search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advancement"

    • மோட்டார் பம்ப்செட் மூலம் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அவசரகால முன்னறிவிப்பான் கருவிகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் எச்சரிக்கை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து பல்வேறு பகுதிகளில் கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் பொது மக்களை தங்கவைப்பதற்கான தற்காலிக தங்குமிடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், மாநகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம், வள்ளிக்கந்தன் நகர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதை மோட்டார் பம்ப்செட் மூலம் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சொத்திக்குப்பம் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையம் மற்றும் ராசாப்பேட்டை புயல் பாதுகாப்பு மையம் ஆகிய மையங்களில் குடிநீர், ஜெனரேட்டர் வசதி, கழிவறை உள்ளிட்ட பொதுமக்களை தங்கவைப்பதற்கான அடிப்படை வசதிகள் குறித்தும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது:-

    கடலூர் மாவட்டத்தில் மிக அதிக பாதிக்கக் கூடிய பகுதிகள், அதிகமாக பாதிக்கக்கூடிய பகுதிகள், மிதமாக பாதிக்கக்கூடிய பகுதிகள், குறைவாக பாதிக்கக்கூடிய பகுதிகள் எனக் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் பேரிடரை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 191 தற்காலிக தங்கும் இடங்கள் தயார்நிலையில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை செய்வதற்கு அவசரகால முன்னறிவிப்பான் கருவிகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார். இவ்ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

    • கோவை மாவட்டத்தில் 13 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன.
    • தீயணைப்பு, பேரிடர் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன

    கோவை,

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கோவை மாவட்டத்தில் 13 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அங்கு பேரிடர் மீட்பு குழுவினர் சகல உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

    தீயணைப்பு அலுவலகங்களில் ரப்பர் படகு, அறுவை எந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தயார்நிலையில் உள்ளதா? என்று பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதன்ஒருபகுதியாக கோவை தெற்கு தீயணைப்பு அலுவலகத்தில் பேரிடர் கால மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தும் சாதனங்க ளை, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வ தற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

    அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திற்கு அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு படையினரும் வந்துள்ளனர். அவர்கள் பாதிப்பு அதிகம் ஏற்படக் கூடிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

    • வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
    • வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிகளவிலான வாகனங்களில் மக்கள் வருவார்கள்.

     நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்க ண்ணியில் உலக புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்இதனால் வேளாங்கண்ணியில் எந்த நேரமும் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வருவாய்த்துறை சார்பில் வட்டாட்சியர் அமுதவிஜய ரங்கன் தலைமையில், வேளாங்கண்ணி பேரூராட்சி செயலர் பொன்னுசாமி முன்னிலையில் காவல்துறை யினர், பேரூராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் உதவியுடன் வேளாங்கண்ணி ஆர்ச் மற்றும் கடற்கரைச் சாலை, கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கொட்டகை உள்ளிட்டவை களை எந்திரம் உதவியுடன் அகற்றினர்.

    வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிக அளவிலான வாகனங்களில் மக்கள் வருவார்கள். இதனால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பெண்களுக்கும் ஆண்களுக்கு இணையான உரிமைகளும், பாலின சமத்துவமும் கிடைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது.
    பெண்களுக்கும் ஆண்களுக்கு இணையான உரிமைகளும், பாலின சமத்துவமும் கிடைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது. ஆனாலும் உலக அளவில் இருபாலரிடையே சம உரிமை நிலைநாட்டப்படுவதில் சீரற்ற தன்மையே நிலவுகிறது. இந்த நிலையில் உலக பொருளாதார கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் ஆசியாவில் பாலின சமத்துவத்தை பின்பற்றும் நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. கல்வி, சுகாதாரம், பொருளாதார பங்களிப்பு, அரசியல் அதிகாரமளித்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசைப்பட்டியல் அமைந்திருக் கிறது.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண் - பெண் இடையேயான பாலின இடைவெளி 79 சத வீதம் வரை களையப்பட்டு இருப்பதாகவும், பெண்கள் கல்வியில் சாதனை படைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளையில் தெற்கு ஆசிய நாடுகளின் பட்டியலில் வங்காள தேசம் முன்னிலையில் இருக்கிறது. அங்கு ஆண்-பெண் இடையேயான பாலின இடைவெளி 72 சதவீதம் குறைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நாடு பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. தெற்கு ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் இருந்தாலும் உலக அளவில் 108-வது இடத்தில்தான் இருக்கிறது. மற்ற ஆசிய நாடுகளான இலங்கை (100-வது இடம்), நேபாளம் (105), மாலத்தீவு (113), பூட்டான் (122) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. 149 நாடுகளை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் பாகிஸ்தான் மிகவும் பின் தங்கிய நிலையில் (148) இருக்கிறது.

    உலக அளவில் பாலின சமநிலையை கடைப்பிடிக்கும் நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம் பிடித்திருக்கிறது. நார்வே, ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகள் முறையே அடுத் தடுத்த இடங்களில் இருக்கின்றன. இங்கிலாந்து 15-வது இடத்திலும், கனடா 16-வது இடத்திலும், அமெரிக்கா 51-வது இடத்திலும், சீனா 103-வது இடத்திலும், ஜப்பான் 110-வது இடத்திலும், கொரியா 115-வது இடத்திலும், துருக்கி 130-வது இடத்திலும், சவுதி அரேபியா 141-வது இடத்திலும் இருக்கின்றன. ஏமன் கடைசி இடத்தில் இருக்கிறது.

    பல நாடுகளில் பெண்கள் தொழில்துறையில் ஆண்களுக்கு இணையாக உயர் பதவியில் இருக்கிறார்கள். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும் முக்கிய பங்களிப்பு வழங்கி வருகிறார்கள். ஆண் - பெண் தொழிலாளர்களிடையே ஊதியத்தில் இருந்துவந்த முரண்பாடுகளும் ஓரளவு தளர்த்தப்பட்டிருக்கிறது.
    ×