search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது
    X

    ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது

    • கொத்தான்குளம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 25) என்பது தெரியவந்தது.
    • விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் இயங்கி வரும் ஒரு வங்கியில் கடந்த 10ம் தேதி ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது.

    இதில் ஏடிஎம்மில் இருந்த 7 லட்ச ரூபாய் தப்பியது. இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

    மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பெயரில் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

    மேலும் குற்றவாளி பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை வைத்து குற்றவாளியை அடையாளம் கண்டுபிடித்தனர்.

    ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் நாகப்பட்டினம் கொத்தான்குளம் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் விஸ்வநாதன் என்பது தெரியவந்தது .

    இதனையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் ஏடிஎம்மை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதை விஸ்வநாதன் கொண்டார்.

    இதனையடுத்து விஸ்வநா தனை நாகப்பட்டினம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×