என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • இந்த திருவிழா செப்டம்பர் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.
    • திருவிழா நாட்களில் பக்தர்கள் கடலில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆண்டு திருவிழா பக்தர்கள் இன்றி எளியமுறையில் நடந்தது.

    இந்த ஆண்டு வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 5.45 மணிக்கு கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு வழியாக கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்து 6.40 மணிக்கு கொடியேற்றி வைத்தார். அப்போது பேராலயம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது.

    அதனைத்தொடர்ந்து வாணவேடிக்கைகள் நடந்தது. பக்கதர்கள் பலூன்களை பறக்கவிட்டு மகிழ்ந்தனர். பின்னர் பேராலய கலையரங்கில் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் மாதா மன்றாட்டு நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    விழாவில் வேளாங்கண்ணி மாதா பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ், மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், அரசு அலுவலர்கள் உள்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந் தேதி(புதன்கிழமை) நடக்கிறது. 8-ந்தேதி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். இதனால் வேளாங்கண்ணியில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே தென்பட்டது.

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவிழா நாட்களில் பக்தர்கள் கடலில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் பக்தர்கள் கடலில் குளிப்பதை தடு்க்க கடற்கரையில் மரக்கட்டைகளால் தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆம்புலன்சுக்குண்டான ஆவணங்கள் மற்றும் சாவியை மருத்துவமனையின் இயக்குனர் மரான்சிஸ்காளிடம் வழங்கினார்.
    • கலெக்டர் அருண் தம்புராஜ் ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    கீழையூர் ஒன்றியம் காமேஸ்வ ரத்தில் இயங்கி வரும் கோவாச் ஆஸ்பத்திரிக்கு சேவ்திசில்ரன்ஸ்அமைப்பு மூலம் இலவச ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர்அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.

    அப்போது ஆம்புலன்சுக்கு உண்டான ஆவணங்கள் மற்றும் சாவியை மருத்துவ மனையின் இயக்குனர் மரான்சிஸ்காளிடம் வழங்கினார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் பச்சைக்கொடி கான்பித்து ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

    இதில் நாகை சுகாதார பணிகள் இணை இயக்குநர் ஜோஸ்பின்ஆமுதா, திருப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த்குமார், கீழையூர் ஒன்றியக்குழுத்தலைவர் செல்வராணி ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா இளம்பரிதி, கீழையூர் ஒன்றிய குழு துணை தலைவர் சவுரிராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா கணேசன் மற்றும் மலர் கலந்துகொண்டனர்.

    • தரைப்பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிந்தது.
    • பாலம் அமைக்கப்பட்ட இடத்தில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பு கலூரில் நாகை-நன்னிலம் நெடுஞ்சாலையின் குறுக்கே தோட்டக்குடி பாசன வாய்க்கால் அமைந்துள்ளது.

    இந்த பாசன வாய்க்கால் மூலம் தாமரைக்குளம், பூவாளி தெரு, பட்டக்கால் தெரு உள்ளிட்ட 3 கிராமங்களுக்கு உட்பட்ட சுமார் 250 ஏக்கர் விளைநிலங்களுக்கு முக்கிய பாசன வாய்க்காலாக தோட்டக்குடி வாய்க்கால் உள்ளது.

    இந்த வாய்க்காலில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் ஒன்று இருந்தது.

    கடந்த சில ஆண்டுக்கு முன்னர் தரைப்பாலத்தில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் தரைப்பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிந்தது.

    இந்த நிலையில் முடிகொண்டான் ஆற்றில் காவிரி பாசன நீர் வந்து சேர்ந்துள்ளது.

    இந்த பாசன நீர் தோட்டக்குடி வாய்க்கால் வழியாக விளை நிலங்களில் உட்புகாமல் மண்ணை வைத்து அடைக்கப்பட்டுள்ளது.

    இதனால் மேற்கண்ட கிராம பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் குருவைப் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் சேதம் அடையும் அபாய நிலையில் உள்ளது.

    மேலும் பாலம் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது.

    இந்த குடிநீர் நாகூர், நாகப்ப ட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதும க்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாலம் அமைக்கப்பட்ட இடத்தில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் அதிக அளவில் வெளியேறி முடிகொண்டானாற்றில் கலந்து வீணாகிறது.

    இந்த குடிநீர் குழாய் உடைப்புகள் சரி செய்யப்படாமல் உள்ளது.

    கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதா ரண்யம் உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

    இது குறித்து சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரி செய்து தோட்டக்குடி வாய்க்கால் பாசன பெரும் விவசாய பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து எதிர்பார்த்துள்ளனர்.

    • 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
    • இந்த விநாயகர் சிலை 4 டன் எடை கொண்டது.

    விஸ்வரூப விநாயகர் குழு சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து 32 அடி உயரத்தில் விநாயகர் சிலை ஊர்வலமாக நாகூர் வெட்டாற்று பாலம் வரை எடுத்து செல்லப்படும்.

    இந்த நிலையில் விஸ்வரூப விநாயகர் குழுவினர் முயற்சியால் முழுவதும் அத்திமரத்தால் செய்த 32 அடி உயர விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டது.

    இந்த விநாயகர் சிலை நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. நீல தெற்கு, வடக்கு என 4 வீதிகளின் வழியாக விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்டது. தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் வருவாய்த்துறையினர், நாகை நகரபோலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து நாகை விஸ்வரூப விநாயகர் குழுவினர் கூறியதாவது:- பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தின் மூலம் புதிய முயற்சியாக அத்தி மரத்திலேயே விநாயகர் சிலை வடிவமைக்க முடிவு செய்தோம்.

    இதற்காக டெல்டா மாவட்டங்களில் இருந்து 83 அத்தி மரங்கள் சேகரித்தோம். இந்த மரங்களில் 32 அடி உயரம் 18 அடி அகலத்தில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலை 4 டன் எடை கொண்டது. விநாயகர் சிலையை விழா காலங்களில் ஊர்வலமாக எடுத்து செல்ல திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து 8 டன் எடை கொண் தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை திருவாரூர் மாவட்டம் ஆண்டிபந்தல் பகுதியை சேர்ந்த ஸ்தபதி திருநாவுக்கரசு என்பவர் செய்து கொடுத்தார்.

    வெள்ளோட்டத்திற்கு பின்னர் விநாயகர் சிலை கோவில் அருகே பாதுகாப்பாக வைக்கப்படும். இதை தொடர்ந்து வருகிற 31-ந் தேதி(புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி தினத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.இதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக நாகூர் வெட்டாற்று பாலம் வரை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் என்றனர்.

    • இந்தவிழா செப்டம்பர் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் 'லூர்து' நகர் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை இந்த பேராலயம் பெற்று விளங்குகிறது. இந்த ஆலயம் எதிரே வங்கக்கடல் அமைந்திருப்பது மேலும் சிறப்பு.

    மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இன்று மாலை 5.45 மணிக்கு கொடி கடற்கரை சாலை ஆரியநாட்டு தெரு வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

    பின்னர் கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்து கொடியேற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    விழா நாட்களில் தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது. 8-ந்தேதி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி மாதா பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக மக்கள் இன்றி வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் கலந்து கொள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவிழாவிற்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மேற்பார்வையில் 16 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 110 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார்களும், இது தவிர 5 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 200 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    27 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், 4 டிரோன் மூலமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. சுகாதார துறையின் மூலம் 10 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவப்பணியில் 25 டாக்டர்கள், 87 சுகாதார ஆய்வாளர்கள், 71 செவிலியர்கள் உள்ளிட்ட 158 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் திருவிழா காலங்களில் தினமும் 250 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. திருவிழாவையொட்டி எந்தவித அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் தீயணைப்பு வீரர்கள் 12 இடங்களில் தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். விழாவிற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்க ண்ணிக்கு பாதயாத்தி ரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
    • 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவி ழாவாக கொண்டா டப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா நாளை 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்தவிழா அடுத்த மாதம் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    நாளை மாலை 5.45 மணிக்கு கொடி கடற்கரை சாலை ஆரியநாட்டு தெரு வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

    பின்னர் கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்து கொடியேற்றி வைக்கிறார்.

    இதை தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    விழா நாட்களில் தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது. 8-ந்தேதி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி மாதா பேராலயம் மின்விள க்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்தி ரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சியும், பேராலய நிர்வாகமும் இணைந்து செய்து வருகிறது.

    விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மாணவர்கள் இப்பதவிக்கான போட்டித் தேர்வு க்கு விண்ணப்பிக்க தகுதி யற்றவர்களாக ஆகியுள்ளார்கள்.
    • தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு அறிவிப்பாணைகளை வெளியிட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன், எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 29.7.22 அன்று அறிவித்த விளம்பர எண்.622, அறிவிப்பு எண்.18/2022-ன் படி, தமிழ்நாடு அரசுத் துறைகளில் 1089 சர்வேயர் பணியிடங்களுக்கான விளம்பரம் வெளியி டப்பட்டது.அந்த விளம்பரத்தில் கல்வித் தகுதியாக, இந்திய அரசின் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழை பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வா ணையம் அறிவிப்பு வெளியிட்டு ள்ளது.

    அந்த அறிவிப்பால், தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் இப்பதவி க்கான போட்டித் தேர்வு க்கு விண்ணப்பிக்க தகுதி யற்றவர்களாக ஆகியுள்ளா ர்கள்.

    தமிழ் நாட்டிலேயே படித்து, அரசின் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழை பெற்றிருக்கின்ற தமிழக இளைஞர்களை, மேற்கண்ட வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாக ஆக்கியுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த அறிவிக்கை.

    எனவே, சர்வேயர் பணியிட ங்களுக்காக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பி ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்கும் கால அளவை நீட்டிப்பு செய்தும் தமிழக அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயின்று சான்றிதழ் பெற்ற அனைத்து தமிழக மாணவர்களையும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களாக திருத்தம் செய்தும், புதிய அறிவிப்பினை வெளியிடுவதற்கு தி.மு.க அரசு உரிய ஆலோசனையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு வழங்க வேண்டும்.

    லட்சக்கணக்கான தமிழக மாணவர்கள் வேலைக்காக ஏங்கித் தவிக்கின்ற இன்றைய காலச் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இனிவரும் காலங்களில் நடத்துகின்ற தேர்வுகளை மிகுந்த கவனத்தோடு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு அறிவிப்பாணைகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தூய்மை பணியில் சிறப்பாக ஈடுபட்ட நகராட்சி பணியாளர்கள் வர்த்தகர்கள் சேவை சங்கங்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
    • விழிப்புணர்வு பேரணியில் போதை எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில்ராஜாஜி பூங்காவில் தூய்மை பணிக்கான சான்று வழங்கும் விழா நடைபெற்றது

    விழாவிற்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்து தூய்மை பணியில் சிறப்பாக ஈடுபட்ட நகராட்சி பணியாளர்கள் வர்த்தகர்கள் சேவை சங்கங்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார் நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா பொறியாளர் முகமது இப்ராகிம் துணைத் தலைவர் மங்களநாயகிநகர மன்ற உறுப்பினர்கள் உமா, நடராஜன், மயில்வாகனம் ,அனிஸ்பாத்திமா.பிரியும் அறக்கட்டளை பிரபு வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன் ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில் தொழிலதிபர் ஆறுமுகம்மற்றும் நகராட்சி பணியாளர்கள் குருகுலம் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

    நிகழ்ச்சியில் வேதாரண்ய த்தை சேர்ந்த தேவி பாலுவின் மகள் எழிலரசி குளத்தில் விழுந்த இரு சிறுவர்களை காப்பாற்றியதற்காக தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற்றுள்ளார். இவருக்கு நகராட்சியின் சார்பில் நகர மன்ற தலைவர் புகழேந்தி சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

    நிகழ்ச்சி முடிவில் என் குப்பை என் பொறுப்பு என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் பின்பு ராஜாஜி பூங்காவில் இருந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி புறப்பட்டு மேல வீதி வடக்கு வீதி வழியாக நகராட்சி சென்றடைந்தது விழிப்புணர்வு பேரணியில் போதை எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    • வேதாரண்யத்தில் வேளாண் பொறியியல் துறையின் அலுவலகம் தொடங்கி அந்த துறை சார்ந்த நலத் திட்டங்கள் கிடைத்திட வேண்டும்.
    • புகையிலைக்கான மாற்றுப் பயிர் சாகுபடிக்கு வழிகாட்ட வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வருவாய்க் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம் நடந்தது.

    வேதாரண்யம் வட்டா ட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு கோட்டாட்சியர் ஜெய ராஜ பெளலின் தலைமை வகித்தர். வட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் பெரும்பா லான விவசாயிகள் முள்ளியாறு, மானங்கொ ண்டானாறு, போக்கு வாய்க்கால் நீர் நிலைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள வெங்காயத் தாமரைச் செடிகளை காலத்தில் அகற்ற வலியுறுத்தினர்.

    வேதாரண்யத்தில் வேளாண் பொறியியல் துறையின் அலுவலகம் தொடங்கி அந்த துறை சார்ந்த நலத் திட்டங்கள் கிடைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மின் இறைவைப் பாசனத் திட்டம், நீர் நிலைகள் பராமரிப்பு குறித்தும் விவசாயிகள் பேசினர்.விவசாயி காளிதாசன் கூறுகையில் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டவர்களுக்கும் குறுவை தொகுப்பு முழுமையாகக் கிடைக்கவில்லை.

    நெல் அறுவடைக் காலத்தில் அறுவடை எந்திரத்துக்கான வாடகையை அதிகமாக பெறுவதை தடுக்க காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஒளிச்சத்திரன்: எள் சாகுபடிக்கான இழப்பீடு இதுவரை கிடைக்கவில்லை. புகையிலைக்கான மாற்றுப் பயிர் சாகுபடிக்கு வழிகாட்ட வேண்டும்.

    பாலகிருஷ்ணன்: காந்திநகர் பகுதியில் மழைக்காலத்தில் வெள்ளம் தேங்குவதை தடுக்க வேண்டும்.குழந்தைவேலு: திருத்துறைப்பூண்டி - வாய்மேடு, தென்னடார், ஆயக்காரன்புலம், ஆதனூர் - வேதாரண்யம் வழித் தடத்தில் அரசு பேருந்து இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.கூட்டத்தில், மேகநாதன், காளிதாஸ், அகிலன், ஒளிச்சந்திரன், சிவஞானம் உள்ளிட்டோர் பேசினர்.

    • மலேசியாவில் சம்பாதித்த பணம் ரூ2.40 லட்சத்தை கரியாபட்டினத்தில் உள்ள அரசு வங்கியில் டெபாசிட் செய்ய வந்துள்ளார்.
    • வங்கில் இருந்து பணத்துடன் செல்வதை 2 பைக்கில் வந்த 4 பேர் தெரிந்து கொண்டு பின் தொடர்ந்து வந்து வாசலில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா மணக்காட்டை சேர்ந்தவர் நடேசன் (38).

    இவர் மலேசியா நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிவந்து உள்ளார்.

    மலேசியாவில் சம்பாதித்த பணம் ரூ2.40 லட்சத்தை கரியாபட்டினத்தில் உள்ள அரசு வங்கியில் டெபாசிட் செய்ய வந்துள்ளார்.

    வங்கியில் நடேசன் கணக்கு செயல்பாடு இல்லாமல் இருந்த காரணத்தால் பணத்தை டெபாசிட் செய்ய முடியாமல் வீட்டிற்கு திரும்பிவந்து வீட்டு வாசலில் பையுடன் பணத்தை வைத்து விட்டு அருகில் வீடு கட்டும் பணியை பார்க்க சென்று உள்ளார்.

    நடேசன் வங்கில் இருந்து பணத்துடன் செல்வதை 2 பைக்கில் வந்த 4 பேர் தெரிந்து கொண்டு பின் தொடர்ந்து வந்து வாசலில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளனர் இது குறித்து நடேசன் கரியாபட்டினம் போலீசில் புகார் செய்துள்ளார்.

    புகாரின் பேரில் போலீசார் அருகில் உள்ள சி.சி.டி கேமராக்களை வைத்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் சென்றவாரம் இந்த வங்கியில் இதே பாணியில் ரூபாய் 20 ஆயிரம் கொள்ளைபோன சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடதக்கது.

    மேலும் வேதாரண்யம் சரக பகுதியில் கள்ளி மேடு, தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து வங்கியில் பணம் எடுப்பவர்களை குறிவைத்து பணம் கொள்ளையடி க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    • மாநாட்டில் மின்சார திருத்த சட்ட மசோதா ஒன்றிய அரசு தாக்கல் செய்ததற்கு கண்டனம்.
    • தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விவசாய நிலங்களில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    ஒன்றிய அரசைகண்டித்து 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்கும் 30 ஆவது மாநில மாநாடு ; செப்டம்பர் 17,18,19 ஆகிய 3 தினங்கள் நாகையில் நடைபெற உள்ளதாக தமிழ்நாடுவிவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.

    நாகை மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில மாநாட்டின் லோகோவை நாகை மாலி எம்.எல்.ஏ வெளியிட விவசாய சங்க தலைவர்கள் பெற்று க்கொண்டனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொது ச்செயலாளர் சண்முகம் கூறுகையில் ;

    ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் 30வது மாநில மாநாடு செப்டம்பர் 17,18,19 ஆகிய 3 தினங்கள் நாகையில் நடைபெறுகிறது.

    மாநிலம் முழுவதுமுள்ள 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

    கேரளா மாநில நிதித்துறை அமைச்சர் பால கோபால் மற்றும் விவசாய சங்க தலைவர்கள், தொழிற் சங்கங்கள்பங்கேற்க உள்ளனர்.

    மாநாட்டில் மின்சார திருத்த சட்ட மசோதா ஒன்றிய அரசு தாக்கல் செய்ததற்கு கண்டனம், மின்சார திருத்த சட்டம் வந்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டங்கள் நிறுத்தப்படும், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அறிவித்தார்கள்.

    குறிப்பாக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாய் மற்றும் கரும்புக்கு டன்னுக்கு 4000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விவசாய நிலங்களில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது.

    அதனை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும். ஊஎனவே இறால் பண்ணை களை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    ×