search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் குறைதீர் கூட்டம்
    X

    குறைதீர்நாள் கூட்டம்.

    விவசாயிகள் குறைதீர் கூட்டம்

    • வேதாரண்யத்தில் வேளாண் பொறியியல் துறையின் அலுவலகம் தொடங்கி அந்த துறை சார்ந்த நலத் திட்டங்கள் கிடைத்திட வேண்டும்.
    • புகையிலைக்கான மாற்றுப் பயிர் சாகுபடிக்கு வழிகாட்ட வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வருவாய்க் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம் நடந்தது.

    வேதாரண்யம் வட்டா ட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு கோட்டாட்சியர் ஜெய ராஜ பெளலின் தலைமை வகித்தர். வட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் பெரும்பா லான விவசாயிகள் முள்ளியாறு, மானங்கொ ண்டானாறு, போக்கு வாய்க்கால் நீர் நிலைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள வெங்காயத் தாமரைச் செடிகளை காலத்தில் அகற்ற வலியுறுத்தினர்.

    வேதாரண்யத்தில் வேளாண் பொறியியல் துறையின் அலுவலகம் தொடங்கி அந்த துறை சார்ந்த நலத் திட்டங்கள் கிடைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மின் இறைவைப் பாசனத் திட்டம், நீர் நிலைகள் பராமரிப்பு குறித்தும் விவசாயிகள் பேசினர்.விவசாயி காளிதாசன் கூறுகையில் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டவர்களுக்கும் குறுவை தொகுப்பு முழுமையாகக் கிடைக்கவில்லை.

    நெல் அறுவடைக் காலத்தில் அறுவடை எந்திரத்துக்கான வாடகையை அதிகமாக பெறுவதை தடுக்க காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஒளிச்சத்திரன்: எள் சாகுபடிக்கான இழப்பீடு இதுவரை கிடைக்கவில்லை. புகையிலைக்கான மாற்றுப் பயிர் சாகுபடிக்கு வழிகாட்ட வேண்டும்.

    பாலகிருஷ்ணன்: காந்திநகர் பகுதியில் மழைக்காலத்தில் வெள்ளம் தேங்குவதை தடுக்க வேண்டும்.குழந்தைவேலு: திருத்துறைப்பூண்டி - வாய்மேடு, தென்னடார், ஆயக்காரன்புலம், ஆதனூர் - வேதாரண்யம் வழித் தடத்தில் அரசு பேருந்து இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.கூட்டத்தில், மேகநாதன், காளிதாஸ், அகிலன், ஒளிச்சந்திரன், சிவஞானம் உள்ளிட்டோர் பேசினர்.

    Next Story
    ×