search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "expropriate"

    • சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே எனக்கு சொந்தமாக ரூ.60 கோடி மதிப்பில் 2 ஏக்க ர் விவசாய நிலம் உள்ளது.
    • அந்த நிலத்தை கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் அபகரிக்க முயற்சி செய்து வருகிறார்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மோகன் சேலம் மநாகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது-

    சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே எனக்கு சொந்தமாக ரூ.60 கோடி மதிப்பில் 2 ஏக்க ர் விவசாய நிலம் உள்ளது. இதில் தற்போது தென்னை மரங்கள் உள்ளன. இந்த நிலத்தை ஜெயராமன் என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளேன்.

    இந்தநிலையில் அந்த நிலத்தை கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். நேற்று அவர் உள்பட 20 பேர் தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தப்போவதாக கூறி எனது விவசாய நிலத்திற்குள் உள்ளே நுழைந்தனர். இதனை தடுத்து நிறுத்திய நான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன்.

    அவர்களும் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். எனவே அத்து மீறி விவசாய விளை நிலத்தை அபகரிக்க தொடர்ந்து முயற்சிக்கும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.  

    ×