search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rameshwaram rain"

    • ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மழையால் அவதிக்குள்ளாகினர்.
    • தொடர்ந்து கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிப்புக்குள்ளாகினர்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலையில் இருந்தே கனமழை பெய்ய தொடங்கியது. இதில், ராமேசுவரத்தில் மட்டும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் குளம் போல தேங்கியது.

    நகராட்சி அலுவலகம் அருகே முனியசாமி கோவில் தெரு, நகராட்சி பொது மார்க்கெட், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மழையால் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

    பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் சிரமத்துடன் வீடு திரும்பினர்.

    இந்த நிலையில் இன்று வங்க கடலில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசக்கூடும். மேலும் புதன்கிழமை கன மழை பெய்யக்கூடும் என வானிமை மையம் அறிவுறுத்தி உள்ளது.

    இதனைதொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, வாலிநோக்கம், மூக்கையூர், தேவிபட்டணம், சோளியகுடி, தொண்டி உள்ளிட்ட துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் அந்தந்த துறைமுங்களில் பாதுகாப்புடன் படகுகள் நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கடலாடி 41, வாலி நோக்கம் 53 , கமுதி 53, பல்ல மோர்குளம் 12.20, முதுகுளத்தூர் 25.10, பரமக்குடி 28.30, ஆர்,எஸ்.மங்கலம் 21.40, மண்டபம் 45.60, ராமநாதபுரம் 88, பாம்பன் 63.90, ராமேசுவரம் 68.00, தங்கச்சிமடம் 91.00, தீர்த்ததாண்டதானம் 15.90, திருவாடானை 10.20, தொண்டி 14.60, வட்டாணம் 15.20 பதிவாகி உள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்தது. அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது. இது 2 மணி நேரத்தில் பெய்த மழை அளவாகும். #TNRains
    ராமேசுவரம்:

    காற்றழுத்த தாழ்வு நிலை உள்மாவட்டங்களில் வலு இழந்த நிலையில் மேலடுக்கு சுழற்சியாக தமிழகத்தின் பல மாவட்டங்கள் மீது பரவியது. இதன் காரணமாக நேற்று பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்தது.

    அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது. இது 2 மணி நேரத்தில் பெய்த மழை அளவாகும்.

    வலங்கைமானில் 19 செ.மீ., திருவாரூர், நாகையில் 17 செ.மீ., பாபநாசம், பாம்பன், நீடாமங்கலம், கும்பகோணத்தில் தலா 15 செ.மீ., குடவாசல் 14 செ.மீ., பாண்டவையர் தலை (திருவாரூர்) 12 செ.மீ., மன்னார்குடி, காரைக்காலில் 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    அரியலூர், தரங்கம்பாடி, மதுக்கூர், நன்னிலம் 10 செ.மீ., செட்டிகுளம், திருவிடைமருதூர், பெரம்பலூர், தொழுதூர் 9 செ.மீ., சின்னக்கல்லூர், திருவையாறு 8 செ.மீ., பட்டுக்கோட்டை, வால்பாறை, அதிராம்பட்டினம், ஜெயங்கொண்டம், திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், செந்துரையில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

    மயிலாடுதுறை, திருமானூர், ஸ்ரீமுஷ்ணம், பாபநாசம், லால்குடி, புள்ளம்பாடி, பெருங்களூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழையும், வெம்பாவூர், சமயபுரம், பரங்கிப்பேட்டை, உளுந்தூர்பேட்டை, ஆடுதுறை, சேத்தியாத்தோப்பு, சாத்தூர், தஞ்சாவூர், சீர்காழி, கொள்ளிடம், அரூர், ஒரத்தநாடு ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் தவிர மற்ற இடங்களில் 1 செ.மீ. முதல் 3 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. #TNRains
    ×