என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • வேதாரணியம் நகராட்சியில் 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன
    • வணிக உரிமம் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியில் வணிகம் உரிமம் குறித்து கடைகளில் அதிகாரிகள் சோதனையிட்டனர் வேதாரணியம் நகராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இந்த கடைகளில் நகராட்சியின் வணிக உரிமம் பெற்றுள்ளதா என நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ் சுகாதார அலுவலர் ராஜாராமன் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கடைகடையாக சோதனை நடத்தினர் உரிமம் பெறாத வணிகர்கள் புகைப்படம் குடும்ப அட்டை ஜிஎஸ்டி நம்பர் பான் கார்டு ஆதார் அட்டை சொத்து வரி வசதி விசிட்டிங் கார்டு உள்ளிட்ட 7 ஆவணங்களுடன் http://tnUrban epay th.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரூ.7 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.
    • மீனவ தினத்தை முன்னிட்டு மீனவ கிராமங்களுக்கான கபடி போட்டி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் தமிழக மீன்வளத்துறை சார்பில் உலக மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

    நாகை துறைமுகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், மற்றும் 27 கிராம மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் கல்லார், நாகூர், சாமந்தான் பேட்டை, செருதூர், ஆற்காட்டுதுறை வேதாரண்யம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பைபர் படகு மீனவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிக ஒளி வீச்சும் டார்ச் லைட், மழைக்கான கோட்,மற்றும் துறைமுகத்தில் பணியாற்றும் மீனவ பெண் பயனாளிகளுக்கு புடவை உள்ளிட்ட அலுமினிய கூடைகளை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் வழங்கினர்.

    பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், கடலுக்கு செல்லும் மீனவர்கள் அனைவரும் உயிரை பணயம் வைத்து தான் மீன்பிடி தொழில் செய்கிறார்கள். காற்று, மழை, சுனாமி, போன்ற பேரழிவுகள் வரும் என்று தெரிந்தும் அவர்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் கடலுக்கு செல்லும் மீனவர்கள் அனைவருக்கும் தனது மீனவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்.

    மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவ கிராமங்களுக்கான கபடி போட்டி நடைப்பெற்றது.

    • வடகிழக்கு பருவமழையால் விளக்கு தயாரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
    • வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தாணிகோட்டகம் செட்டி புலம், செம்போடை ,பிராந்தியங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திகை தீபத் திருவிழா ஒட்டி அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கார்த்திகை தீபத் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான மண் பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் ஆனால் வடகிழக்கு பருவ மழையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன இதுவரை தயாரித்து உள்ள அகல்விளக்குகள்வீட்டின் உள்ளே காயவைத்து வருகின்றனர்.

    வரும் நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கும் நிலையில் விளக்குகள் தயாரிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது மண்பாண்ட தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது

    எனவே தமிழ்நாடு அரசு மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    • கன்னியாகுமரியில் மாநாட்டு பிரசார மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை தொடங்கி வைத்தார்.
    • வழிநெடுகிலும் மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி, அவர் கன்னியாகுமரியில் மாநாட்டு பிரசார மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.

    வேதாரண்யம் பகுதிக்கு வந்த தி.மு.க. இளைஞரணி மோட்டார் சைக்கிள் பிரசார குழுவினருக்கு நாகை மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருான கவுதமன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் வேதாரண்யம் நகர்மன்ற தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான புகழேந்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், தலைஞாயிறு பேரூர் செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் துரை ராசு, மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் அசோக்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தாமோதரன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ரவிச்சந்திரன், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பேரணி குழுவினருக்கு வழிநெடுகிலும் மேளதா ளங்கள் முழங்க, பட்டாசு வெடிக்கப்பட்டும், இனிப்பு வழங்கியும், மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்க ப்பட்டது.

    • 15-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ.50 லட்சம் வரை பெற்றுள்ளனர்.
    • பணத்தை திருப்பி தராமல் மக்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் பால்பண்ணைச்சேரி ஆட்டோ சிட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 33).

    திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் நாராயணசாமி மற்றும் அவரது மருமகன் தனபால் ஆகியோர் சேர்ந்து ஓஎன்ஜிசியில் வேலை வாங்கித் தருவதாக கூறி வலிவலம், வேதாரண்யம் மருதூர், குருக்கத்தி, கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ. 50 லட்சம் வரை பெற்றுள்ளனர்.

    ஆனால் யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை.

    மேலும் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட வர்கள் நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்சிங் உத்தர விட்டார்.

    இதைத் தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிச்சாமி அறிவுருத்தலின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் குற்றவா ளிகள் ராஜலட்சுமி, நாராயணசாமி தனபால் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    நாகை அருகே ஓஎன்ஜிசியில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • யானைக்கு பயந்து வள்ளி முருகனை சந்திப்பதும் அடியார்களால் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.
    • வேதமந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு மாங்கல்ய தாரண நிகழ்ச்சி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளி- முருகன் திருமணம் சிறப்பாக நடந்தது.

    இதனை முன்னிட்டு குறவள்ளி முருகனை சந்திப்பதும், அப்போது விநாயகர் பெருமான் யானை ரூபத்தில் வந்து வள்ளியை பயமுறுத்துவதும், பின் முருகனை வள்ளி அடைக்கலமாகி திருமண காட்சி நடைபெறுவதும் நடைபெற்றது.

    யானை அழைத்து வரப்பட்டு யானை பிளிருவதும் அதனை அடுத்து யானைக்கு பயந்து வள்ளி முருகனை சந்திப்பதும் அடியார்களால் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு மாங்கல்யதாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனை அடுத்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்று, தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 24 மூட்டைகளில் பதுக்கிய போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா, மது கடத்தல், புகையிலை விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகூரை அடுத்த தெத்தியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை முட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக நாகூர் இன்ஸ்பெ க்டர் சதீஷ்குமார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து தெத்தி ஜம்மியத் நகரில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது முகம்மது சித்திக் என்பவரது வீட்டில் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைத்த பட்டிருந்த குட்கா, பான்மசாலா, கூலிப் உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதனையடுத்து 24 மூட்டைகளில் இருந்த 300 கிலோ மதிப்புள்ள புகையிலை பாக்கெட் முட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் போதை பொருளை கடத்திய முகம்மது சித்தீக் என்பவரை கைது செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய ஒருவரை நாகூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை நாகூர் காவல் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் பார்வையிட்டு போலீசாரை பாராட்டினார்.

    இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்க் சதீஷ்குமார், முதல் நிலை காவலர்கள் மதியழகன், காமேஷ்,உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • 108 சங்குகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த திருக்கு வளை தியாகராஜர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை யொட்டி மூலவர் பிரம்மபுரீ ஸ்வரருக்கு சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய சங்குகளால் அபிஷேகம் நடந்தது.

    முன்னதாக 108 சங்குகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    தொடர்ந்து, சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று மகா தீபா ரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சுமார் 1000 ஏக்கர் சம்பா பயிர் விளைநிலங்களுக்குள் மழைநீர் புகுந்தது.
    • ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்திருந்த நிலையில் குறுவை பாதிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.

    இதனால் நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பில்லாளி, அன்னவாசநல்லூர், திருமாளம் பொய்கை, மலட்டேரி, திருப்பயத்தங்குடி உள்ளிட்ட 9 வருவாய் கிராமங்களுக்கான சுமார் 1000 ஏக்கர் சம்பா பயிர் விளை நிலங்களுக்கு மழை நீர் புகுந்தது.

    மேலும் பில்லாளியில் உள்ள வடிகால் வாய்க்கால் கதவணை சரியில்லாததால் மழை நீர் வடியாமல் உள்ளது.

    இதனால் சுமார் 1000 ஏக்கரில் நடவு செய்து 25 நாட்களே ஆன சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி வேர்கள் அழுகும் சூழந்லை ஏற்பட்டுள்ளது.

    சுமார் ஏக்கருக்கு ரூ 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்திருந்த நிலையில் குறுவை பாதிக்கப்பட்டது.

    இதில் இருந்து மீண்டு தற்போது சம்பா சாகுபடி மேற்கொண்ட விவசாயிகளுக்கு மீண்டும் மழையால் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    எனவே உடனடியாக தடுப்பணையை சரி செய்து கொடுத்தும் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக விழுந்தது.
    • நவீன கருவிகளை கொண்டு பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அடுத்த நாகூர் காரைக்கால் சாலையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் வாகனத்தின் ஒளியை சத்தத்தை கேட்டு மிரண்ட பசுமாடு ஒன்று நாகூர் கொத்தவச்சாவடி அருகே உள்ள வணிக வளாகம் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் எதிர்பா ராத விதமாக விழுந்தது.

    தொட்டியில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அங்கும் இங்கும் சுற்றியபடி கத்தியது.

    உடனடியாக இது குறித்து அக்கம் பக்கத்தினர் நாகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு உத்தரவின் பேரில் தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்திருந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் நவீன கருவிகளை கொண்டு பசுமாட்டினை உயிருடன் மீட்டனர்.

    • ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை ரயில் நிலையத்தி லிருந்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. அப்போது வழி நெடுகிலும் கூடியிருந்த பெண்கள் ஆர் எஸ் எஸ் கொடிக்கு மலர் தூவி அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

    அதன் பின்னர் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலமானது நாகை அவுரித்திடலில் நிறைவடைந்தது.

    அதன் பின்னர் அவுரித்தி டலில் கொடியேற்றப்பட்டு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சியை செய்து காண்பித்தனர்.

    நாகையில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை மேல கோட்டவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சபரிராஜன் (வயது 55). தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள மேல கோட்டைவாசல் பகுதி பெட்ரோல் நிலையம் அருகே உள்ள சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது அதே சாலையில் வந்த மாடு ஒன்று அவரை திடீரென முட்டியது. இதில் அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது திருவாரூரில் இருந்து நாகை நோக்கி வந்த அரசு பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் சபரிராஜன் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபரிராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு விலங்குகளால் விபத்து மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசும், போலீசாரும் கால்நடைகளின் உரிமையாளர் மற்றும் வளர்ப்பு விலங்குகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பை தடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர். தற்போது இந்த வீடியோ வைரல் வீடியோவாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×