என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமேசுவரம் மழை"

    • பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.
    • கடந்த ஒரு வார புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை சூறாவளி காற்றால் பொதுமக்கள், மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் டிட்வா புயல் சென்னை அருகே மையம் கொண்டிருந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. ராமநாதபுரம் நகர், பரமக்குடி, சாயல்குடி, மண்டபம், தங்கச்சிமடம், ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ராமேசுவரத்தில் இன்று காலை 6 மணிக்கு திடீரென கனமழை பெய்தது. 10 மணி வரை நீடித்த மழையால் முக்கிய சாலைகள், அரசு மருத்துவமனை முன்பு தண்ணீர் தேங்கியது. பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் அவதியடைந்தனர்.

    மேலும் நேற்று கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் காரணமாக சூறாவளி காற்று வீசியது. இதனால் பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.

    இதன் காரணமாக 8-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம், பாம்பன் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த ஒரு வார புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.5 கோடி கணக்கில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம் தீவு பகுதியில் பலத்த மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    ராமேசுவரம்:

    இலங்கை கடல் பகுதியை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 3 நாட் களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. அதிகாலையிலும் இடைவிடாமல் நல்ல மழை பெய்தது. பின்னர் மீண்டும் காலை 8 மணியில் இருந்து பகல் 2 மணி வரையிலும் ராமேசுவரம் பகுதியில் இடைவிடாமல் பலத்த மழை பெய்தது.

    தொடர்ந்து பெய்த பலத்த மழையால் ராமேசுவரம் கோவில் பகுதியில் இருந்து பஸ் நிலையம் செல்லும் ராமதீர்த்தம் அருகே தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மழைநீர் அதிக அளவில் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரானது நகராட்சி நிர்வாகம் மூலம் மோட்டார் வைத்து வெளி யேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதேபோல் கோவிலின் தெற்கு ரத வீதி சாலை மற்றும் மார்க்கெட் செல்லும் சாலையிலும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபம் கட்டிடத்தின் முன்பும் மழைநீர் அதிக அளவில் தேங்கி நின்றது. பஸ் நிலையம் எதிரே உள்ள காவல்துறை தற்காலிக சோதனை சாவடியை சுற்றிலும் மழைநீர் அதிக அளவில் சூழ்ந்து நின்றது.

    இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் நேற்று முன்தினம் முதல் நல்ல மழை பெய்ய தொடங்கியது. நேற்று பகல் முழுவதும் இடைவிடாமல் மிதமான மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று காலை 8 மணியுடன் மழைநின்றது 24 மணிநேரத்தில் ராமேசுவரத்தில் 54.2 மில்லி மீட்டரும், தங்கச்சிமடத்தில் 40.6 மில்லிமீட்டரும், பாம்பனில் 31.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ×