என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தர்கா அலங்கார வாசலில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பங்கேற்றார். பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    பின்னர் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தேசிய பசுமை படை மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் ஒளி , தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர் முகமது காஜி, நகர் மன்ற உறுப்பினர் பத்ருநிஷா, சமூக ஆர்வலர் நாகூர் சித்திக், வணிகர் சங்க முன்னாள் செயலாளர் ரமேஷ் ஐயர் தேசிய பசுமை படை ஆசிரியர்கள் செல்வகுமார் சக்திவேல் மற்றும் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

    • தற்கொலை செய்து கொண்ட கவிப்பிரியா கடந்த 2020-ம் ஆண்டு தான் போலீஸ் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    நாகப்பட்டினம்:

    திருச்சி மாவட்டம், உறையூர் அருகே மேலபாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரது மகள் கவிப்பிரியா (வயது 27). இவர் நாகப்பட்டினம் ஆயுதப்படை பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில், மதியம் வழக்கம்போல் சாப்பிடுவதற்காக தான் தங்கி இருந்த போலீஸ் குடியிருப்புக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் பணிக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக போலீசார் கவிப்பிரியாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், அவர் செல்போனையும் எடுக்கவில்லை. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்றனர்.

    அந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அங்கு கவிப்பிரியா துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு பிணமாக தொங்கினார். இதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து, தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து கவிப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் மருத்துவ க்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

    மேலும், இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து, கவிப்பிரியாவின் தற்கொலைக்கு காரணம் என்ன? பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட கவிப்பிரியா கடந்த 2020-ம் ஆண்டு தான் போலீஸ் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கார் எரிக்கப்பட்டது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து காரை தீ வைத்து எரித்தவர்களை தேடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் வடகுடி வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று தனக்கு சொந்தமான காரை பட்டினச்சேரி புயல் பாதுகாப்பு மையம் அருகே நிறுத்தி வைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.

    அப்போது நள்ளிரவு 1 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் காருக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர். கார் பற்றி எரிந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், தண்ணீர் ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் காரின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து நாசமானது.

    இது குறித்து செல்வமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் நாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கார் எரிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரை தீ வைத்து எரித்தவர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்ப டாமல் நீண்டகாலமாக பாதியிலேயே நின்றது.
    • ஏற்று ரூபாய் 104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாகப்பட்டினம்:

    சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்ப டாமல் நீண்டகாலமாக பாதியிலேயே நின்றது.

    இந்த ஆட்சி அமைந்ததும் அதை கட்டி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

    அதை ஏற்று ரூபாய் 104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாலம் கட்டும் பணிக்கு நிர்வாக ஒப்புதல் எப்போது அளிக்கப்படும்? பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.

    இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    நாகப்பட்டினம் அக்கரை ப்பேட்டை வேளாங்கண்ணி சாலையில் கடவு எண் 48-இல் ரயில்வே பாலம் கட்டுவது தொடர்பாகத் தான் எம்.எல்.ஏ கேட்டுள்ளார்.

    ரெயில்வே பாலத்திற்கு அவர் குறிப்பிட்டதைப் போல 104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அநேகமாக இந்த மாதமே அந்த கட்டுமானப் பணிகள் தொடங்கும் நிலையில் இருக்கிறது என்றார்,

    • திருக்குவளை அடுத்துள்ள காருகுடி கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
    • குழந்தை வரம் வேண்டி அம்மனுக்கு சிறப்பு அன்னப்படையிலிட்டு தம்பதிகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள காருகுடி கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

    திருமண தடை போக்குவது, குழந்தை பாக்கியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்ட இவ்வாலயத்தில் அமாவா சையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    குழந்தை வரம் வேண்டி அம்மனுக்கு சிறப்பு அன்னப்படையிலிட்டு தம்பதிகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    முன்னதாக மகா மாரியம்மன், ஸ்ரீ நாக விநாயகர், ஸ்ரீ நாகம்மன், ஸ்ரீ மதுரை வீரன், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால்,பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பப்படும் .

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாநில தலைவர் நாகை செல்லம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சுத்தானந்த கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய நகர மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் சட்டமன்றத்தில் பொது சுகாதாரத்துறை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பப்படும் என்ற அறிவிப்பை மக்கள் நல்வாழ்த்துவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்கள்.

    இந்த அறிவிப்பை தமிழ்நாடு அணைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் வரவேற்கிறது.

    மேலும் தமிழக முதல்வர், மக்கள் நல்வாழ்த்துவுத்துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துவுத்துறை முதன்மை செயலர் மற்றும் பொது சுகாதார துறை இயக்குநர் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மேலும் இப்பணியிடங்கள் நிரப்பும்போது கொரோனா அதிகம் பரவி வந்த கால கட்டங்களில் தன் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றிய தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றி வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு இந்த பணியை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவே ற்றபட்டன.

    • காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
    • குண்டத்தில் இறங்கி தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் உள்ள மழை முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக சக்தி கரகம் முன்னால் செல்ல கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இன்னும் சில பக்தர்கள் குழந்தைகளுடன் குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். தொடர்ந்து, சிறுவர்- சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • ஒரு ஆண்டுக்கும் மேலாக தற்காலிகமாக அங்காடி செயல்பட்டு வருகிறது.
    • புதிய கட்டிடத்தை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஊராட்சியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சியில் உள்ள கண்ணுடையான் தோப்பு, கல்லுளி திருவாசல், சன்னதி தெரு,வடக்கு தெரு,தெற்கு தெரு,அக்ரகாரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நலன் கருதி திருமருகல் அம்மாகுள தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2018-19 நிதியாண்டில் ரூ.11 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்காடி கட்டிடம் உள்ளது.

    இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 1 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு வழங்கப்படாமல் திறக்கப்படாமல் உள்ளது.

    இதற்கு மாற்றாக அருகில் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 1 ஆண்டுக்கு மேலாக தற்காலிகமாக அங்காடி செயல்பட்டு வருகிறது.

    இந்த தற்காலிக கட்டிடம் இருப்பதால் புதிய கட்டிடத்தை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

    எனவே சம்பந்த ப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காண காத்திருக்கும் அங்காடி கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி வீதிஉலா.
    • கப்பரை எடுக்கும் திருவிழா நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ராஜாளிகாடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா விக்னே ஸ்வர பூஜையுடன் தொடங்க ப்பட்டது.

    தொடர்ந்து, நேற்று வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால் காவடிகள் எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பின், அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பரிவார தெய்வங்களுடன் மேள தாளங்கள் முழங்க எழுந்தருளி வீதிஉலா நடை பெற்றது.

    வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.

    பின், கப்பரை எடுக்கும் திருவிழா நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கோவில் வளர்ச்சி குழு தலைவர் மாதவன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • கொத்தான்குளம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 25) என்பது தெரியவந்தது.
    • விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் இயங்கி வரும் ஒரு வங்கியில் கடந்த 10ம் தேதி ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது.

    இதில் ஏடிஎம்மில் இருந்த 7 லட்ச ரூபாய் தப்பியது. இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

    மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பெயரில் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

    மேலும் குற்றவாளி பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை வைத்து குற்றவாளியை அடையாளம் கண்டுபிடித்தனர்.

    ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் நாகப்பட்டினம் கொத்தான்குளம் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் விஸ்வநாதன் என்பது தெரியவந்தது .

    இதனையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் ஏடிஎம்மை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதை விஸ்வநாதன் கொண்டார்.

    இதனையடுத்து விஸ்வநா தனை நாகப்பட்டினம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • கீழ்வேளூர் அருகே கோகூர் ஊராட்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    கீழ்வேளூர் அருகே கோகூர் ஊராட்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோகூர் மாதா கோவில் அருகே வெட்டாறு பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் நாகூர் வண்ணான் குளம் வடகரை பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 38) என்பதும், அவர் சாராயம் விற்றதும் தெரியவந்தது.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த கீழ்வேளூர் போலீசார் வெற்றிவேலை கைது செய்து, அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • பிரதோஷத்தை முன்னிட்டு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    பின்னர், வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிர காரத்தில் புறப்பாடு நடைபெற்றது.

    இதேப்போல், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாக்குடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையார் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில், ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் கோவில், கத்தரிப்புலம் கோவில் மற்றும் குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×