என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Patta சைக்கிள்"

    • மாணவ- மாணவிகளுக்கு ரூ. 3 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை வழங்கினார்.
    • ஏழைகள் இருக்கும் வரை கருணாநிதி கொண்டுவந்த இலவசங்கள் இருக்கும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7381 மாணவ மாணவிகளுக்கு ரூ.3 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மிதி வண்டிகளை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து நாகை சாமந்தான் பேட்டை மீனவ கிராமத்தில், நிரந்தர வீட்டிற்கான பட்டாக்களை அமைச்சர் வழங்கினார்.

    அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், ஏழைகள் இருக்கும் வரை கருணாநிதி கொண்டுவந்த இலவசங்கள் இருக்கும்.

    அவர் கொண்டுவந்த இலவச கல்வியில் படித்துதான் நான் தற்போது அமைச்சராக இருக்கிறேன் என்றார்.

    நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் ஷாநவாஸ், நாகை மாலி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×