என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அதிபத்தநாயனார் சிவபெருமானுக்கு தங்கமீன் படைக்கும் விழா
- தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை சிவவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து வந்தனர்.
- படகு மூலம் நடு கடலுக்கு சென்ற சிவ பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை கடலில் விட்டு பிடித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார்நகர் மீனவ குலத்தில் பிறந்த அதிபத்த நாயனார் சிவபெருமானிடம் பக்தி கொண்டு தான் பிடிக்கும் மீனை தினமும் சுவாமிக்காக கடலில் விடுவது வழக்கம்.
இவரது பக்தியை சோதித்த சிவபெருமான் இவரது வலையில் தங்கமீன் ஒன்றை கிடைக்கும்படி செய்தார்.
அதிபத்தநாயனார் அம்மீனையும் சிவபெருமானுக்காக வேண்டிக்கொண்டு கடலில் விட்டார்.
அதிபத்தநாயனாரின் பக்தியை மெச்சிக்கும் விழா நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நடைபெறுவது வழக்கம்.
தங்க மீன் படைக்கும் விழா நாகப்பட்டினம் நம்பியார் நகர் கடற்கரையில் நடைபெற்றது.
நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை சிவவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து படகு மூலம் நடு கடலுக்கு சென்ற சிவ பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை கடலில் விட்டு பிடித்தனர்.
மீன்களுடன் கரை திரும்பிய சிவனடியார்கள் கடற்கரையில் எழுந்தருளிய சிவபெருமானுக்கு அதிபத்தநாயனார் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை வைத்து படையல் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்