என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகையில் பரவலாக மழை
    X

    நாகையில் பரவலாக மழை

    • வெயிலோடு சேர்ந்து மிதமான மழை பெய்தது.
    • இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கடந்த வாரம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் சில நாட்களாக வெயில் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் நாகையில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், வெயிலோடு சேர்ந்து மிதமான மழையும் பெய்தது.

    நாகை, நாகூர், சிக்கல், புத்தூர், வடகுடி, தெத்தி, மேலநாகூர், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வெயிலோடு சேர்ந்து பெய்த மிதமான மழை காரணமாக ரம்மியமான சூழல் நிலவியது.

    கனமழை ஓய்ந்தாலும் நாகையில் வெயிலோடு சேர்ந்து மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×