என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மழை முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
    X

    பெண் ஒருவர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

    மழை முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
    • குண்டத்தில் இறங்கி தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் உள்ள மழை முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக சக்தி கரகம் முன்னால் செல்ல கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இன்னும் சில பக்தர்கள் குழந்தைகளுடன் குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். தொடர்ந்து, சிறுவர்- சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    Next Story
    ×