்றனர். இதனால் சந்தைகள் உள்பட பல பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடந்தன.
இதே போல திருஷ்டி சுற்றிய வெண் பூசனிக்காய்களையும் பொதுமக்கள் சாலைகள் மற்றும் தெருக்களில் போட்டு உடைத்தனர். மேலும் வீடுகளை சுத்தப்படுத்தி தேவையில்லாத பொருட்களையும் தெருக்களில் தூக்கி போட்டனர். இதனால் சேலம் மாநகரில் கடை வீதிகள், மார்க்கெட்கள், சாலையோர கடைகள், குடியிருப்புகள் என அனைத்து மண்டலங்களிலும் குப்பைகள் மலை போல தேங்கி குவிந்து கிடந்தன.
1300 டன் குப்பைகள்
இந்த குப்பைகளை மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் இன்று அதிகாலை முதல் வாக னங்க ளில் ஏற்றி அப்புறப்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் 1300 டன் குப்பைகள் மாநகரில் தேங்கி இருந்ததாகவும் தற்போது அந்த குப்பைகள் வேகமாக அகற்றப்பட்டு வருவதாகவும் இன்று மாலைக்குள் அனைத்து குப்பகைளும் அகற்றப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- படகு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
- விசைப்படகிற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் ஆண்டுக்கு 70 லட்சம் மீன் குஞ்சுகள் மீன்வளத்துறை சார்பில் விடப்பட்டு அணையில் வளர்க்கப்படுகிறது. மீன் குஞ்சுகள் பெரிதானவுடன் உரிமம் பெற்ற 2016 மீனவர்களை கொண்டு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அணையில் தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பதை தடுக்கவும், மீன்பிடி உரிமம் இல்லாத பரிசல்களை பறிமுதல் செய்தல், நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மீன்வளத் துறையினருக்கு ரோந்து செல்ல விசைப்படகு வழங்கப்பட்டது.
இந்நிலையில் கீரை காரனூர் காவிரி ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்ட மீன்வளத்துறைக்கு சொந்தமான விசைப்படகு நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் படகு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் விசைப்படகிற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஏற்காட்டில் பனிப்பொழிவு பெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுகிறது.
- மலைகளில் மேகமூட்டம் படர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
ஏற்காடு:
ஏற்காடு கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத் தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி (சனிக்கிழமை), 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய வார இறுதி நாள் மற்றும் 23-ந்தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, இன்று (24-ந்தேதி) விஜயதசமி உள்ளிட்ட பண்டிகை என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் 21-ந்தேதி முதலே ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
வழக்கத்தை விட இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். காலையில் இருந்தே கார், மோட்டார் சைக்கிள், சொகுசு வேன், பஸ்களில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.
ஏற்காட்டில் பனிப்பொழிவு பெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுகிறது. மேலும் மலைகளில் மேகமூட்டம் படர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர். குறிப்பாக ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரி இயற்கையாக அமைந்துள்ள ஏரி ஆகும். இதைச்சுற்றிலும், மான் பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா, அண்ணாபூங்கா போன்றவைகளால் சூழப்பட்டுள்ளது.
இங்கு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய குவிந்தனர். படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சென்று சிலு சிலு இயற்கை காட்சிகளை ரசித்தனர்.
ஏரிக்கு அருகாமையில் அண்ணா பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள அழகு செடிகள், வண்ண வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். இங்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் நின்று செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகமாக விளையாடினர். கிளியூர் நீர்வீழ்ச்சியில் உற்சாகமாக குளியல் போட்டனர்.
இந்திய தாவரவியல் கழகத்தால் பராமரிக்கப்படுகின்ற தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் உள்ளது. இவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் இயற்கையாகவே காட்சித்தளங்களாக அமைந்துள்ள லேடிஸ் சீட், ஜென்ஸ், சில்ரன்ஸ் சீட் பாறைகளில் நின்று சேலம் நகரத்தின் அழகை கண்டு ரசித்தனர்.
ஏற்காட்டின் கிழக்கு முனையில்அமைந்துள்ள பகோடா காட்சி முனை பிரமிட் பாய்ன்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ராமர் கோவில் ஒன்றுள்ளது. இங்கிருந்து அயோத்தியாபட்டணம் பகுதிகளை கண்டுகளித்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் மிளகாய் பஜ்ஜி கடைகள் களை கட்டியது. பனி மூட்டம், மழை பொழிவு காரணமாக குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் டீ, பஜ்ஜி வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இன்று காலை முதல் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் ஏற்காடு அண்ணா பூங்கா சாலை, படகு இல்ல சாலை, மற்றும் ஒண்டிக்கடை பகுதிகள் ஸ்தம்பித்தது.
- வீட்டிற்கு சென்று பார்த்த போது 3 பைகளில் ஒரு பை மாயமாகி இருந்தது.
- மனோகரன் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கோவை கோட்ட போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (55), முன்னாள் கவுன்சிலரான இவர் தற்போது 39-வது வார்டு அ.தி.மு.க. செயலாளராக உள்ளார்.
நேற்று முன்தினம் மனைவி பரமேஸ்வரி 52 மற்றும் குடும்பத்துடன் கோவையில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றார். மாலையில் கோவையில் இருந்து அரசு பஸ்சில் சேலத்திற்கு வந்தனர். அப்போது 3 பைகளை எடுத்து வந்தனர்.
பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்த போது 3 பைகளில் ஒரு பை மாயமாகி இருந்தது. அந்த பையில் துணியுடன் 20 பவுன் நகைகளும் இருந்தது. இதையடுத்து மனோகரன் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கோவை கோட்ட போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.
அவர்கள் பஸ் டிரைவர் பூபதியை தொடர்பு கொண்டு பை குறித்து விசாரித்தனர். அவர் பஸ்சை சோதனை செய்து விட்டு பை எதுவும் இல்லை என்று கூறினார். இதனால் அந்த பை எங்கு வைத்து மாயமானது என்பது மர்மமாக உள்ளது. இதனால் பள்ளப்பட்டி போலீசார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். தொடர்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 10-ந் தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
- தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரமாக பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது.
இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை சரிவர பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இதையடுத்து கடந்த 10-ந் தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரமாக பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 10-ந் தேதி அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் நீர்வரத்தின் காரணமாக இன்று காலை 48.86 அடியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. கடந்த 2 வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 18 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 138 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.






