என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • சுமார் 5 ஆயிரம் பேர் சுற்று வட்டார பகுதி மக்கள் ஆயக்காரன்புலம் கடைத்தெருவிற்கு வந்து செல்கின்றனர்.
    • இந்த 4 ஊராட்சிகளையும் இணைத்து பேரூராட்சியாக ஆயக்காரன்புலத்தை தரம் உயர்த்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஒன்றியத்தில் ஆயக்காரன்புலம். நிர்வாக வசதிக்காக ஆயக்காரன புலம் முதல் சேத்தி, இரண்டாம் சேத்தி, மூன்றாம்சேத்தி, நான்காம் சேத்தி என 4 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இங்கு 20000 மக்கள்தொகை உள்ளது. இங்கு ஆண்கள், பெண்கள் என இரண்டுமேல் நிலைப்பள்ளிகள், 2 உயர்நிலைப்பள்ளிகள், 4 நடுநிலைப்பள்ளிகள், 10 தொடக்கப் பள்ளிகள். ஒரு தனியார்மேல்நிலைப்பள்ளி, களில் 15,000 மாணவர்கள் படிக்கிறார்கள்.

    ஒரு கிளை நூலகம், ஒரு கால்நடை மருத்துவமனை, ஒரு கிளை அஞ்சலகம், ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்.

    ஒரு மத்திய கூட்டுறவு வங்கி, ஒரு அரசுடைமை வங்கி, ஒரு வேளாண், தொடக்கநிலை சங்கம்.

    புகழ்பெற்ற அய்யனார் கோயில் உள்ளது.

    நாள்தோறும் சுமார் 5 ஆயிரம் பேர் சுற்று வட்டார பகுதி மக்கள் ஆயக்காரன்புலம் கடைத்தெருவிற்கு வந்து செல்கின்றனர்.

    அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நிறைந்த பகுதியாகும் வேதாரண்யம் தாலுகாவின் வலுவான பொருளாதரத்தையும் பெற்ற இந்த 4 ஊராட்சிகளையும் இணைத்து பேரூராட்சியாக ஆயக்காரன்புலத்தை தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
    • வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிகளவிலான வாகனங்களில் மக்கள் வருவார்கள்.

     நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்க ண்ணியில் உலக புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்இதனால் வேளாங்கண்ணியில் எந்த நேரமும் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வருவாய்த்துறை சார்பில் வட்டாட்சியர் அமுதவிஜய ரங்கன் தலைமையில், வேளாங்கண்ணி பேரூராட்சி செயலர் பொன்னுசாமி முன்னிலையில் காவல்துறை யினர், பேரூராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் உதவியுடன் வேளாங்கண்ணி ஆர்ச் மற்றும் கடற்கரைச் சாலை, கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கொட்டகை உள்ளிட்டவை களை எந்திரம் உதவியுடன் அகற்றினர்.

    வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிக அளவிலான வாகனங்களில் மக்கள் வருவார்கள். இதனால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • நூற்றுக்கணக்கான லாரிகளில் நாள்தோறும் நெல் ஏற்றி இறக்கும் பணி நடைபெறுகிறது.
    • லாரிகளிலிருந்து 6 பேட்டரிகள், ஒரு தார்ப்பாய் உள்ளிட்ட ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்தாலுகா கோவில்பத்தில் ஆசியாவில்இரண்டாவது மிகப்பெரியநெல் சேமிப்பு கிடங்கு உள்ளது இங்கிருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் நாள்தோறும் நெல் ஏற்றி இறக்கும் பணி நடைபெறுகிறது.

    இந்நிலையில் நெல் ஏற்ற வந்தலாரிகள் நெல் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    சம்பவத்தன்று தாதன்தி ருவாசல் பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் (22), பிரதீப்ராஜ்(18) மற்றும் 2 சிறுவர்கள் என 4 பேரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகளிலிருந்து 6 பேட்டரிகள், ஒரு தார்ப்பாய் உள்ளிட்ட ரூ.58 ஆயிரம்மதிப்புள்ள பொருட்களைதிருடிச் சென்றுள்ளனர்.

    புகாரின் போரில் வேட்டைக்காரனிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி வழக்கு பதிவு செய்து தாதன் திருவாசல்ப பகுதியைச் சேர்ந்த 4 பேரையும் கைது செய்தனர்.

    • தனியார் பள்ளிக்கு நிகராக மாணவர்களுக்கு பெல்ட், சூ, டைரி, ஐடி கார்டு உள்ளிட்ட அனைத்தும் செயல்பட்டு வருகின்றன.
    • ஆங்கில எழுத்துக்களை தனித்தன்மையாக எழுதும் பயிற்சியும், கராத்தே பயிற்சியும், பரதநாட்டியம் உள்ளிட்ட பன்முக திறன் வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

    இப்பள்ளியில் 185 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இப்பள்ளி 1895ம் ஆண்டு துவங்கப்பட்டு 121 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அனைத்து வசதிகளுடன் இயங்கி வருகிறது.

    இப்பள்ளியில் 3 கட்டிடங்களில் வகுப்பறைகள் ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடனும் இயங்கி வருகிறது.

    மேலும் தனியார் பள்ளிக்கு நிகராக மாணவர்களுக்கு பெல்ட், சூ, டைரி, ஐடி கார்டு உள்ளிட்ட அனைத்தும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டு மிடுக்கான தோற்றத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

    பள்ளியில் மாணவர்களுக்கு தொலைக்காட்சி வசதியுடன் மொழிப்பாடம், ஆங்கில பேசும் திறன் ஆகியவை கற்பிக்கப்படுகிறது.

    மேலும் இப்பள்ளியில் ஆங்கில எழுத்துக்களை தனித்தன்மையாக எழுதும் பயிற்சியும், கராத்தே பயிற்சியும், பரதநாட்டியம் உள்ளிட்ட பன்முக திறன் வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

    இப்பள்ளியில் கழிவறை, குடிநீர் வசதி, கலையரங்கம் என அனைத்து வசதிகளும் மிகச் சிறப்பாக உள்ளன 50 மாணவர்களுடன் இயங்கி வந்த இப்பள்ளியை தற்போது 89 மாணவர்களும், 96 மாணவிகளுடன் 18பேர் படிக்கின்றனர்.தனி நூலகம் உள்ளது.

    மாணவர்கள் வெறும் புத்தகப் புழுவாக இருக்காமல் பொது அறிவையும் தெரிந்து கொள்ளும் அளவில் இந்த நூலகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளி தூய்மைக்கான பள்ளி விருது, மாவட்டத்தில் சிறந்த பள்ளி விருது, சிறந்த பள்ளி மேலாண்மை குழு மற்றும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது

    இப்பள்ளியில் கணினி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக தட்சிணாமூர்த்தி என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கி உள்ளது.இப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பெல்ட், ஷூ, டைரி, அடையாள அட்டை வழங்கும் விழா பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நாகூரான், துணைத்தலைவர் வீரராசு, ஆசிரியைகள் அனிதா, சந்தானமேரி, சத்துணவு பணியாளர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டனர்.

    தனியார் பள்ளியை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளி செயல்பாட்டை பாராட்டி சமூக வலைதளங்களில் இப்பள்ளியின் செயல்பாடுகள் வைரலாகி பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பூசலாங்குடியில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    மதியம் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானம், அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் வீதியுலா நடைபெற்றது.

    தொடர்ந்து அக்னி கப்பரை வீதிஉலா நடைபெற்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த திருவிழா அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • விழாவில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று.

    தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனர்.

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி(தி்ங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இன்றி கொடியேற்றம் மிக எளிமையாக நடந்தது. இந்த ஆண்டு வழக்கம்போல் பக்தர்கள் பங்கேற்புடன் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து விழா முன்னேற்பாடுகளை நாகை மாவட்ட நிர்வாகம், ஆலய நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத்துறை நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    விழாவையொட்டி பேராலய வளாகம் மற்றும் சுற்றுச்சுவர் பகுதி முழுவதும் வர்ணம் பூசப்பட்டு பேராலயம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. மேலும் பேராலயத்தில் வண்ண விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    • பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பி அபராதம் செலுத்திய பிறகு விடுவிக்கப்படும்.
    • இருசக்கர வாகனத்தில் செல்லும் மாணவர்கள் தலைக்கவசம் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்து.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நெடுஞ்சாலை மருத்துவம் மற்றும் போக்கு வரத்து துறை இதர அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் 11 பேர் ஜூலை மாதம் உயிரிழந்துள்ளனர்.

    இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் தலைக்கவசம் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது இதை தடுக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர்ஆகியோர் உத்தரவின் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் காவல்து றையினர் இணைந்து வாகன சோதனை செய்தனர்.

    சோதனையில் ஓட்டுநர் உரிமம் இல்லாத 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பி அபராதம் செலுத்திய பிறகு விடுவிக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, நாகை நகர இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், வின்சென்ட் ராஜ், லோகநாதன், செல்வராஜ் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • 52 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைப்பெற்றது.
    • கர்ப்பிணி தாய்மார்கள் யோகா பயிற்சியை கற்றுக்கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மற்றும் கீரைகள், பழங்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்தா தலைமை வகித்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு கீரைகள் மற்றும் பழங்களை வழங்கினார்.

    முன்னதாக 52 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைப்பெற்றது.

    இதில் கர்ப்பிணி தாய்மார்கள் யோகா பயிற்சியை கற்றுக்கொண்டனர்.

    இதில் மருத்துவர்கள் இந்திரா, பார்கவி, மருந்தாளுனர் சக்திவேல் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
    • சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவா ஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் முருகவேல் (வயது 55) விவசாயி.

    இவர் கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

    அக்கம் பக்கத்தினர் முருகவேலை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி முருகவேல் உயிரிழந்தார்.

    இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அரசு மேல்–நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தில் ஆய்வு செய்து உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் எம்.எல்.ஏ கேட்டறிந்தார்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

    உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடி கிராமம் மற்றும் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரைக்கான் சாவடி பகுதியில் தலா ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, கட்டுமாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம், கணபதிபுரம், அம்பல், திருக்கண்ணபுரம் ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் பயணியர் நிழலகங்களையும் ஆய்வு செய்தார்.

    மேலும், திட்டச்சேரி, திருமருகல், மருங்கூர், கணபதிபுரம் அரசு பள்ளிகளுக்கு வழங்க ப்பட்ட பென்ஞ் டெஸ்க்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குறிப்பாக திருமருகல் அரசு மேல்–நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தில் ஆய்வு செய்து, உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் எம்.எல்.ஏ கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது, திருமருகல் தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் செல்வ செங்குட்டுவன், சரவணன், வி.சி.க ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஒன்றிய ஆணையர் பாலமுருகன், திட்டச்சேரி பேரூராட்சி மன்றத் தலைவர் ஆயிஸா சித்தீக்கா, பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சுல்தான், ஒன்றிய பொறியாளர்கள் கவிதா ராணி, செந்தில் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனிருந்தனர்.

    • இந்நூலகத்தில் 40 முதல் 100 பேர் வரை தினசரி மாத இதழ் மற்றும் நூல்களை படித்து வருகின்றனர்.
    • சிறிய கட்டடத்தில் நூலகம் இயங்குவதால் 45 ஆயிரம் புத்தகங்களை வைக்கவே இடம் போதுமானதாக உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 1958-ம் ஆண்டு நூலகம் தொடங்கப்பட்டது.

    நூலகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது.

    கடந்த 2017-ம் ஆண்டு நூலகத்திற்கு சொந்தமான கட்டிடம் பழுதடைந்து இடிக்கப்பட்டது.

    அன்று முதல் வேதாரண்யம் பயணியர் மாளிகை செல்லும் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சி கூடத்தில் நூலகம் இயங்கி வருகிறது.

    தற்போது இந்த கட்டிடமும் பழுதடைந்து மழை காலங்களில் தண்ணீர் உள்ளே வருகிறது.

    தற்போது நூலகத்தில் 45 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.

    இதில் 4,100 நபர்கள் உறுப்பினராகவும், 32 புரவலர்களும் உள்ளனர்.

    நாள்தோறும், இந்நூலகத்தில் 40 முதல் 100 பேர் வரை தினசரி மாத இதழ் மற்றும் நூல்களை படித்து வருகின்றனர்.

    மேலும், தமிழக அரசு நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான 1000-க்கும் மேற்பட்ட புத்தகங்களும் இந்த நூலகத்தில் உள்ளன.

    சிறிய கட்டடத்தில் நூலகம் இயங்குவதால் 45 ஆயிரம் புத்தகங்களை வைக்கவே இடம் போதுமானதாக உள்ளது.

    நிறைய வாசகர்கள் ஒரே நேரத்தில் படிக்க வந்தால் படிக்க முடியாமல் இடநெருக்கடியும் ஏற்படுகிறது.

    இதனால் வாசகர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    வேதாரண்யம் நூலகத்திற்கு வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் முன்பு நூலகம் இயங்கிவந்த சுமார் 3000 ஆயிரம் சதுர அடி இடம் காலியாக உள்ளது.

    எனவே, வேறு ஒரு துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கும் நூலகத்திற்கு புதிதாக காலியாக உள்ள பழைய இடத்தில் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என வாசகர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீரஹத்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சன்னதி முன்புள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றபட்டது.
    • பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் விநாயகர் வீதியுலா நடைபெறும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

    முன்னதாக வீரஹத்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, விநாயகர் சன்னதி முன்புள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றபட்டது.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் விநாயகர் வீதியுலா நடைபெறும்.

    விநாயகர் சதுர்த்தியன்று சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் வீதியுலா நடைபெற உள்ளது.

    ×