search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agal Lamp"

    • வடகிழக்கு பருவமழையால் விளக்கு தயாரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
    • வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தாணிகோட்டகம் செட்டி புலம், செம்போடை ,பிராந்தியங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திகை தீபத் திருவிழா ஒட்டி அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கார்த்திகை தீபத் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான மண் பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் ஆனால் வடகிழக்கு பருவ மழையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன இதுவரை தயாரித்து உள்ள அகல்விளக்குகள்வீட்டின் உள்ளே காயவைத்து வருகின்றனர்.

    வரும் நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கும் நிலையில் விளக்குகள் தயாரிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது மண்பாண்ட தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது

    எனவே தமிழ்நாடு அரசு மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    • ஆஞ்சநேயர்கோவிலை இடித்து தள்ளியதை எதிர்த்து அகல் விளக்கு ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    • உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் கடை வீதியில் அமைந்துள்ள சகஜானந்தா சிலை அருகில் சிவன் குலத்தார் அறக்கட்டளை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள காகிதப்பட்டறைஊராட்சியில்பொதுப்பணித்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர்அங்கிருந்த ஆஞ்சநேயர்கோவிலை இடித்து தள்ளியதைஎதிர்த்து சிவன் குலத்தார் அறக்கட்ட ளை நிர்வாகிகள் கையில் அகல் விளக்கு ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில்மாநில பொதுச்செயலாளர் ராஜேஷ், நிர்வாகிகள் இள வரசன், சரவணன், மோகன், ஜெயபால் மற்றும்10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

    • லாரி டிரைவர் கட்டுப்பட்டைஇழந்து தாறுமாறாக ஓடினார்.
    • போலீஸ் தலைமை காவலர் சுரேஷ் விரைந்து சென்று போக்கு வரத்தை சரி செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் இருந்து 12 டன்அகல் விளக்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்றுபெங்களூர்சென்றது.பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, லாரியின் முன்பக்க டயர் திடீர்என வெடித்து. இதனால் லாரி டிரைவர் கட்டுப்பட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. லாரியைஓட்டி வந்தடி ரை வர் பரசுராமன் சாதுர்ய மாக பாலத்தின் கட்டையில் மோதி லாரி நின்றது இதனால் லாரியில் வந்த டிரைவர் உட்பட அனைவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தபினார்.இதனால் இந்த சாலையில் சிறிது நேரம் திடீர் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் என்பதும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் போக்குவரத்து போலீஸ் தலைமை காவலர் சுரேஷ் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

    ×