என் மலர்
ராமநாதபுரம்
- நம்மை ஜாதி மத உணர்வுகள் தான் பிரித்து வருகிறது.
- நாட்டின் தொன்மையான மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்று கூறியவர் காயிதே மில்லத்.
கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழ் தேசிய இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-
நான் எளிய பின்னணியில் இருந்து வந்தவன். கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதலாக தேர்தலை சந்தித்தேன். என்னை சமாளிக்க முடியாமல் அதிகாரத்தில் இருந்த தி.மு.க. ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தனர். இலங்கையில் தமிழின அழிப்புக்கு காங்கிரஸ் முக்கிய காரணம். அதற்கு துணையாக இருந்தது தி.மு.க. பலமுறை எனது குரலை நசுக்க சிறையில் அடைத்தார்கள்.
இதற்கு வேறு வழியில்லை என்ற பட்சத்தில் அரசியல் கட்சி தொடங்கினேன். அரசியல் விடுதலை ஒன்றே இதற்கான தீர்வாகும்.
நம்மை ஜாதி மத உணர்வுகள் தான் பிரித்து வருகிறது. இந்து தமிழன் இஸ்லாமியருக்கும், இஸ்லாமிய தமிழன் இந்துவுக்கும் வாக்களிப்பதில்லை இவர்கள் 2 பேருக்கும் கிறிஸ்தவ தமிழன் வாக்களிப்பது இல்லை. இதனால் தான் இங்கு எந்த தமிழனும் எழுவதில்லை, வெல்வதில்லை, வாழ்வதில்லை. இதேபோல் ஜாதி உணர்வாலும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.
நாட்டின் தொன்மையான மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்று கூறியவர் காயிதே மில்லத். அதுவரை இஸ்லாம் என்றால் உருது என்று நினைத்துக் கொண்டிருந்த நேருவிடம் இஸ்லாம் எங்கள் வழி இன்பத்தமிழே எங்கள் மொழி என காயிதே மில்லத் கூறினார்.
சாதி, மதமாக இணைந்து இருந்தீர்கள் என்றால் நீங்கள் அச்சுறுத்தப்படுவீர்கள். மொழி இனமாக நீங்கள் இணைந்திருந்தால் வலிமை பெறுவீர்கள்.
சீமான் பி.ஜே.பி.யின் பி டீம் என்று கூறினார்கள். எனவே சீமானுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று பிரசாரம் செய்தார்கள். ஆனால் யாரும் பா.ஜ.க.விற்கு ஓட்டு போடாதீர்கள் என கூறவில்லை.
தமிழகத்தைச் சேர்ந்த நாகலாந்து ஆளுநர் இல கணேசன் அண்மையில் காலமானார். அவருக்கு பிரதமர் சார்பில் முதலமைச்சர் சென்று அஞ்சலி செலுத்தினார். இப்பொழுது யார் பா.ஜ.க.வின் பி டீம் என்பது தெரியவரும்.
பா.ஜ.க. மனித குலத்தின் பகைவன், திராவிட கட்சிகள் என் நிலத்தின் தீய சக்திகள். கேடுகெட்ட கேவலமிக்க ஊழல் லஞ்சத்தின் ஊறிப்போனவை திராவிட கட்சிகள். அண்ணா மறைவிற்கு பின் நெடுஞ்செழியன் வந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக வந்தவர்களால் தான் தமிழகம் பாதிக்கப்பட்டது. கச்சத்தீவு பிரச்சனையால் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் தாக்கி அழிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆன்றோர்களும், சான்றோர்களும் இருந்த அரசியல் செய்த நிலத்தில், உலகத்திற்கு பொதுமறை தந்த மக்கள், சிறந்த பேரறிஞர்கள் வாழ்ந்த இந்த நிலத்தில் திராவிட சூழ்ச்சிகளால் தான் வீழ்த்தப்பட்டு அடிமைகளாக கிடக்கிறது தமிழ் சமூகம். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மிகப்பெரிய ஆளுமைகளுடன் அரசியல் செய்து 1 1/2 ஆண்டுகள் மேலாக சிறையில் இருந்தவர் நான். 220 வழக்குகள் போடப்பட்டு ஏராத நீதிமன்ற படிக்கட்டு இல்லை. தொழில் செய்ய முடியாது. கடவுச்சீட்டு இல்லை. ஒரு நாட்டிற்கு செல்ல முடியாது. எல்லாத்தையும் விட்டு என் மொழி, என் இனம், என் மக்கள், அவர்களின் எதிர்காலம், பாதுகாப்பு, நல்வாழ்வு என நின்று வாக்குக்கு காசு கொடுக்காமல் ஒருத்தருடைய ஆதரவும் இல்லாமல் திரள்நிதி திரட்டி கட்சி நடத்தி போராடி போராடி 4 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்று 1.1 சதவீதத்தில் இருந்து 8.50 விழுக்காடு வாக்குகளை பெற்று தனித்து நின்று அங்கீகாரம் பெற்ற கட்சி நாம் தமிழர் கட்சி. மக்களின் கவனத்தை பெற்று திராவிட கட்சிகளை வீழ்த்தி தமிழ் தேசியத்தின் அரசியலை கட்டி வருகிறோம். கூட்டணி சேராத ஒரே கட்சி நாம் தமிழர் தான். மக்கள் ஓட்டு போடுவதற்காக தேர்தலில் நாங்கள் நிற்கவில்லை.
இந்த நிலையில் திடீரென்று வந்து திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று தான் என்று கூறி, மறுபடியும் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். என்றால் கோபம் வருமா? வராதா? தமிழர் அல்லாதவர்கள் வசதியாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டு வந்த கோட்பாடு தான் திராவிடம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர் அல்லாதவர் பாதுகாப்பாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டு வரப்பட்டது தான் திராவிடம். திராவிடம் என்ற ஒன்றே கிடையாது. சங்கி என்றால் கூட நண்பன் என்று பொருள் வரும். திராவிடம் என்றால் எப்படி பார்த்தாலும் திருடன் என்று தான் பொருள் வரும். அந்த சொல்லே தமிழ் சொல் கிடையாது. எதையாவது தெரிந்து கொண்டு அரசியலுக்கு வர வேண்டும். காமராஜரை பற்றி 10 நிமிடம் பேசுங்கள். வேலு நாச்சியாரை பற்றி பேசுங்கள். ஆனால் நீங்கள் மொத்தமாக பேச அனுமதிக்கும் நேரம் 10 நிமிடம் தான்.
திருச்சியில் பிரசாரம் செய்வதற்கு 15 நிமிடம் தான் கேட்கிறார்கள். சனிக்கிழமை மட்டும் மக்களை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள். இதில் பேசவும் அவர்கள் மனப்பாடம் செய்ய வேண்டும். வேட்டையாடும் சிங்கமாக இல்லை. வேடிக்கை பார்க்க வரும் சிங்கமாகவும் இல்லை. வேடிக்கை காட்ட வரும் சிங்கமாக உள்ளது. கோட்பாட்டளவில் எதிர்க்கிறேன். உனக்கு நண்பா, நண்பி. எனக்கு தம்பி, தங்கைகள். அவன் எதிர்காலத்திற்கும் நான் போராடி வருகிறேன். பா.ஜ.க. முன் கொள்கை எதிரி. முதலில் உங்கள் கொள்கையை சொல்லுங்கள். தி.மு.க. அரசியல் எதிரி. அப்போ அ.தி.மு.க. அரசியல் உனக்கு எதிரி அல்ல. காங்கிரசும் எதிரி அல்ல. பா.ஜ.க., காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவற்றின் வர்ணம் மாறும். ஆனால் அவர்களின் கொள்கை மாறாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- யார் மீதும் விருப்பு, வெறுப்பு இன்றி செயல்படுகின்ற கட்சி அமமுக.
- 2026-ல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல, உணர்வு ரீதியாக விஜய் ஏற்படுத்துவார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரம் மேலும் கூறியதாவது:-
யூகங்களுக்கு பதில் சொல்ல வேண்டாம். நான் எப்போதும் எதார்த்தமாக, நம்புவதை பேசக்கூடியவன். யார் மீதும் விருப்பு, வெறுப்பு இன்றி செயல்படுகின்ற கட்சி அமமுக. யாரை பார்த்தும் எங்களுக்கு பொறாமை இல்லை.
இன்றைக்கு கட்சி ஆரம்பிக்கும்போது ஒருவரை அண்ணன், தம்பி என்று சொல்வது, அதற்கு பிறகு அவர்களை ரோட்டில் நின்று திட்டுவதெல்லாம் எங்களுக்கு தெரியாது.
எங்களை விமர்சிப்பவர்களுக்கு பதில் விமர்சனம் கொடுப்போம். மற்றபடி, எங்களுக்கு யாரை பார்த்தும் பொறாமை கிடையாது.
விஜய் அவர்களை பார்த்து அந்த கருத்தைதான் சொன்னேன். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. பிரபலமான நடிகர் உச்சத்தில் இருக்குமபோதே அரசியலுக்கு வந்திருக்கிறார். மக்கள் மத்தியில் அதனால் ஏற்படுகின்ற தாக்கம் தேர்தலில் ஏற்படும்.
2026-ல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல, உணர்வு ரீதியாக விஜய் ஏற்படுத்துவார் என்று சொல்வது எனது அனுபவத்தில் சொல்வது.
அதற்காக, நீங்கள் விஜயுடன் கூட்டணிக்கு போவீர்களா என்றால், அதைப்பற்றி எல்லாம் நான் முடிவு செய்யவில்லை.
நாங்கள் அமமுக இப்போது சுதந்திரமாக இருக்கிறோம். உறுதியாக வெற்றிப்பெறக் கூடிய கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவோம். இது தான் எங்கள் நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
- இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு செல்வதற்காக ஆபத்தான முறையில் இளைஞர்கள் பயணம்
- ஓடும் காரின் உள்ளே இருந்துகொண்டு, காரின் மேற்கூறையில் இளைஞர் ஒருவர் ஏற முயன்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
இன்று காலை 8 மணி அளவில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபாராணி மற்றும் இமானுவேல் சேகரன் குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முருகேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு செல்வதற்காக பார்த்திபனூர் பகுதியில் ஆபத்தான முறையில் பேருந்து மற்றும் கார்களில் பயணித்த இளைஞர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் பார்த்திபனூர் அருகே ஓடும் காரின் உள்ளே இருந்துகொண்டு, காரின் மேற்கூறையில் ஏற முயன்ற இளைஞர் ஒருவர், தவறி சாலையில் விழுந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக, பின்னே வந்த வாகனம் உடனடியாக பிரேக் அடித்ததால், அந்த இளைஞர் நூலிழையில் உயிர்தப்பினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மக்களோடு மக்களாக நிற்கிறவன்தான் மக்களுக்காக மக்களிடம் இருந்து வந்தவன்.
- மக்கள் என்னை பார்க்கிறதற்காக நான் வரேன் என்று தான் கூற வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், விஜயின் பரப்புரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர்," விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம்" என்று கூறினார்.
மேலும் சீமான் கூறியதாவது:- நான் இப்போது மக்களை சந்திக்கிறேன். எந்த போராட்டத்தில் நான் பங்கேற்காமல் இருந்திருக்கிறேன்.
மக்களோடு மக்களாக நிற்கிறவன்தான் மக்களுக்காக மக்களிடம் இருந்து வந்தவன்.
மக்களை சந்திக்கிறது என்பது ரோடு ஷோ நடத்துறது இல்ல. கூட்டி வெச்சு பேசிட்டு போறது. மக்களை சந்திக்கிறது என்றால் மக்களின் பிரச்சனைகளை மக்களுக்காக மக்களோடு நிக்கிறது தான் மக்களை சந்திக்கிறது.
அப்படி சந்திக்கிறீர்களா? மக்கள் என்னை பார்க்கிறதற்காக நான் வரேன் என்று தான் கூற வேண்டும்.
இது வேட்டையாட வர சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சமூக நீதிக்காக தியாகி இமானுவேல் சேகரன் அரும்பாடுபட்டவர்.
- மணிமண்டபம், சிலை அமைக்க ஏற்கனவே ரூ.3 கோடி நிதி ஒதுக்கினோம்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூகநீதி போராளி தியாகி இமானுவேல் சேகரன் 68-வது நினைவு நாளில் முதலமைச்சரின் அறிவுரைப்படி நானும், மூத்த அமைச்சர்களும் இங்கு மரியாதை செலுத்தினோம். சமூக நீதிக்காக தியாகி இமானுவேல் சேகரன் அரும்பாடுபட்டவர்.
அவருக்கு மணிமண்டபம், சிலை அமைக்க ஏற்கனவே ரூ.3 கோடி நிதி ஒதுக்கினோம். அதில் தற்போது 95 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டது. விரைவில் அதனுடைய பணிகள் அனைத்தும் முடிவடைந்து திறந்து வைக்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அ.தி.மு.க., பாஜகவின் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக நீங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறீர்களே அதுபற்றி கூறுங்கள் என்ற நிருபர்கள் கேட்டதற்கு, இங்கு அஞ்சலி செலுத்துவதற்காக தான் வந்தேன். அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
- தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
- ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 28 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
இன்று காலை 8 மணி அளவில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபாராணி மற்றும் இமானுவேல் சேகரன் குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முருகேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து அ.ம.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். அணி சார்பில் தர்மர் எம்.பி., நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தே.மு.தி.க. சார்பில் சுதீஷ், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், த.வெ.க. சார்பில் பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ், மதுரை மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.தங்க பாண்டியன், கல்லணை, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மலர்விழி பாலா, மதன் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
போலீசார் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினர், அமைப்புகளுக்கு நேரம் ஒதுக்கி இருந்தனர். அந்த நேரத்தில் மட்டுமே அவர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக இன்று காலை பெண்கள் உள்பட ஏராளமானோர் முளைப்பாரி எடுத்தும், வேல் குத்தியும் நினைவிடத்தில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தென்மண்டல ஐ.ஜி. தலைமையில் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில், 24 எஸ்.பி.க்கள், 70 டி.எஸ்.பி.க்கள் உள்பட 8 ஆயிரத்து 400 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவை தவிர 45 பறக்கும் படை வாகனங்கள், நவீன கேமராவுடன் 2 டிரோன்கள் பாதுகாப்பு பணியில் உள்ளன.
ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 28 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அஞ்சலி செலுத்த வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
- தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
- 2 மாத காலம் தடை உத்தரவு அமலில் இருக்கும்.
ராமநாதபுரம்:
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் 2 மாத காலம் தடை உத்தரவு அமலில் இருக்கும். மேலும் தடை உத்தரவு அமலில் உள்ள நாட்களில் இன்று முதல் 15-ந்தேதி வரை மற்றும் அக்டோபர் 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பிறப்பித்துள்ளார்.
- இடத்தை தேர்வு செய்ய 4 மாதங்களுக்கு முன் தமிழக அரசு உத்தரவு.
- 500 முதல் 600 ஏக்கர் நிலம் போதுமானதாக இருக்கும் என டிட்கோ அறிவிப்பு.
ராமநாதபுரத்தில் விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்ய 4 மாதங்களுக்கு முன் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் விமான நிலையம் அமைக்க கீழக்கரை, உச்சிப்புளி ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் விமான நிலையத்திற்கு 500 முதல் 600 ஏக்கர் நிலம் போதுமானதாக இருக்கும் டிட்கோ அறிவித்துள்ளது.
- கோவிந்தராஜன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
- விபத்தில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நென்மேனி பகுதியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் தாய், தந்தை, மகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்தில் தாய் யமுனா, மகள் ரூபினி மற்றும் கார் ஓட்டுநர் காளீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த தந்தை கோவிந்தராஜன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேப்பங்கொட்டைகளை சேகரித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்தனர்.
- மின்னல் தாக்கி மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேப்பமரத்தடியில் வேப்பங்கொட்டைகளை சேகரித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
அஸ்பியா பானு (13), சபிகா பானு (10) மின்னல் தாக்கி மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
- ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
- மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம்.
ராமேசுவரம்:
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 11-ம் தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்தி வந்தனர்.
இதனால் ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக ரூ.15 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இதனிடையே, கடந்த 19-ந் தேதி மீனவர்களின் விடுதலை கோரிக்கையை வலியுறுத்தி தங்கச்சி மடத்தில் பெண்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ராமேசுவரத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரெயிலை மறித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் மீனவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், கடந்த 12 நாட்களாக ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர். இன்று முதல் அவர்கள் மீன்பிடிக்க செல்லவும் திட்டமிட்டு உள்ளனர்.
இதுகுறித்து அனைத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா கூறுகையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வது குறித்தும், மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது குறித்தும் தமிழக முதலமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம் என்றார்.
இதையடுத்து வழக்கம் போல் இன்று முதல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டாமல் மிகவும் பாதுகாப்புடன் மீன்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
- ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
- மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
ராமேசுவரம்:
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 55 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 61 பேர் எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட் டது.
கைதான மீனவர்கள் இலங்கை மன்னார் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 11-ம் தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
இதனால் ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று 10-வது நாளாக ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. வேலைநிறுத்தத்தால் இதுவரை ரூ.15 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். 10 நாட்களாக நீடிப்பதால் வருமானமின்றி குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது. இதனால் கடன் வாங்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்கு தான் செல்ல வேண்டும். எனவே இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். வேலைநிறுத்தம் வாபஸ் பெறாவிட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கவலையுடன் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று மீனவர்களின் விடுதலை கோரிக்கையை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் பெண்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தங்கச்சிமடம் ரெயில் தண்டவாளத்தில் போராட்டக்காரர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் ராமேசுவரம்-தாம்பரம் ரெயில் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் அதன் பின் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதனிடையே இலங்கை சிறையில் உள்ள பாம்பன் நாட்டு படகை மீனவர்கள் ஒன்பது பேருக்கு தலா ரூ.3.50 கோடி (இலங்கை பணம்-இந்திய மதிப்பில் ரூ.ஒரு கோடி) கூடிய அபராதத்துடன் விடுதலை செய்து புத்தகம் நீதிமன்றம் உத்தரவிட்டது. மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் பாம்பன் பகுதி மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






