என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருமருகலில், புதிய ரேசன் கடை கட்டிடம் திறக்கப்படுமா?
- ஒரு ஆண்டுக்கும் மேலாக தற்காலிகமாக அங்காடி செயல்பட்டு வருகிறது.
- புதிய கட்டிடத்தை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமரு கல் ஊராட்சியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் உள்ள கண்ணுடையான் தோப்பு, கல்லுளி திருவாசல், சன்னதி தெரு,வடக்கு தெரு,தெற்கு தெரு,அக்ரகாரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நலன் கருதி திருமருகல் அம்மாகுள தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2018-19 நிதியாண்டில் ரூ.11 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்காடி கட்டிடம் உள்ளது.
இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 1 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு வழங்கப்படாமல் திறக்கப்படாமல் உள்ளது.
இதற்கு மாற்றாக அருகில் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 1 ஆண்டுக்கு மேலாக தற்காலிகமாக அங்காடி செயல்பட்டு வருகிறது.
இந்த தற்காலிக கட்டிடம் இருப்பதால் புதிய கட்டிடத்தை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
எனவே சம்பந்த ப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காண காத்திருக்கும் அங்காடி கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்