என் மலர்
ராமநாதபுரம்
- எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம்.
- அ.தி.மு.க. எங்களுக்கு எதிரி இல்லை. இ.பி.எஸ். மட்டும் தான் எங்களது எதிரி.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேவர் நினைவிடத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மூவரும் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து டி.டி.வி., ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது டி.டி.வி.தினகரன் கூறியதாவது:
* துரோகத்தின் முகவரியான எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் எங்கள் எதிரி.
* துரோகத்தை வீழ்த்தும் வரை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்றும் ஓயாது.
* எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம்.
* காலதாமதம் காரணமாக சசிகலாவால் எங்களுடன் இணைந்து இன்று வர முடியவில்லை.
* சசிகலா எங்கு இருந்தாலும் மனதால் என்றும் எங்களுடன் இணைந்து உள்ளார்.
* அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும்.
* ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையனுடன் கைகோர்த்து தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.
* அ.தி.மு.க. எங்களுக்கு எதிரி இல்லை. இ.பி.எஸ். மட்டும் தான் எங்களது எதிரி. இ.பி.எஸ்.-ஐ வீழ்த்தும் வரை ஓய மாட்டோம்.
* தொடர்ந்து ஒருங்கிணைந்து பயணிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- லட்சக்கணக்கான தமிழர்கள் மனதில் மான உணர்ச்சியை ஊட்டியவர் சீமான்.
- என் அம்மா இறந்தபோது கலிங்கப்பட்டி வீட்டிற்கு ராத்திரியோடு ராத்திரியாக சீமான் வந்து விட்டார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேவர் நினைவிடத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவரும் நேரில் சந்தித்து கொண்டனர்.
சீமானை கண்டதும் அவரின் தோளில் கைபோட்டு நடந்துவந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ சீமானை புகழ்ந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் சீமான்.
* லட்சக்கணக்கான தமிழர்கள் மனதில் மான உணர்ச்சியை ஊட்டியவர் சீமான்.
* நான் மருத்துவமனையில் இருந்தபோது சீமான் வந்து பார்த்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கவலையோடு நான் விசாரிப்பேன்.
* என் அம்மா இறந்தபோது கலிங்கப்பட்டி வீட்டிற்கு ராத்திரியோடு ராத்திரியாக சீமான் வந்து விட்டார்.
* இனி எங்கள் பயணம் தொடரும் என்று வைகோ கூறினார்.
ம.தி.மு.க.வினரும், நா.த.க.வினரும் மோதி வந்த நிலையில் இருவரும் இணக்கமாக பேட்டி அளித்து, இனி பயணம் தொடரும் என்று தெரிவித்தனர்.
- பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
விழாவில் இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.
அவரைத்தொடர்ந்து தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். மேலும், முன்னாள் அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
- நாட்டின் விடுதலைக்காக தன்னையே ஒப்படைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
- பசும்பொன்னில் முத்துராமலிங்கருக்கு மணிமண்டபம் அமைத்து புகழ் சேர்த்தவர் கலைஞர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
விழாவில் இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* நாட்டின் விடுதலைக்காக தன்னையே ஒப்படைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
* அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் இளவல் போன்று காட்சியளித்தவர் என அண்ணாவால் போற்றப்பட்டவர் முத்துராமலிங்கத் தேவர்.
* பசும்பொன்னில் முத்துராமலிங்கருக்கு மணிமண்டபம் அமைத்து புகழ் சேர்த்தவர் கலைஞர்.
* 2007-ம் ஆண்டு முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழா கலைஞர் ஆட்சியில் கொண்டாடப்பட்டது.
* பசும்பொன்னில் ரூ.3 கோடியில் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
விழாவில் இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.
- முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும்.
- தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
விழாவில் இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.
- ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று கடந்த ஒரு வாரமாக வீசி வருகிறது.
- தடை காரணமாக சுமார் ரூ.5 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்:
தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்து தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இவை வலுவடைந்து வருகிற 27-ந் தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழக கடற்பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று 35-45 கிலோ மீட்டர் வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று கடந்த ஒரு வாரமாக வீசி வருகிறது. வழக்கத்தை விட கடல் சீற்றத்துடன் காணப்ப டுகிறது. மோசமான வானிலை, புயல்சின்னம் காரணங்களால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 19-ந் தேதி முதல் மீன்வளத்துறை தடை விதித்தது.
7-ம் நாளான இன்றும் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக 800 விசை படகுகள், 300 நாட்டு படகுகள் ஆகியவை ராமேசுவரம், பாம்பன் துறைமுகங்கள், மீன்பிடி இறங்கு தளங்களில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வாரமாக மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தடை காரணமாக சுமார் ரூ.5 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் ராமேசுவரம், மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் தடையை மீறி கடலுக்கு சென்றதாக தெரிகிறது. அவர்களை கடலோர காவல் படையினர் கரைக்கு திரும்புமாறு எச்சரித்தனர்.
- முதுகுளத்தூர், ஆர்.எஸ். மங்கலம், திருவாடானை, மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
- தனுஷ்கோடியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம் நகரில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை 3-வது நாளாக இன்று காலையும் நீடித்து வருகிறது. அவ்வப்போது பெய்து வரும் மிதமான முதல் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பஸ் நிலையம், மருத்துவமனை, பள்ளிகளில் தண்ணீர் தேங்கியால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். தீபாவளி விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தண்ணீர் தேங்கி கிடந்த இடங்களில் நகராட்சி சேர்மன் கார்மேகம் அறிவுறுத்தலின்படி ஊழியர்கள் மோட்டார் எந்திரம் மூலம் தண்ணீரை அகற்றினர்.
இதேபோல் முதுகுளத்தூர், ஆர்.எஸ். மங்கலம், திருவாடானை, மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் வழக்கத்தை விட கடல் ஆக்ரோஷமாக காணப்பட்டது. அலைகள் பனைமர உயரத்துக்கு எழும்பின. வங்கக்கடலில் 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்துக்கு கடல் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பெரும்பாலான படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.
ராமேசுவரத்தில் அவ்வப்போது விட்டுவிட்டு பெய்யும் மழையால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். தனுஷ்கோடியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் சாலைகளை மணல்கள் மூடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ராமநாதபுரம் 30, மண்டபம் 55.10, ராமேசுவரம் 7, பாம்பன் 21.50, தங்கச்சிமடம் 41.50, பள்ளமோர் குளம் 18.40, திருவாடானை 16, தொண்டி 34, வட்டாணம் 11.80, தீர்த்தண்ட தானம் 83.20, ஆர்.எஸ். மங்கலம் 52, பரமக்குடி 51.80, முதுகுளத்தூர் 29.70, கமுதி 21, கடலாடி, வாலிநோக்கம் 23.
மாவட்டத்தில் மொத்த மழையின் அளவு 519 மில்லி மீட்டர் ஆகும்.
- எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
- 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரையும், நேற்று 30 பேரையும் என கடந்த 2 நாட்களில் மட்டும் 47 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
இச்சம்பவம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைதாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
- பரமக்குடி நகராட்சிக்கு புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்படும்.
ராமநாதபுரம் மாவட்டம் பல்வேறு திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:-
* தண்ணீர் இல்லாத காடு என கூறப்பட்ட ராமநாதபுரத்தை மாற்றி காட்டியது தி.மு.க. அரசு.
* இரண்டே ஆண்டுகளில் ராமநாதபுரம் மக்களின் குடிநீர் தேவையை தி.மு.க. அரசு நிறைவேற்றியது.
* விரிவுபடுத்தப்பட்ட குடிநீர் திட்டம் வரும் டிசம்பர் மாதம் நிறைவு பெறுகிறது.
* ராமநாதபுரத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 12,105 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் வழங்கப்படுகிறது.
* ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு சேதுபதி நகர் என பெயர் சூட்டியவர் கலைஞர்.
* 500 கி.மீ. கிராம சாலையை நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தியவர் கலைஞர் கருணாநிதி.
* ராமநாதபுரத்தில் 5000 சுனாமி குடியிருப்புகள் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டன.
* ஒவ்வொருவரின் தேவையையும் கனவையும் நிறைவேற்றும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
* ராமநாதபுரம் மாவட்டத்தில் 2.36 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது.
* 16 முக்கிய கண்மாய்கள் ரூ.18 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும், 6 கண்மாய்கள் ரூ.4 கோடியில் மறுசீரமைக்கப்படும்.
* ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம், நவீன வணிக வளாகமாக மாற்றியமைக்கப்படும்.
* ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
* பரமக்குடி நகராட்சிக்கு புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்படும்.
* பரமக்குடி நகராட்சியில் ரூ.4 கோடியில் புதிய கட்டிடம், ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
* செல்வானூர் கண்மாய், சிக்கல் கண்மாய்களும் மறு சீரமைக்கப்படும்.
* கமுதியில் ரூ.1 கோடி மதிப்பில் குளிர் பதன கிடங்கு அமைக்கப்படும்.
* மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.
* கச்சத்தீவை மீட்க இலங்கை அரசுக்கு கோரிக்கை வைக்க கூட மத்திய அரசு மறுக்கிறது.
* மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு நமது மீனவர்களை காக்க எதுவும் செய்யவில்லை.
* கச்சத்தீவை தரமாட்டோம் என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் சொல்கிறார், அதை மறுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் பேசவில்லை.
* நிதிப்பகிர்விலும் ஓரவஞ்சணை, பள்ளிக்கல்வித்திட்டத்திற்கும் நிதி தரமாட்டார்கள், பிரதமரின் பெயரால் உள்ள திட்டங்களுக்கும் நாம் தான் படியளக்க வேண்டும்.
* தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே மத்திய பாஜக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது.
* தமிழகத்தில் இயற்கை பேரிடர் தாக்கிய போது தமிழகத்திற்கு வராத மத்திய நிதி அமைச்சர்.
* பெருந்தலைவர் காமராஜரை கொல்ல ஆர்.எஸ்.எஸ் முயன்றது.
* தவறு செய்தவர்கள் அனைவரும் தவறில் இருந்து தப்பிக்க பா.ஜ.க.வுடன் சேருகின்றனர்.
* கூட்டணியில் ஆள் சேர்க்கும் அசைன்மென்டை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- ராமேசுவரம், பாம்பனில் வழக்கத்தை விட கடற்காற்று அதிகமாக இருந்ததால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கடற்காற்று வீசும். எனவே தென் கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல அரசு தடை விதித்தது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திலும் இன்று மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
ராமேசுவரம், பாம்பனில் வழக்கத்தை விட கடற்காற்று அதிகமாக இருந்ததால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் பாதுகாப்பாக கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. வழக்கமாக வார இறுதி நாட்களில் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
ராமேசுவரத்தில் கடைக்கோடியில் உள்ள தனுஷ்கோடி பகுதியில் நேற்று முதல் கடல் கொந்தளிப்புடன் உள்ளது. பனைமர உயரத்திற்கு அலைகள் எழுப்புகின்றன. இந்த பகுதியில் வீசும் சூறாவளி காற்று காரணமாக கடற்கரை மணல்கள் சாலைகளை மூடியுள்ளன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
- அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது.
ராமேசுவரம்:
புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், காசிக்கு நிகரானதாகவும் கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் பல்வேறு வகைகளில் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி, தை மற்றும் புரட்டாசி அமாவாசை காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாளிலிருந்து 15 நாட்கள் மகாளய பட்சம் அமாவாசையில் பித்ருபட்ச காலத்தில் மேலுலகில் வாழும் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் ஆத்மா தன் குடும்பத்தினரை காண பூலோகம் வருவதாக இந்துக்களின் நம்பிக்கை.
அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசிகளுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாத சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது.
பின்னர் புனித நீராடிய பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சங்கல்பம், திதி, தர்ப்பணம் செய்து முன்னோர்களின் பசி தீர்க்க பிண்டமிட்டு, கோதானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்து பிதுர்கர்மா பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கோவில், 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பிற்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பெயரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்டத்தின் உள்ள பிரசித்தி பெற்ற சேதுக்கரை, தேவி பட்டினம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.






